Saturday, June 28, 2008

இஸ்லாம் விவாதங்களில் கலந்து கொள்ளுமுன் கவனிக்கவேண்டியவை

குர்-ஆன் சம்மந்தப்பட்ட இப்படிப்பட்ட கேள்வி-பதில் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்பவர்களுக்காக சில செய்திகள்.

1. இக்கூட்டங்கள் முஸ்லீம்களால் நடத்தப்படுவதால், பெரும்பான்மையாக 90% அதற்கு அதிகமாக இஸ்லாமியர்களே அரங்கத்தை நிரப்பியிருப்பார்கள்.

2. மற்ற மத நண்பர்களோ, சொற்ப எண்ணிக்கையில் இருப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.

3. ஏற்கனவே, நாம் "இஸ்லாமியர் அல்லாதவரோடு விவாதிப்பது எப்படி" என்ற கட்டுரையில் பார்த்தது போல, எந்த கேள்வி கேட்டாலும், அதற்கு தயாராக ஒரு பதில் வைத்து இருப்பார்கள்.

இந்த கட்டுரையை ஒரு முறையாவது படிப்பது நல்லது. அதை இங்கு படிக்கலாம். http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=179

4. எக்காரணத்தைக் கொண்டும் கேட்கும் கேள்வியில், முகமதுவையும், குர்-ஆனையும், இஸ்லாமையும் அவமானப்படுத்துவது போல் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.

உதாரணத்திற்கு:

"ஏன் முகமது இத்தனை பொண்டாட்டி கட்டிக்கொண்டார், இது பாவம் இல்லையா, இது சரியா? இவர் தீர்க்கதரிசியா?" என்ற கேள்வி இஸ்லாமியர்களை கோபப்படுத்தும்.

அதற்கு பதிலாக இப்படி கேட்கலாம்: "குர்-ஆன் படி ஒரு முஸ்லீம் 4 மனைவிகளை திருமணம் செய்துக்கொள்ளும் படி அனுமதியை அல்லா கொடுக்கும் போது, முகமது மட்டும் ஏன் 10 க்கும் அதிகமாக திருமணங்களைச் செய்தார்?" என்று கேட்கலாம்.

5. ஒரு வேளை கேட்கிறவர் கிறிஸ்தவராக இருந்துவிட்டால், கேட்கும் கேள்விக்கு பாதி பதில் சொல்லிவிட்டு, உடனே பைபிளில் கூட இப்படி உள்ளது(தாவிதுக்கும், சாலொமோனுக்கும் அனேக மனைவிகள் இருந்தார்கள் இல்லையா, அது தவறில்லையா என்று கேட்டு) என்று பதிலை திசை திருப்பிவிடுவார்கள்.

6. ஒருவருக்கு ஒரு கேள்வி கேட்க மட்டும் அனுமதி கொடுப்பதால், நம்மால் பல குறுக்கு கேள்வி கேட்டு உண்மையை அந்த அரங்கத்தில், சொற்ப நேரத்தில் உலகிற்கு தெரியப்படுத்த முடியாது.

7. கேள்வி கேட்டும் நபர்களுக்கு(கிறிஸ்தவருக்கு) தெரிந்து இருக்கவேண்டிய சில விவரங்கள்:

a) முதலில் குர்-ஆனையும், ஹதீஸ்களையும் முழுவதுமாக தெரிந்துக்கொண்டு கேள்வி கேட்பது நல்லது.
b) பைபிள் பற்றி இஸ்லாமியர்கள் முன்வைக்கும் கேள்விகள் என்ன? அவர்கள் பைபிள் பிழை உள்ளது என்று எடுத்துக்காட்டும் வசனங்கள் என்ன? அதற்கு சரியான கிறிஸ்தவ பதில் என்ன? என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்?

c) இவைகளை தெரிந்துக்கொள்ளாமல், அவர்களிடம் கேள்வி கேட்டால், அவர்கள் உடனே பைபிளில் அவர்கள் உள்ளது என்றுச் சொல்லும் ஒரு முரண்பாட்டை எடுத்துச் சொல்லி அதற்கு நம்மிடம் பதில் எதிர்பார்த்தால், நம் நிலைமை என்னவாகும் என்று நினைத்துப்பாருங்கள். மட்டுமல்ல, அது அவர்களுக்கு ஒரு வெற்றியாக மாறிவிடும்.

8. எனவே, என் கருத்து என்னவென்றால், இஸ்லாம் பற்றியும், பைபிள் பற்றியும்( பைபிள் பற்றி அவர்கள் கேட்டும் கேள்விகளுக்கு பதிலைத் தெரிந்துக்கொள்வது) முழுவதும் தெரிந்துக்கொள்ளாமல், கேள்வி கேட்பது, ஆபத்து.(Half Knowledge is Dangerous).

9. ஆகையால், இப்போதைக்கு நமக்கு(நாம் ஒரு சதவிகிதம் கூட இஸ்லாமைப் பற்றி, பைபிளைப்பற்றி(இஸ்லாம் கேட்கும் கேள்விகள் அடிப்படையில்) இன்னும் தெரிந்துக்கொள்ளவில்லை என்பது என் கருத்து) சொற்ப ஞானம் இருப்பதால், கேள்விகள் கேட்காமல் முதலில், இப்படிப்பட்ட ஒன்று அல்லது இரண்டு கூட்டங்களை பார்த்து அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள், என்பதை எல்லாம் கற்றுக்கொண்டு கேள்விகள் கேட்டால், அது கிறிஸ்துவுக்கு மகிமையாக மாறும்.

10. அவர்கள் இக்கூட்டங்களை ஒழுங்கு செய்வது, மதங்களின் மத்தியில் ஒரு ஒற்றுமை ஏற்படும் என்பதற்காக அல்ல, இந்துக்களை அவமானப்படுத்தவே, மற்றும் தங்கள் மதம் தான் உயர்ந்தது என்பதை காட்டவே. இதற்கு சரியாக, இக்கூட்டங்களுக்கு வரும் இந்துக்கள் மிகக்குறைவாக இருப்பார்கள், விரல்களால் எண்ணிவிடலாம்.

( திரு ரவி சங்கர், திரு ஜாகிர் நாயக் கூட்டத்திலும், இப்படித் தான் நடந்தது. ரவி சங்கர், அன்பு பற்றி, ஒற்றுமைப் பற்றிச் சொன்னால், ஜாகிர் நாயக் மட்டம் தட்டிவிட்டார் இவரை. ஜாகிர் நாயக் ரவி சங்கரின் எல்லா புத்தகங்களையும் படித்து வந்தார், ரவி சங்கரோ, வெறும் கையோடு வந்துவிட்டார். மக்கள் கூட்டமும் 95% : 5% என்ற முறையில் இருந்தது. ரவி சங்கருக்கு அதிகமாக கைதட்ட ஒரு நாதியும் இல்லை.)

அப்படி வரும் மாற்று மத அன்பர்கள்(இந்துக்கள், கிறிஸ்தவர்கள்) கேட்கும் கேள்விகள், மிக சுலபமாக பதில் சொல்வது போல கீழ் கண்டது போல் இருக்கும்:

a ) ஏன் புர்கா பெண்கள் அணிகிறார்கள்? இதற்கு பதில் மிக சுலபம், நாட்டில் நடக்கும் கற்பழிப்புக்கள் பட்டியலிட்டு காட்டுவார்கள். நம் பெண்கள், தங்கள் உடலை ஊரில் உள்ள ஆண்களுக்கு காட்டுகிறார்கள் என்று, கேள்வி கேட்பவர் மீது பல்டி அடிப்பார்கள்.

b) ஏன் தாடி வைக்கிறீர்கள்?
c) ஏன் 5 வேளை தொழுகிறீர்கள்?
d) ஏன் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறீர்கள் ?
e) ஏன் மக்காவை நோக்கியே தொழுகிறீர்கள்?

இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் மிக சுலபமாக, அருமையாக, இஸ்லாமுக்கு நல்ல பெயர் வரும்படி சொல்லுவார்கள்.

எனவே, இப்படிப்பட்ட கூட்டத்தில் நீங்கள் பங்கு பெறுவது இது முதல் முறையாக இருந்தால், தயவு செய்து ஒரு கேள்வியும் கேட்க வேண்டாம். அது நமக்கு (கிறிஸ்தவத்திற்கு அவதூறு) கொண்டுவரும். ஆரம்பத்திலிருந்து முடிவு வரை நன்றாக கேட்டு, சில விவரங்களை சேகரித்துக்கொண்டு வாருங்கள், அதனை இத்தளத்தில் விவாதிப்போம், ஆதாரங்கள் சேகரிப்போம், அறிவை பெருக்கிக்கொள்வோம். பிறகு களத்தில் இறங்வோம்.


நாம் எப்போது கேள்வி கேட்கலாம், என்றால், ஒரு கிறிஸ்தவன் தெரியாமல் மாட்டிக்கொள்ளும் போது, இஸ்லாமியர்கள் பைபிளை தாக்கும் பொது, அந்த நேரத்தில் நமக்கு தெரிந்த குர்-ஆன் சம்மந்தப்பட்ட கேள்விகளைக் கேட்பது அதிக உதவியாக இருக்கும். இக்கேள்விகள் அவர்கள் பதில் சொல்லமுடியாததாக இருக்கவேண்டும்.

இருந்தாலும், நான் சில கேள்விகள கேட்ட வேண்டும் என்று எண்ணுகின்றேன் என்று சொல்பவர்களுக்கு, இன்று மாலைக்குள் சில கேள்விகளை விவரமாகத் தருகிறேன்.

சில நேரங்களில் கீழ்கண்ட வசனம் நமக்கு உதவிச் செய்யும்:
நீதிமொழிகள் 17:28 பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்

Source:http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=252

Thursday, June 19, 2008

இஸ்லாமிய இளைஞரின் இறுதிவேளையில் இயேசு

இஸ்லாமிய இளைஞரின் இறுதிவேளையில் இயேசு







Source: http://ca.geocities.com/mistertoronto/nasar.html

இப்போது குரானில் கலப்படம் இல்லை - நான் நீக்கிவிட்டேன் ஜைனுலாபிதீன் அறிக்கை

இப்போது குரானில் கலப்படம் இல்லை - நான் நீக்கிவிட்டேன் ஜைனுலாபிதீன் அறிக்கை

இஸ்லாமியர்கள் இதுநாள் வரை குரானில் எந்த கலப்படமும் இல்லை.குரான் முழுமையாக பாதுகாக்கப்பட்டது.அதை அல்லாவே பாதுகாத்தான் என்றெல்லாம் எல்லாருடைய காதிலும் பூ சுற்றி வந்ததை நாம் அறிவோம்.

தற்பொழுது இந்த புளுக்குக்கு முடிவு வந்து விட்டது.ஆம் தமிழ் நாட்டின் இஸ்லாமிய அறிஞர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் ஏகத்துவம் என்ற பத்திரிக்கையில் ஏப்பரல் மாதம் எழுதியுள்ள கட்டுரையில் குரானில் கலப்படம் இருந்ததாகவும்.அதை நீக்க இவருக்கு அல்லா அருள் புரிந்ததாகவும் சொல்லியுள்ளார்.இது எதோ தமிழ் நாட்டில் மட்டும் உருவான கலப்படம் அல்ல இஸ்லாம் உருவான சவுதி அரேபியாவிலேயே இந்த குரான் கலப்படம் இருந்ததாக அவர் சொல்கிறார்.



ஏகத்துவம் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையின் பகுதி கீழே


கலப்படமின்மை

வணக்கங்களில் பித்அத் கூடாது என்று தத்துவார்த்தமாகச் சொன்ன போது, மக்கள் மிகக் கடுமையாக அதை எதிர்த்தனர். இன்று அதே மக்கள் செயல்பாட்டு அடிப்படையில் பார்க்கும் போது அதை எற்றுச் செயல்படவும் அரம்பிக்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.



இவ்வாறு வணக்கங்களில் கலந்து விட்ட கலப்படங்களைக் களைந்து விட்டோம். அனால் குர்அனில்
உள்ள கலப்படங்களை நாம் இதுவரைக் களையவில்லை. குர்அனில் கலப்படமா? என்று கொதிப்புடனும், ஆச்சரியத்துடனும் நீங்கள் இங்கு கேள்வி எழுப்பலாம். அதற்கான விடை கீழே இடம் பெற்றுள்ளது. தமிழகம் மட்டுமல்ல! சவூதியின் வெளியீடுகளில் கூட இந்தச் சேர்மானங்கள் இடம் பெறத் தவறவில்லை.



இந்தச் சேர்மானங்களைக் களைவதற்கு அல்லாஹ் ஒர் அரிய வாய்ப்பை வழங்கினான். அது தான் இந்தத் தமிழாக்கமாகும்.



1. மன்ஜில்

2. ருகூவுக்கள்

3. ஸஜ்தா அடையாளங்கள்

4. நிறுத்தல் குறியீடுகள்.

5. வேண்டாத அய்வுகள்

6. மக்கீ, மதனீ

7. குர்அனை முடிக்கும் துஆ



மேற்கண்ட இந்தச் சேர்மானங்களை நீக்கி வெளியிட்டிருப்பதன் மூலம் ஆந்த தர்ஜுமா தனிச் சிறப்பைப் பெறுகின்றது. அல்லாஹ்வைப் பயந்து, உலகத்தில் யாருக்கும் பயப்படாமல் ஒரு தூய வடிவைக் கையாண்டதற்காக இது கடுமையான விமர்சனங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.



குர்அன் மொழியாக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்காற்றியதுடன் மட்டுமின்றி, குர்அனில் இருந்த இந்தக் கலப்படங்களை மக்களிடம் அடையாளம் காட்டி, அப்புறப்படுத்தியதும் தவ்ஹீது ஜமாஅத் செய்த சாதனைகளில் ஒன்று என்றால் மிகையாகாது.


ஏகத்துவம் ,ஏப்ரல் 2008:http://www.onlinepj.com/




இந்த கட்டுரையை படித்த உங்களுக்கு கண்டிப்பாக இவகளின் போலி முகங்கள் வெளிப்பட்டிருகும்.


இந்த நிலையில் தமிழ் உலக மக்கள் இந்த போலியான இஸ்லாமிய பிரச்சாரங்களை உதறித்தள்ளுவது மட்டும் அல்ல அவர்களின் பொய்யும், புணை சுருட்டுமான எழுத்துக்களை எல்லோருக்கும் வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டிக்கொள்ளுகிறோம்.

Source : http://thamilislam.blogspot.com/

Wednesday, June 4, 2008

சாத்தான் சக்தியால் முகமது பாதுகாக்கப்பட்டாரா?

சாத்தான் சக்தியால் முகமது பாதுகாக்கப்பட்டாரா?

சரியான் வழியில் செல்லாமல் வழி தவறிச் செல்பவர்களுக்கு மட்டுமே சாத்தானால் தீங்கு விளைவிக்க முடியும் என்று குரான் சொல்கிறது. அல்லாவை சேவிப்பவர்களைக் குறித்த காரியத்தில் சாத்தானுக்கு அவர்கள் மீது எந்த அதிகாரமும் கிடையாது.

நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம் பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின் 'ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்) என்று மலக்குகளிடம் கூறினோம் இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள் அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை. 'நான் உனக்குக் கட்டளையிட்ட போது நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது? என்று அல்லாஹ் கேட்டான் 'நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய் அவரை களிமண்ணால் படைத்தாய் என்று (இப்லீஸ் பதில்) கூறினான். 'இதிலிருந்து நீ இறங்கி விடு நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை ஆதலால் (இங்கிருந்து) நீ வெளியேறு - நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்' என்று அல்லாஹ் கூறினான். '(இறந்தவர்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக என அவன் (இப்லீஸ்) வேண்டினான். (அதற்கு அல்லாஹ்) 'நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய் என்று கூறினான். (அதற்கு இப்லீஸ்) 'நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால் (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன் என்று கூறினான்.'பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும் அவர்கள் பின்னும் அவர்கள் வலப்பக்கத்திலும் அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன் ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய் (என்றும் கூறினான்). அதற்கு இறைவன் 'நீ நிந்திக்கப்பட்டவனாகவும் வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு - அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும் உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன் என்று கூறினான்.(ஸூரா7:11- 18)

வேறொரு இடத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளாது:
'இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன? என்று (இறைவன்) கேட்டான். அதற்கு இப்லீஸ் 'ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை! என்று கூறினான். 'அவ்வாறாயின் நீ இங்கிருந்து வெளியேறிவிடு நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாக இருக்கிறாய். 'மேலும் நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உண்டாவதாக! என்று (இறைவனும்) கூறினான். 'என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக! என்று இப்லீஸ் கூறினான். 'நிச்சயமாக நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவனாவாய் 'குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரும் வரையில் என்று அல்லாஹ் கூறினான். (அதற்கு இப்லீஸ்) 'என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால் நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன். 'அவர்களில் அந்தரங்க - சுத்தியுள்ள (உன்னருள் பெற்ற) உன் நல்லடியார்களைத் தவிர என்று கூறினான். (அதற்கு இறைவன் 'அந்தரங்க சுத்தியுள்ள என் நல்லடியார்களின்) இந்த வழி என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழியாகும். 'நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை - உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர என்று கூறினான். நிச்சயமாக (உன்னைப் பின்பற்றும்) அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.
(ஸூரா.15:32- 44)

வாசிப்பதற்கு மிகவும் சுவராசியமாக இருக்கிறதல்லவா! பாருங்கள்.அல்லா சாத்தானின் ஆலோசனைகளுக்கு செவிகொடுப்பது மட்டுமல்ல அவனின் திட்டங்களையும் பின்பற்றுகிறான். மனிதர்களை அழிவுக்குள்ளாக்கும் நோக்கத்துடன் சாத்தான் அல்லாவிடம் கால அவகாசம்(தாமதம்) கேட்கிறான். அல்லா அவனுடையவேண்டுகோளுக்கு செவிகொடுக்கிறான். ஒன்று அல்லா சாத்தானின் அழிவுக்கேதுவான அந்த திட்டத்தை அறிந்திருந்து மனிதர்களை வழிவிலகட்டும் என்று விட்டிருக்கவேண்டும் அல்லது அல்லா அதைக் குறித்து அறியாமல் அறியாமையால் அதற்கு அனுமதித்திருக்க வேண்டும்.

(மேற்கண்ட இரு குரான் பகுதிகளிலும் பெரும் முரண்பாடுகள் இருப்பதைக் கவனியுங்கள். அல்லவும் இப்லீஸும் பயன்படுத்திய அதே வார்த்தைகளை குரானின் ஆசிரியர் பயன்படுத்தவில்லை என்பது போல தோன்றுகிறது)

ஆனால் அல்லாவை பின்பற்றுபவர்கள் எல்லாரும் முக்கியமாக எல்லா தீர்க்கதரிசிகளும் பாதுகாக்கப் பட்டிருக்கிறார்கள் என்று அல்லா சொவதினால், இவையெல்லாம் முக்கியமான காரியங்களால்ல. பாதுகாப்பைக் குறித்த வாக்கு குரானில் பலமுறை திரும்ப திரும்ப கூறப்பட்டுள்ளது:

ஈமான் கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் நீங்கள் நேர்வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் அனைவரும் மீள வேண்டியிருக்கின்றது நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றையெல்லாம், அப்போது அவன் உங்களுக்கு உணர்த்துவான். (ஸூரா:5:105)

மேலும் (நபியே!) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) வெருட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடிக்கொள்வீராக. எவர்கள் ஈமான் கொண்டு தன் இறைவனை முற்றிலும் சார்ந்திருக்கிறார்களோ அவர்கள் மீது நிச்சயமாக (ஷைத்தானுக்கு) எவ்வித அதிகாரமுமில்லை. திடனாக அவனுடைய அதிகாரமெல்லாம், அவனைக் காரியகர்த்தனாக்கிக் கொள்கிறவர்கள் மீதும், அவனுக்கு இணைவைத்தார்களே அவர்கள் மீதும்தான் (செல்லும்). (ஸூரா.16:98- 100)

'தான் பொருந்திக் கொண்ட தூதருக்குத் தவிர - எனவே அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் பாதுகாவலர்க(ளான மலக்குக)ளை நிச்சயமாக நடத்தாட்டுகிறான். 'தங்களுடைய இறைவனின் தூதுச் செய்திகளை, திட்டமாக எடுத்துச் சொல்லிவிட்டார்களா? என்று அறிவதற்காக - இன்னும் அவர்களிடமுள்ளவற்றை அவன் சூழ்ந்தறிந்து கொண்டிருப்பதுடன், அவன் சகல பொருளையும் எண்ணிக்கையால் மட்டுப்படுத்தி இருக்கிறான்.'(ஸூரா.72:27,28)

சாத்தானிடமிருந்து தன்னை பின்பற்றுபவர்களை காப்பாற்றுவதோடு சேர்த்து, முகமது மனிதர்களிடமிருந்து பாதுகாக்கப்படுவார் என்றும் உறுதிகூறப்பட்டிருக்கிறது.

தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்¢ (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர்¢ அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்¢ நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். (ஸூரா.5:67)

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் மேற்கோள்களின் நோக்கம் வாசிப்பவர்களூகுஎளிதில் புரியும் விதத்தில் இருக்கவேண்டும். முகமது அல்லாவுக்கு பிரியமானவராகவும் அவருடைய பாதுகாப்பின் கீழக இருப்பவராகவும் இருந்தால், அவரால் சாத்தானின் ஆளுகையின் கீழ் வரமுடியாது, சாத்தானின் தந்திர முயற்சிகளால் அவர் தீங்கிழைக்கப்படவும் முடியாது. மேலும் இப்படிப் பட்ட ஒரு பாதுகாப்பு இருக்கிற படியால் முகமதுவை ஒரு யூதனோ அல்லது கிறிஸ்தவனோ அல்லது வேற்று மதத்தானோ முகமதுவை ஒன்றும் செய்ய முடியாது.

எனினும் மேலே கூறப்பட்டிருப்பவற்றிற்கு முரணாக இருப்பது என்னவெனில் முகமது பேசிய சாத்தானின் வசனங்கள் என்று அறியப்பட்டிருக்கிறவையே. முஸ்லீம் குறிப்புகளின்படி,அல்லாவிடமிருந்து வராதவிகளான மூன்று பெண் கடவுள்கள் அல்லது அல்லது அல்லாவின் மகள்களை போற்றூம் வசனங்களை எழுதும்படி சாத்தான் முகமதுவை நடத்தினான். இது குறித்து அதிகப்படியான தகவல்களைப் பெற கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லின்க்குகளில் சென்று பாருங்கள்:

http://answering-islam.org/Hahn/satanicverses.htm
http://answering-islam.org/Responses/Saifullah/sverses.htm
http://answering-islam.org/Gilchrist/Vol1/3c.html
http://answering-islam.org/Responses/Saifullah/sverses_eh.htm
http://answering-islam.org/Shamoun/satanic_verses.htm

சாத்தானிடமிருந்து வந்த வார்த்தைகளைக் கூறின முகமதுவை காப்பாற்றுவதற்Kஆகவும், அபாயம் விளைவிக்கும் அந்த நிகழ்விலிருந்து அவரை தப்புவிக்கவும் குரான் கீழ்கண்ட வார்த்தைகளைக் குறிப்பிடுகிறது:
(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை¢ எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் - மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்(ஸூஆ.22:52).

இந்தப் பகுதி முகமதுவின் (அதற்கு முந்தைய தீர்க்கதரிசிகளின் ) செய்தியில் சாத்தான் குறுக்கிட்டு பாதித்தான் என்று தெளிவாக ஒப்புக்கொள்கிறது. அந்த முரண்களை அல்லா தீர்த்துவைக்காமலவற்றை ஒழித்துவிடுகிறார் என்பது வாதமாக இருக்கிறது.

மேலும் முகமது அவர்கள் மந்திரவாதத்தின் தாக்கத்தில் இருந்ததாக என்று ஹதீஸ்கள் கூறுகிறது. குரானின் கூற்றுப்படி அது சாத்தானின் கைவேலையாகவே இருக்க வேண்டும்:

Narrated Aisha:
Magic was worked on Allah's Apostle so that he used to think that he had sexual relations with his wives while he actually had not (Sufyan said: That is the hardest kind of magic as it has such an effect). Then one day he said, "O ‘Aisha do you know that Allah has instructed me concerning the matter I asked Him about? Two men came to me and one of them sat near my head and the other sat near my feet. The one near my head asked the other, ‘What is wrong with this man?’ The latter replied he is under the effect of magic. The first one asked, ‘Who has worked magic on him?’ The other replied, ‘Labid bin Al-A’sam, a man from Bani Zuraiq who was an ally of the Jews and was a hypocrite.’ The first one asked, ‘What material did he use?’ The other replied, ‘A comb and the hair stuck to it.’ The first one asked, ‘Where (is that)?’ The other replied, ‘In a skin of pollen of a male date palm tree kept under a stone in the well of Dharwan.’" So the Prophet went to that well and took out those things and said, "That was the well which was shown to me (in a dream). Its water looked like the infusion of Henna leaves and its date-palm trees looked like the heads of devils." The Prophet added, "Then that thing was taken out." I said (to the Prophet) "Why do you not treat yourself with Nashra?" He said, "Allah has cured me; I dislike to let evil spread among my people." (Sahih al-Bukhari, Volume 7, Book 71, Number 660: http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/071.sbt.html#007.071.660)

அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்¢ ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்¢ ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்¢ அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்¢ இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் 'நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்' என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை¢ அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது¢ தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?(ஸூரா.2:102).

முகமதுவின் மந்திரவாதம் குறித்து அதிக தகவல்களைப் பெற கீழ்கண்ட தளத்தில் சென்று பாருங்கள்:
http://answering-islam.org/Responses/Menj/bewitched1.htm
http://answering-islam.org/Responses/Menj/bewitchment.htm

இதுவரை நாம் கண்டவை இரு முடிவுகளில் நம்மை கொண்டுவந்து விடுகிறது:
1. ஒன்று முகமது அல்லாவுக்கு பிரியமானவராக இல்லாமல் அவரைப் பின்பற்றாதவராக இருந்து, சாத்தான் தன்னை ஆளுகை செய்ய அனுமத்தித்து அவன் இஷ்டப்படி இருந்திருக்கவேண்டும்.

2.அல்லது அல்லா தாம் சொன்னபடி முகமதுவை காப்பாற்ற தவறீயிருக்கவேண்டும். அப்படியானால் அல்லா நம்பத்தக்கவரல்ல, தாம் சொன்னதை செய்ய இயலாதவர் ஆவார்.