Saturday, April 5, 2008

ஹதீஸ்களின் வரலாறு - ஒரு ஆச்சரியம்

ஹதீஸ்களின் வரலாறு - ஒரு ஆச்சரியம்
ஹதீஸ் என்பது இஸ்லாம் மக்களிடையே குரானுக்கு இணையாக வைத்து போற்றப் படும் ஒன்றாகும். முகமது நபி மறைந்து போன பின்பு இனிமேல் அல்லா நமக்கு வேறு இறைத்தூதரை அனுப்ப மாட்டான் என்று முடிவு கட்டிய மூத்த இஸ்லாம் அறிஞர்கள் முகமதுவின் வாய்மொழிகளை சேகரித்து அவற்றை ஒரு தொகுப்பாக வெளியிட்டனர். உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. அது ஹதீஸ்கள் குறித்து முஸ்லீம்கள் என்ன சொல்கிறார் என்பதை நீங்கள் அறிந்து கொண்டால் உங்களுக்கே ஆச்சரியமாயிருக்கும். கீழே கொடுக்கப் பட்டிருப்பவை ஒரு இஸ்லாம் இணையத்தில் உள்ளவை. அதை நான் அப்படியே காபி செய்து இங்கு பேஸ்ட்தான் செய்துள்ளேன். அந்த இணையத்தின் லின்க்கும் கீழே கொடுத்துள்ளேன். தொடர்வது ஹதீஸ்களை ஏன் தயாரித்தனர் என்ற குறிப்புச் செய்திகள்... வாசிப்பவர்... சந்தேகமே இல்லாமல் நீங்கதான்..

ஆ) ஆர்வக் கோளாறு

மார்க்கத்தில் ஆர்வமிருந்தும் அறிவு இல்லாத மூடக் கூட்டத்தினர் நல்ல நோக்கத்தில் ஹதீஸ்களை சுயமாகத் தயாரித்தனர்.

இ) தனி மரியாதை பெறுவதற்காக


மார்க்க அறிஞர்களுக்கு மற்ற மதங்களில் உள்ளது போன்ற அந்தஸ்து இஸ்லாத்தில் இல்லை. மற்ற மதங்களின் கடவுளின் ஏஜெண்டுகளாக மதகுருமார்கள் மதிக்கப்படுகின்றனர். புரோகிதர்களாகச் செயல்படுகின்றனர். ஆனால் இஸ்லாம் அதை அறவே ஒழித்துவிட்டது. இதைக் கண்ட போலி அறிஞர்கள் மற்ற மதங்களில் உள்ளது போல் தங்களுக்கும் மரியாதை வேண்டும் என்பதற்காக ஹதீஸ்களை உருவாக்கிக் கொண்டார்கள்.

ஈ) மன்னர்களை மகிழ்விக்க

மன்னர்களின் தவறுகளை நியாயப்படுத்தவும், அவர்களுக்கு மக்கள் அதிகமான மரியாதை தரவேண்டும் என்பதற்காகவும் ..... ஹதீஸ்களை இட்டுக்கட்டினார்கள்.

உ) இயக்க வெறி

மத்ஹபு வெறி, இயக்க வெறி, இனவெறி, ஒரு மனிதன் மீது கொண்ட பக்திவெறி காரணமாகவும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டன.

ஊ) பேச்சைப் பிழைப்பாக்கியவர்கள்

மக்கள் மத்தியில் உருக்கமாகவும் சுவையாகவும் உரை நிகழ்த்தி அதன் மூலம் அன்பளிப்புப் பெறும் ஒரு கூட்டத்தினர் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் நடமாடி வந்தனர்.

நீண்ட நேரம் - புதுப்புது விஷயங்களைப் பேசி மக்களை கவர வேண்டும் என்பதற்காக இவர்கள் இட்டுக்கட்டிய ஹதீஸ்கள் தான் இவற்றில் அதிக அளவில் காணப்படுகின்றன. இவர்கள் எந்த அளவுகோலும் வைத்திருப்பதில்லை. அன்றைய தினம் கைத்தட்டல் பெறுவதற்காக எதை வேண்டுமென்றாலும் கூறுவார்கள்.

எ) சுயலாபத்திற்காக இட்டுக் கட்டியோர்

ஒவ்வொருவரும் தாம் சார்ந்துள்ள துறையைத் குறித்து நபி (ஸல்) அவர்கள் சிலாகித்துச் சொன்னதாக இட்டுக்கட்டினார்கள்.

ஏ) மூளை குழம்பியவர்களின் உளறல்கள

சில பேர் முதுமையின் காரணமாக, மூளை குழம்பியதன் காரணமாக - நினைவாற்றல் குறைவு காரணமாக பொய் சொல்ல வேண்டும் என்ற நோக்கமில்லாமல் பொய்யான ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.

ஆதாரம்:

ஆகையால் இதை வாசிக்கும் நண்பர்களே நீங்கள் ஹதீஸ் குறித்து அறிந்து கொண்டவை

1.அவை ஆர்வக் கோளாறினால் எழுதப்பட்டவை
2.தனிமரியாதை பெறுவதற்காக எழுதப்பட்டவை
3.மன்னர்களை மகிழ்விக்க எழுதப்பட்டவை
4.இயக்க வெறியர்களால் எழுதப்பட்டவை
5.பேச்சை பிழைப்பாக்கியவர்களால் எழுதப்பட்டவை.
6.சுய லாபத்திற்காக இட்டுக் கட்டியோர்
7. மூளை குழம்பியவர்களின் உளறல்கள்
மேற்கண்ட வாசகங்கள் முஸ்லீம் சகோதரர்களால் எழுதப்பட்டவை.ஹதீஸ் என்று சொல்லப் படுகிற முகமதுவின் வாய்மொழிகளை எழுதியவர்களின் குணங்கள் அனைத்தும் முகமதுவுக்கும் பொருந்துகின்றன. ஆகவே மேற்கண்ட குணங்களடங்கிய முகமது நபி அவர்களால் திருக் குரான் எழுதப் பட்டது. நல்ல தகவல்களை தந்த முஸ்லீம் சகோதரர்களுக்கு நன்றி. தொடரட்டும் அவர்களின் சேவை.

கிறிஸ்தவர்களின் பரிசுத்த வேதாகமம் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு பல்வேறு தேவ மனிதர்களால் எழுதப்பட்டது வேதாகமத்தின் ஆசிரியர் தேவனே. ஆனபடியால் தான் அதில் துவக்கம் முதல் முடிவு வரையிலும் ஒரு தொடர்ச்சிதன்மை அதாவது கன்டினியூடி இருப்பதை பார்க்க முடிகிறது. வேதாகமத்தின் மையச் செய்தி -அன்பு
தேவனின் நோக்கம் எல்லாருடைய பரிசுத்தம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால்........

No comments: