Saturday, December 18, 2010

ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்?

பைபிள் குறிப்பிடும் தேவனுக்கும் குர்‍ஆன் கூறும் அல்லாவுக்கும் இய‌ல்பு ம‌ற்றும் பண்பில் காணப்படும் அடிப்படை வேறுபாடு என்ன‌?

பைபிளில் நம்மோடு நெருங்கிய உறவு வைத்துக் கொள்ளும் பொருட்டு தேவன் த‌ம் நிலையிலிருந்து இறங்கி வந்து நம்மருகே நெருங்கி நம்மைத் தேடுகிறார். பைபிள் முழுவதுமே தேவன் மனிதனைத் தொடரும் வரலாறுதான்.

படைப்பு மற்றும் மனித குலத்தின் வீழ்ச்சி பற்றிய பைபிளின் முதலாவது அத்தியாயத்தில், ஆதாமும் ஏவாளும் தங்களின் கீழ்படியாமை மற்றும் பாவத்தின் நிமித்தம் தங்களது மனசாட்சியின் உறுத்தலினால் தேவனிடமிருந்து ஒளிந்து கொள்ள முயல்கிறார்கள் என வாசிக்கிறோம். தேவன் அத்தோட்டதிற்கு வந்து, "நீ எங்கே இருக்கிறாய்?" எனக் கூப்பிடுகிறார் (ஆதியாகமம் 3:9).

ம‌னித‌ன் தான் செய்த‌ பாவ‌த்தின் பொருட்டு வெட்க‌ப்ப‌ட்டு தேவ‌னுக்கு முன்பாக‌ ஓடிக் கொண்டிருக்கிறான். எனினும் தேவ‌ன் ந‌ம்மீது வைத்துள்ள‌ பரஸ்பர அன்பினை மீண்டும் நிலை நிறுத்தும் வண்ணமாக நம்மைத் தொடர்கிறார். இதனை உருவாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பவர் தேவனே. பைபிளின் முதல் புத்தகம் தொடங்கி இறுதி அத்தியாயம் வரை சொல்லப்படும் செய்தி இதுவே. இதில் கடைசியாக நாம் புதிய வானம் மற்றும் புதிய பூமி பற்றியும் வாசிக்கிறோம். "இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன் தாமே அவர்களோடே கூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்" (வெளிப்படுத்துதல் 21:3).

இறுதியில் தேவனின் விருப்பம் நிறைவேறுகிறது. வெளிப்படுத்துதல் 21ம் அத்தியாயத்தை முழுவதையும் வாசியுங்கள். இது ஒரு அற்புதமான புஸ்தகம்.

உண்மையில் நமக்காக இறங்கி வந்து நம்மைத் தேடிப் பின் தொடர்ந்து நமக்கு அருகில் வாசம் செய்யும் தேவனே தேவன். அவர் தமது படைப்பாகிய நம்மீது தமது அன்பின் உறவினை புதுப்பிக்கும் இதய உணர்வினை வெளிப்படுத்துகின்றார். வெளிப்படுத்துதல் 21:3 ல் சொல்லப்பட்டிருக்கும் அவரின் ஜனங்களில் ஒருவராக நீங்கள் இருப்பீர்களா? நீங்கள் தேவனின் மனிதராக உருவாக தேவனை உஙகளுக்கு காண்பித்து உங்க‌ளுக்கு வெளிப்படுத்தப்படும் பைபிளின் செய்தி இது தான்.

இதற்கு நேர்மாறாக குர்‍ஆன் வெளிப்படுத்தும் கடவுள் வெகு தொலைவில் மனிதக் கற்பனைகளுக்கு எட்டாதவராக சித்தரிக்கப்படுகிறார். ஒரு இஸ்லாமிய‌ வேத வல்லுனரின் கருத்துப்படி "கடவுள் தமது சித்தத்தை மட்டுமே வெளிப்படுத்துவார், தம்மையல்ல, மற்றும் தாம் எக்காலத்திலும் மறைந்தே இருப்பார்" என அறிகிறோம். குரானின் கூற்றுப்படி அவர் நமது கழுத்து நரம்பினைப் போன்று நம்மருகே இருந்தாலும் இது அறிவுபூர்வமான நெருக்கமேயன்றி, நமக்கு நமது கழுத்து நரம்பினைப் பற்றிய உணர்வு பெரும்பான்மையான நேரங்களில் இல்லாதது போல எப்பொழுதும் ஒரு தனிப்பட்ட நெருக்கமின்றி இருக்கிறோம். இது எதைக்காட்டுகிறது என்றால் நம்மைச்சுற்றி இருக்கும் காற்றினைப் போன்று கடவுள் எவ்விடத்திலும் (ச‌மீபத்திலும் தூரத்திலும்) இருக்கிறார் என்பதனைப் போன்றதாகும். ஆனால் பைபிள் காட்டும் தேவன் தமது சகலத்திலும் வியாபித்திருக்கக் கூடிய தெய்வீகத் தன்மையினால் நம்மருகே இருக்க விரும்பவில்லை. மாறாக, நாம் நேசிக்கும், நம்மீது மிகுந்த அன்புடை‌ய ஒருவரைப்போன்றே நம்முடன் நெருங்கி இருக்க விரும்புகிறார்.

இஸ்லாம் என்பது, ம‌னித‌ன் க‌ட‌வுளின் சித்த‌திற்கு அடிப‌ணிவது பற்றியது ஆகும். ஆனால் பைபிள் சித்தரிக்கும் தேவன், தம் நிலையிலிருந்து இற‌ங்கி வந்து முய‌ன்று ந‌ம்மைத் தேடுப‌வ‌ராக‌ இருக்கிறார். இந்த‌ இய‌க்க‌ம் எதிரெதிர் திசைக‌ளில் உள்ள‌தை நாம் காண‌லாம்.

Friday, December 17, 2010

இயேசு பாவமில்லாதவர் - முகமது?

இயேசு பாவமில்லாதவர் என்று இஸ்லாமும், கிறிஸ்தவமும் போதிக்கின்றன. இயேசு பாவம் செய்யவில்லை, அவரிடம் பாவம் இல்லை என்று பைபிள் தெள்ளத்தெளிவாகச் சொல்கிறது.

பைபிளிலிருந்து சில வசனங்கள்:

வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம். நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார் (எபிரேயர் 4:14-15).

ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார் (2 கொரிந்தியர் 5:20).

அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை” (1 பேதுரு 2:22).

பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை (1 யோவான் 3:4-5).

குர்ஆன் மற்றும் ஹதீஸ்களிலிருந்து சில வசனங்கள்:

இயேசுவின் பிறப்பு பற்றி மரியாளுக்கு நற்செய்தியை அறிவிக்க காபிரியேல் தூதன் வந்தார் என்று குர்ஆன் போதிக்கிறது. குர்ஆன் 19:19ம் வசனத்தில் காபிரியேல் தூதன் கீழ்கண்டவாறு கூறுகிறார்:

"He said: "Nay I am only a messenger from thy Lord (to announce) to thee the gift of a holy son."

முஹம்மது ஜான் குர்‍ஆன் தமிழாக்கம்

"நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்") என்று கூறினார்.

பீஜே குர்‍ஆன் தமிழாக்கம்

நான் உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற்காக (வந்த) உமது இறைவனின் தூதன்.

"பரிசுத்த" என்ற வார்த்தை அரபி மொழியில் "ஜகியா (zakiyya)" என்பதாகும், இதன் மூல அர்த்தம் "பரிசுத்தம்" என்பதாகும். இந்த வார்த்தையானது முக்கியமாக "சுத்தமுள்ள, குற்றமில்லாத, பரிசுத்த, குறையில்லாத" என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

இயேசு பாவத்தை அறிக்கையிடவில்லை என்று சஹீஹ் புகாரி கூறுகிறது.

….அவ்வாறே மக்கள் ஈசா(அலை) அவர்களிடம் சென்று, 'ஈசாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறீர்கள். மர்யமிடம் இறைவனிட்ட அவனுடைய வார்த்தையும் அவன் (ஊதிய) உயிரும் ஆவீர்கள். நீங்கள் தொட்டிலில் சிறுவராய் இருந்தபோதே மனிதர்களிடம் பேசினீர்கள். (எனவே,) எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு ஈசா(அலை) அவர்கள், 'என் இறைவன் இன்று (என் மீது கடும்) கோபம்கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப்போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை - (தாம் புரிந்துவிட்டதாக) எந்தப் பாவத்தையும் அவர்கள் குறிப்பிடாமல் ...

ஆக, ஆரம்பகால இஸ்லாம் இயேசுவிடம் பாவம் இல்லை என்று கூறுகிறது. இருந்தபோதிலும், ஏற்கனவே சொன்னது போல, பிறகு வந்த இஸ்லாமியர்கள் முஹம்மது இயேசுவை விட தரம் தாழ்ந்த நிலையில் (பாவ சுபாவமுள்ளவராக) இருக்கிறார் என்ற உண்மையை சகித்துக்கொள்ள அவர்களால் முடியவில்லை. எனவே, முஹம்மதுவை இயேசுவிற்கு நிகராக பாவமில்லாதவராக இருக்கிறார் என்பதை காட்டும் படி பல முயற்சிகளை எடுத்தார்கள்.

"முஸ்லீம் ஸ்டடீஸ்" பாகம் 2, பக்கம் 346ல், ஐ. கோல்டுசைஹெர் (Goldziher) கீழ்கண்ட விதமாக கூறுகிறார்:

"An unconscious tendency prevailed to draw a picture of Muhammad that should not be inferior to the Christian picture of Jesus."

முஹம்மதுவின் சுபாவம் இயேசுவின் சுபாவத்திற்கு நிகராக இருக்கிறது என்று காட்டுவதற்கு பல சுயநினைவு இல்லாத கோட்பாடுகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன‌.

இந்த கோட்பாடு, குர்ஆனில் சொல்லப்பட்ட முஹம்மதுவின் வார்த்தைகளுக்கு எதிர்மறையாக உள்ளது.

பாவம் மற்றும் பாவம் செய்பவர்கள் பற்றிய கிறிஸ்தவ கோட்பாடு: THE CHRISTIAN DOCTRINE OF SIN AND SINNER

கில்கிறைஸ்ட் அவர்களின் புத்தகம் இந்த விவாதம் பற்றி அதிகபடியான விளக்கத்தைக் கொடுக்கிறது.

இங்கு ஒரு விவரத்தை குறிப்பிடவேண்டும், அதாவது "பாவங்களிலிருந்து நபிகளுக்கு பாதுகாப்பு" என்ற இஸ்லாமிய கோட்பாடு என்பது, நபிகள் தவறுகள் செய்யாமல் அல்லது தவறான முடிவுகளை எடுக்காமல் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதை மட்டுமே குறிக்கிறது. இந்த இஸ்லாமிய கோட்பாடு, பாவம் பற்றி பைபிள் சொல்லும் கோட்பாட்டோடு எப்படி வித்தியாசப்படுகிறது என்பதை நாம் அறிந்துக்கொள்ளவேண்டும். "பாவமின்மை" என்று பைபிள் சொல்லும் கோட்பாடு இஸ்லாம் சொல்லும் "பாவத்திலிருந்து பாதுகாப்பு" என்ற கோட்பாட்டை விட வித்தியாசமானது. அதாவது, பைபிள் சொல்லும் "பாவமின்மை" என்ற கோட்பாடு என்பது பாவம் செய்யாமல் இருக்கும் நிலை மட்டுமல்ல, அது தேவனின் பரிசுத்தம், அன்பு மற்றும் நீதியை முழுவதுமாக வெளிப்படுத்தும் உள்ளத்தின் நிலையாகும். பைபிளின் படி "பாவம்" செய்பவர்கள், தேவனின் மகிமையை விட்டுவிட்டவர்கள் ஆவார்கள் (ரோமர் 3:23), மற்றும் அவர்கள் தேவனின் நீதியை அடையாதவர்களாக இருக்கிறார்கள்.

முஹம்மதுவின் "பாவத்திலிருந்து பாதுகாப்பு" என்ற கோட்பாடிற்கும், இயேசுவின் பாவமின்மை என்ற கோட்பாட்டிற்கும் வித்தியாசம் உள்ளது. முஹம்மதுவின் பாவத்திலிருந்து பாதுகாப்பு என்பது அவருக்கு வெளிப்பட்ட வசனங்கள் உண்மையானவைகள் என்பதை காட்ட சொல்லப்படுகிறது. ஆனால், இயேசுவின் பாவமின்மை என்பது அவரது தெய்வீகத்தன்மைக்கு அது ஆதாரமாக உள்ளது, மற்றும் ம‌னிதனின் உண்மை மனநிலை பற்றி கிறிஸ்தவ கோட்பாட்டிற்கு ஆதாரமாக உள்ளது. பாவ‌த்திலிருந்து விடுத‌லை அல்ல‌து இஸ்மாஹ் என்ற‌ இஸ்லாமிய‌ கோட்பாடு, முஹ‌ம்ம‌துவிற்கு வெளிப்ப‌ட்ட‌ வெளிப்பாடுக‌ளுக்கு ஆதார‌மாக‌ கொடுக்க‌ப்ப‌ட்ட‌தே த‌விர‌, முஹ‌ம்ம‌து "ஒரு பாவ‌மும் அறியாத‌, க‌றைதிரை இல்லாத‌ மாச‌ற்ற‌ ம‌னித‌ர்" என்ப‌த‌ற்கு ஆதார‌மாக‌ கொடுக்க‌ப்ப‌ட்ட‌து அல்ல‌. (Thomson, "Muhammad: His Life and Person", "The Muslim World", Vol. 34, p. 115.")

கிறிஸ்தவத்தின் "பாவமின்மை" என்பது பாவமில்லாத பரிசுத்தமாகும். இதன் படி இந்த குணத்தை பெறாதவர்கள் தேவனின் நீதியை விட்டுவிட்டவர்களாக கருதப்படுவார்கள், அதாவது பாவிகளாக கருதப்படுவார்கள். இதற்கு எதிர்மறையாக, இஸ்லாமுக்கு தெரிந்த பாவத்திலிருந்து பாதுகாப்பு என்பது, மனித வழக்கத்தின்படி, மறுபடியும் பாவம் செய்யக்கூடிய நிலையை உடைய மனநிலையை குறிக்கிறது. மீட்கப்படவேண்டிய "விழுந்துவிட்ட மனித நிலையைப் பற்றி" இஸ்லாமுக்கு ஒன்றுமே தெரியாது. இஸ்லாமிய கோட்பாடு "வேண்டுமென்றே தெரிந்தே செய்யும் தவறுகளிலிருந்து பாதுகாப்பு" என்பது பற்றி மட்டும் கூறுகிறது. ஆனால், இறைவனின் பரிசுத்தத்தை தன் இதயத்தில் கொண்டு இருக்கும் மனிதனின் நிலையைப் பற்றி இஸ்லாமிய கோட்பாடு கூறுவதில்லை. இதனால், தான் இஸ்லாம், நபிகள் செய்யும் பாவங்களுக்கு முலாம் பூசி அவைகள் "சிறிய தவறுகள்" என்றும், மறதியில் செய்யப்படும் "தவறுகள்" என்றும் கூறுகிறது. (Gilchrist, op cit, page 275)

எதிரொலி: முஹம்மது எப்படிப்பட்ட பாவியாக இருந்தார்?

மனிதன் பாவசுபாமுள்ளவன் அல்ல, ஆனால், பாவத்தின் பக்கம் அதிகமாக சாய்கின்றவனாக இருக்கிறான் என்று இஸ்லாம் போதிக்கின்றது. மனிதன் பாவசுபாமுள்ளவன் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். இயேசுக் கிறிஸ்து கூறும் போது,மனிதன் இயற்கையாகவே தீயவனாக இருக்கிறான் என்று கூறினார்.

உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம். (மத்தேயு 7:9-12)

தேவனுடைய விருப்பத்திற்கு எதிராக போராடும் மனித சுபாவம் பற்றி மற்றோரு இடத்தில் பவுல் கூறுகிறார்:

“ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்….” “ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது” (ரோமர் 7:19,23.)

எல்லா மனிதர்களும் பாவம் செய்து தெய்வ மகிமை அற்றவர்களாக இருக்கிறார்கள் (ரோமர் 3:23) என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். நாம் நம்முடைய உள்ளத்திலும், சரீரத்திலும் நம்முடைய ஆத்துமாவிற்கு எதிராக ஒரு யுத்தத்தை அனுதினமும் செய்துக்கொண்டு இருக்கிறோம். இந்த பாவ சுபாவமானது நாம் இறைவனின் விருப்பத்தின் படி எதுவும் செய்யக்கூடாது என்று போராடிக்கொண்டு இருக்கிறது.

இப்போது, முஹம்மதுவின் விண்ணப்பத்திற்கு நேராக நம் கவனத்தை திருப்புவோம்.

அல்லாஹ்! நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை. என் பாவங்களை மன்னிப்ப்பாயாக, தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களையும் மன்னிப்பாயாக. நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்களை மன்னித்துவிடு. வேடிக்கையாகவோ அல்லது தெரிந்தே செய்த தவறுகளையும் மன்னிப்பாயாக. நான் செய்த எல்லா தீய செயல்களிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு வேண்டுகின்றேன். அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப் படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக.

முஹம்மதுவின் இந்த பாவமன்னிப்பு பற்றிய விண்ணம், அவர் ஒரு பாவம் செய்கின்ற கலங்கமுள்ள சுபாவமுள்ளவர் என்பதை காட்டுகின்றதல்லவா? தன் பாவங்களை இறைவன் மன்னிக்கவேண்டும் என்ற இந்த விண்ணப்பத்தை முஹம்மது அடிக்கடி செய்துள்ளார். ஏன் இவர் அடிக்கடி இந்த ஜெபத்தை செய்யவேண்டும்? அவரின் இந்த விண்ணப்பமானது ஏதோ ஒருசில சாதாரண பாவங்களை தெரியாமல் செய்யும் மனிதனின் விண்ணப்பமல்ல. இது பயத்தோடு கூடிய, ஒரு முக்கியமான (சீரியஸான) விண்ணப்பமாகும், அதாவது தன்னுடைய செயல்கள் மிகவும் மோசமானவைகளாக தீயவைகளாக இருக்கின்றன என்ற உணர்வுள்ள மனிதன் செய்யும் விண்ணப்பம் தான் இந்த முஹம்மது செய்த விண்ணப்பம். அவர் தன்னுடைய பாவங்களுக்காக கல்லரையில் துன்பம் அனுபவிக்கவேண்டி வரும் என்பதை நம்பியவராக இந்த விண்ணப்பத்தை செய்துள்ளார். தன்னுடைய சுபாவத்தில் இருக்கும் பாவ உணர்வுகள் பற்றிய ஓர் சரியான உணர்வு உள்ளவாராக இவர் வேண்டுதல் செய்துள்ளார். தான் என்னென்ன தவறுகள் செய்தார் என்ற பட்டியலை இந்த வேண்டுதலில் அவர் குறிப்பிடவில்லையானாலும், அவருடைய இந்த ஜெபமானது அவர் பாவ சுபாவமுள்ள ஒரு சாதாரண மனிதன் தான் என்பதைக் காட்டுகிறது. இந்த பாவசுபாவம் அவருக்குள் இருந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது, அதனை இவர் சமாளித்தே ஆகவேண்டும். அவர் தன்னைத் தான் ஒரு தீர்க்கதரிசி என்றுச் சொல்லிக்கொண்டு செய்த அனைத்து செயல்களும் இந்த பாவசுபாவத்தினால் தான். எதிர்காலத்திலும் கூட தான் பாவம் செய்யப்போகிறார் என்பதை முஹம்மது அறிந்திருந்தார். தன்னுடைய எதிர்கால பாவங்களை மன்னிக்கும்படி அவர் இறைவனிடம் வேண்டுதல் செய்கிறார். அதுமட்டுமல்ல, அப்படியே தன் பாவங்களை இறைவன் மன்னிப்பார் என்பதற்கு ஒரு வசனத்தையும் சொல்லிவிட்டார் (குர்ஆன் 48:1,2). அவர் தன் உள்ளத்தின் ஆழத்தில் “தான் ஒரு பாவி” என்பதை அறிந்திருந்தார், அதனால் அவர் பாவமன்னிப்பிற்காக வேண்டுதல் செய்யவேண்டிய அவசியம் அவருக்கு இருந்தது.

பாகம் மூன்றின் முடிவுரை: எல்லா மனிதர்களுக்கும் இருந்த பாவ சுபாவமே முஹம்மதுவிற்கும் இருந்தது.

கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய போதனைகளின்படி இயேசு பரிசுத்தமுள்ளவரும், பாவமில்லாதவருமாக இருக்கிறார். மனிதனின் பாவ சுபாவம் பற்றி மார்க்க போதனைகள் வித்தியாசமாக இருந்தாலும், முஹம்மதுவின் நடத்தைகள் மற்றும் அவரது தனிப்பட்ட ஜெபங்களை நாம் கூர்ந்து கவனித்தால், கிறிஸ்தவ‌ போதனைகளின் படி, "பாவி" என்ற தலைப்பிற்கு முஹம்மது பொருத்தமானவராக இருக்கிறார் என்பதை அறியலாம்.

பாவத்திலிருந்து மீட்பு (இரட்சிப்பு) என்பது இயேசுக் கிறிஸ்து மூலமாக வருகிறது. முஹம்மதுவிற்கு இது தெரியவில்லை. உண்மையான மன்னிப்பை பெறுவதற்கு பதிலாக, முஹம்மது கல்லரையில் தனக்கு காத்திருக்கும் வேதனையை நினைத்தவராக பயத்துடனே தன் வாழ்க்கையை வாழ்ந்தார். முஹம்மது தனக்கு தானாகவே ஒரு வித்தியாசமான கலவையுடன் கூடிய மற்றும் பல சம்பிரதாயங்கள், மூடபழக்கவழக்கங்கள் வன்முறைகளைக் கொண்ட மதத்தை உருவாக்கிவிட்டார். இவையெல்லாம் அவர் செய்தது, தனக்கு தெரியாத அந்த இறைவனை திருப்திபடுத்த அவர் எடுத்த முயற்சியாகும்.

இந்த வேண்டுதலை செய்யுங்கள்:

"இறைவனாகிய இயேசுவே, நான் ஒரு பாவி என்பதை அறிக்கையிடுகிறேன். என் ஆத்துமாவில் பாவம் உண்டென்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். தயவு செய்து என் பாவங்களை மன்னியும். இப்பாவங்கள் உம்முடைய பார்வையில் மிகவும் கொடுமையானவைகள் என்பதை நான் அறிவேன். என் பாவங்களுக்காக நீர் மரித்தீர் என்பதை நம்புகிறேன். நீர் மறுபடியும் உயிரோடு எழுந்தீர் என்பதை விசுவாசிக்கிறேன். நீர் என் இருதயத்தில் வரும்படி நான் அழைக்கிறேன், என் பாவங்களை கழுவும் படியும் என்னை உம்மிடம் சேர்த்துக்கொள்ளும்படியும் கேட்டுக்கொள்கிறேன். நீர் தேவ குமாரன் என்பதையும், நீர் எனக்காக காட்டிய அன்பை நான் பெற்றுக்கொள்கிறேன். உமக்கு முழுவதுமாக கீழ்படிவேன் என்று உறுதிகூறுகிறேன்."

BIBLIOGRAPHY

[1] "Sahih Bukhari", translated into English by Dr. Muhammad Muhsin Khan, at the Islamic University in Medina, published by Kitab Bhavan, New Delhi, India.
[2] "Muhammad and the Religion of Islam", by John Gilchrist, page 273, published by Jesus to the Muslims, Durban, South Africa. It can be found on the web at:http://answering-islam.org/Gilchrist/Vol1/
[3] "The Koran", by N. J. Dawood, published by Penguin, London England
[4] "The Meaning of the Glorious Koran", by M. Pickthall. published by Mentor, NY, NY.
[5] "The Koran", by A. J. Arberry, published by Oxford University Press, Oxford, England.
[6] "The Koran", by J. M. Rodwell, published by Everyman, London, England.
[7] "The Holy Quran", by Yusef Ali, published by Amana, Beltsville, Maryland.
[8] The Hughes Encyclopedic Dictionary of Islam"
[9] "Ency. of Islam", pub. by Brill, Netherlands.
[10] "Sahih Muslim", translated by A. Siddiqi, published by International Islamic Publishing House, Riyadh, KSA.
mo-sinner.htm
Rev A: 4/26/00

ஆங்கில மூலம்: Was Muhammad a Sinner?