Thursday, May 6, 2010

யோசிப்பாயா?

முன்னூற்று அறுபத்தைந்து கடவுளர்கள்
முகமதுவின் முழுமுயற்சியால்
அல்லாவுக்காக இல்லாமல் போய்விட
எல்லாம் வல்ல இறைவன் பெயரால்
எல்லோரையும் ஏகமாய்
இஸ்லாமை ஏற்றுக்கொள் - இல்லையேல்
மரணத்தை பெற்றுக் கொள்
என்ற சண்டைபோடும் சகோதரா
உன் மண்டையினுள் உண்மை இருந்தால்
அண்டை வீட்டு அன்பனை
குண்டை போட்டு துன்பம் கொடுத்து
குடும்பங்களை சிதைத்து - அவர்தம்
வாழ்க்கையை வதைத்து
வன்முறை வளர்க்கும் உன்
செய்முறையால் யாருக்கு என்ன லாபம்?
உனக்கு வேண்டுமானால் சொர்க்க சல்லாபம்
சொல்லப்பட்டிருக்கலாம்
உன் சொர்க்கத்துக்காக மற்றவர்களுக்கு நரகம் எதற்கு?
யோசிப்பாயா?
நேசித்துப் பார்த்தால்
நேயம் நன்னயமாய் விளங்குமே!