Wednesday, April 2, 2008

சதி செய்பவர்களில் சிறந்தவர் யார் தெரியுமா?

நாம் சிறு பிள்ளைகளாக இருக்கும்போது நரிதான் மிகவும் மகாதந்திரமுள்ளது என்று நாம் படித்திருக்கிறோம். ஆனால் பரிசுத்த வேதாகமம் தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது என்று கூறுகிறது. அதுபோல உலகத்தில் சதி செய்வதில் சிறந்தவர் யார் என்று கேட்டால் நம் இந்திய தேசத்தில் எல்லாரும் உடனடியாகக் கூறும் பதில் சகுனி என்பதாகும். யாராவது கொஞ்சம் சதி செய்து விட்டால் உடனே அவரை சகுனி என்று கூறுவது நம்ம இந்திய மக்களின் வழக்கம். ஆனால் நீங்கள் ஒரு முஸ்லீம் சகோதரனைப் பார்த்து இந்த கேள்வியை கேட்டால் கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ நாடுகளும் இஸ்ரவேல் நாட்டைச் சேர்ந்த யூதர்களும் தான் சதி செய்வதில் சிறந்தவர்கள் என்று கூறுவார்கள்.

நான் எனதருமை முஸ்லீம் சகோதரர்களைப் பார்த்து இந்த கேள்வியை சற்று வித்தியாசமாக கேட்பேன்?

குரான் சொல்கிறபடி யார் சதி செய்வதில் சிறந்தவர்கள்? குரான் சொல்லும் பதில் என்ன தெரியுமா?

(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்¢ அல்லாஹ்வும் சதி செய்தான்¢ தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான். (ஸூரத்துல் பகரா.3:54) இப்போது சொல்லுங்கள் உங்கள் பதிலை....

No comments: