Wednesday, December 9, 2015

முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)


    முஸ்லீம் vs. முஸ்லீம்

தமிழாக்கம்

முன்னுரை: பொதுவாக உலக இஸ்லாமியர்கள் "முஸ்லீம்களை" மற்ற மார்க்கத்தவர்கள் கொன்று குவிக்கிறார்கள் என்று சொல்லி வேதனையடைவார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக இந்தியாவில் நடந்த சில கலவரங்களைச் சொல்வார்கள், அமெரிக்கா போரில் கொன்ற பட்டியலை காட்டுவார்கள். இதில் எனக்கு எந்த கருத்துவேறுபாடும் இல்லை. ஆனால், முஸ்லீம்களே மற்ற முஸ்லீம்களை கொன்று குவித்துள்ளார்கள் என்றுச் சொன்னால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும். இக்கட்டுரையில் ஆசிரியர், ஈரான்-ஈராக் போர், பாகிஸ்தான்-பாங்களாதேஷ் போர் என்று பட்டியலிருகிறார். இந்த போர்களில், மற்றும் மற்ற தாக்குதல்களில் அதிகமாக மரித்தது யார்? முஸ்லீம்களே. மற்றவர்கள் முஸ்லீம்களை கொன்றது ஆயிரம் என்றால், முஸ்லீம்களே முஸ்லீம்களை கொன்றது பதினாயிரம். இக்கட்டுரையில் சொல்லப்படும் செய்தி, அமைதியான முறையில் வாழும் முஸ்லீம்களை குறித்து அல்ல, இஸ்லாமின் பெயரை வைத்துக்கொண்டு தாக்குதல்கள் நடத்தும் நபர்களை மட்டுமே குறிக்கும். ஒரு எதிரியை அல்லது நபரை பழி வாங்குவேன் என்றுச் சொல்லி, தன் சொந்த மக்களை பல நூறுபேரை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் நபர்களைப் பற்றி ஆசிரியர் எழுதுகிறார். இந்தியாவில் வாழும் பல முஸ்லீம்களும் அமைதியை விரும்புகிறார்கள், இப்படி தாக்குதல் நடத்தும் நபர்களை வெறுக்கிறார்கள் என்பதை நாம் ஒருபோதும் மறுக்கமுடியாது. இக்கட்டுரையின் மூலமாக இஸ்லாமிய சிறும்பான்மையினரை, பெண்களை காப்பாற்றும்படி இஸ்லாமியர்களுக்கும், மற்றவர்களுக்கும் என் வேண்டுதலை முன்வைக்கிறேன்.

கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு தொடர்கிறது...

முஸ்லீம் vs. முஸ்லீம்

Muslim versus Muslim ;
Jews kill a Palestinian and its death to Israel By: Lee Jay Walker Dip BA MA


பொதுவாக ஊடகங்கள்(Media) "இஸ்லாமிய ஊடகங்கள்" போலவே குறுகிய கண்ணோட்டத்தை உடையதாக காட்சியளிக்கிறது. ஏன்?

ஈரான்-ஈராக் போர், சோமாலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் துருக்கி, ஈராக், ஈரானில் குர்தீஸ் மக்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால், 1970 லிருந்து 4 மில்லியனுக்கு அதிகமான முஸ்லீம்கள் முஸ்லீம்களால் கொல்லப்பட்டார்கள்; 1982ல் சிரியாவில் 20,000 முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள்; கடந்த 12 வருடங்களாக 1,00,000 ஷியா முஸ்லீம்கள் ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் மற்றும் பல இஸ்லாமிய நாடுகளில் நடந்த உள்நாட்டு கலவரங்களால் கொல்லப்பட்டார்கள்.

பசியினாலும், அடிமைகளாகவும் வேதனை அனுபவித்து 2 மில்லியன் கிறிஸ்தவர்களும், ஆவி வணக்கத்தில் ஈடுபடுபவர்களும் சூடான் நாட்டில் முக்கியமாக ஆப்ரிக்கர்கள் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கொல்லப்பட்டுள்ளார்கள். இப்படி இருந்தும், அரபியர்களும், முஸ்லீம்களும் "நாம் அனைவரும் சகோதரர்கள்" என்று சொல்கிறார்கள், மற்றும் பாலஸ்தீன அரபியர்களின் கவலை, ஒட்டு மொத்த மனித இனத்தின் மீது நடத்தப்படும் குற்றம் என்று சொல்கிறார்கள். ஆனால், சவுதி அரேபியாவில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் கொடுமைப்படுத்தப்படுதல், சூடான் நாட்டில் உள்ள அடிமைத்தனம், முஸ்லீமல்லாதவர்களை கூண்டோடு அழித்தல், அல்ஜீரியாவில் நடக்கும் கொடுமை, எகிப்தில் காப்டிக் கிறிஸ்தவர்கள் அனுபவிக்கும் கொடுமை, மற்றும் அரேபியர்களால் துன்புறுத்தப்படும் இதர செயல்கள் எல்லாம் ஊடகங்களால் மறைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கண்களை நீங்கள் மூடிக்கொண்டு, ஊடகங்கள் சொல்லும் செய்திகளை மட்டும் கேட்பீர்களானால், இஸ்ரவேல் நாடும், மற்ற இஸ்லாமியர் அல்லாதவர்களும் மிகவும் கொடுமையாளர்களாகவும், "இரத்தத்தை குடிக்கிறவர்களாகவும்" தென்படுவார்கள், இவர்களிடம் எப்போதும் துன்பத்தை அனுபவிப்பது முஸ்லீம்களாக இருக்கிறார்கள் என்று உங்களுக்கு எண்ணத்தோன்றும். ஆனால், உண்மை அது அல்ல. அது வேறு மாதிரியாக உள்ளது. ஆப்கானிஸ்தான், சோமாலியா மற்றும் சவுதி அரேபியாவில் இஸ்லாமிலிருந்து வேறு மதத்திற்கு மாறுகிறவர்கள் கொல்லப்படுகிறார்கள். அதே நேரத்தில் பாகிஸ்தானில் கற்பழிக்கப்படும் பெண்கள், சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள், ஏனென்றால், அவர்கள் கற்பழிக்கப்பட்டார்கள் என்று நிரூபிக்க நான்கு ஆண்களை சாட்சிகளாக கொண்டுவரவில்லை. பங்களாதேஷில் புத்தமதத்தவர்களும், பாகிஸ்தானில் "அஹமதி முஸ்லீம்களும்", சோமாலியாவில் கிறிஸ்தவர்களும், பாகிஸ்தானில் இந்துக்களும், மற்றும் பலர் துன்பத்திற்கு ஆளாகிறார்கள், அல்லது பல நிலைகளில் அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு மிகவும் கீழ்தரமாக நடத்தப்படுகிறார்கள். பங்களாதேஷில் முஸ்லீம்களின் பெரும்பான்மையாக இருக்கிற காரணத்தால், புத்தமத்ததவர்கள் அதிகமாக தாக்கப்படுகிறார்கள், அவர்கள் கோயில்கள் தரைமட்டமாக்கப்படுகிறது, மற்றும் இவர்களின் பெண்களை முஸ்லீம் ஆண்கள் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்துக்கொள்கிறார்கள்.

முக்கியமாக, 2002ல் இஸ்லாமிய நாடுகளில் வாழும் பெண் இனம் மிகவும் அதிக கொடுமைக்கு ஆளாகியது, மற்றும் கவுரவப் படுகொலை (Honour Killing) என்ற கொலைகள் அதிகமாக பெருகியது, பொதுவாக ஊடகங்கள் இவைகளை மேற்கத்திய மக்களுக்கு மறைத்துவிட்டது. வடநைஜீரியாவிலிருந்தும், இந்தோனேஷியாவின் சில பாகங்களிலிருந்து கொடுமைகளை தாங்க முடியாமல் ஊரை விட்டு ஓடிய பல ஆயிர கிறிஸ்தவர்களின் செய்தியை எப்படி ஊடகங்கள் மறைத்ததோ அதே போல இவைகளையும் ஊடகங்கள் மறைத்துவிட்டது. சூடானிலும், மௌரிடானியாவிலும்(Mauritania) முஸ்லீம்கள் செய்யும் அடிமைத்தன கொடுமைகளை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? கேள்விபட்டு இருக்கமாட்டீர்கள். ஏனென்றால், ஆப்ரிக்காவில் மூஸ்லீம்கள் மூலமாக நடக்கும் அடிமைத்தனம் அவ்வளவு முக்கியம் இல்லை. ஆனால், இதே ஒரு இஸ்ரவேல் நாடோ, அல்லது கிறிஸ்தவ நாடோ அடிமைத்தனத்தை ஆதரிப்பதாகவும், செயல்படுத்துவதாகவும் செய்தி வெளியானது என்று நினைத்துக்கொண்டால், அப்போது எவ்வளவு பலமாக அதற்கு எதிர்ப்பு வரும் என்று கற்பனை செய்து பார்க்கமுடியுமா?

ஒருவன் "உண்மை இஸ்லாம்" என்றால் என்ன என்றும், உண்மை இஸ்லாமிய சட்டம் என்ன என்றும் தெரிந்துக்கொள்ள விரும்பினால், அவன் சவுதி அரேபியாவிற்கு சென்று பார்க்கக்கடவன். உங்களோடு கூட புத்தமதத்தவர்களையும், இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும், யூதர்களையும், சீக்கியர்களையும், ஜொரோஸ்ட்ரியன்களையும், மற்ற மத நம்பிக்கையுள்ளவர்களையும் அழைத்துக்கொண்டு சவுதி அரேபியாவிற்குச் சென்று, அங்குள்ள சவுதி குடிமக்களிடம் தங்கள் நம்பிக்கையைப் பற்றி சுதந்திரமாக பேசச் சொல்லுங்கள், பிறகு என்ன நடக்கும் என்று பாருங்கள்? அப்போது உங்களுக்கு இஸ்லாம் என்றால் என்னவென்றும், முஹம்மதுவின் காலத்தில் இஸ்லாம் என்ன செய்தது என்றும், அது அப்படியே மக்கா மதினா இடங்களில் இன்றளவும் நடந்துக்கொண்டு இருக்கிறது என்பதை சுலபமாக புரியும். சவுதி அரேபியாவில் உள்ள உங்கள் நண்பரிடம் நீங்கள், உங்கள் மதத்தைப் பற்றி சவுதி மக்களிடம் சுதந்திரமாக பேசுங்கள் என்று சொல்லமுடியாது. அப்படி சொல்லி, உங்கள் மார்க்கத்திற்கு வரும் படி சவுதி மக்களுக்கு அழைப்பு விடுக்க முடியாது. அப்படி யாராவது மாறினால், அதன் விளைவு மரணம் தான்.

இவைகள் ஒருபுறமிருக்க, முஸ்லீமல்லாதவர்களையும், முஸ்லீம் சிறும்பான்மையினரையும், பெண்களையும், ஓரினச் சேர்க்கையாளர்களையும் கொடுமைபடுத்தும் நிலை தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. இன்னும் "இஸ்ரவேலுக்கு மரணம்" என்ற கோஷங்கள் இஸ்லாமிய நாடுகளில் தொடர்கிறது. இவர்களுடைய முக்கிய நோக்கம் என்ன? தன்னிடம் எண்ணை வளம் அதிகமாக உள்ளதால் சவுதி அரேபியா இப்படி தான் என்ன நினைத்தாலும் செய்யமுடியும் என்று நினைக்கிறதா? அல்லது இஸ்லாமியர் அல்லாதவர்களாகிய "நாம்" எவ்வளவு நல்லவர்கள் என்று ஒன்றும் செய்யாமல் நாம் சும்மா இருப்பதாலேயா? (கிறிஸ்தவர்களும் மற்றும் இதர இஸ்லாமியரல்லாதவர்களும் "இஸ்லாமுக்கு பலிகடா ஆக்கப்படுகிறோம்"). அல்லது இவை இரண்டும் காரணமா?

உண்மை எதுவாக இருந்தாலும், இந்த நிலைக்கு பல காரணங்கள் இருந்தாலும், ஒன்று மட்டும் உண்மை. அது என்னவென்றால், ஒட்டு மொத்த கிறிஸ்தவ தலைவர்கள், தங்கள் மிதமிஞ்சிய அமைதியினால், மௌனத்தினால் முஸ்லீமல்லாதவர்களை வஞ்சித்திருக்கிறார்கள். இது போன்ற தங்களை வெட்கப்படுத்தும் பொதுக்கருத்துக்களை உருவாக்கியமைக்காக மேற்கத்திய ஊடகங்கள் வெட்கப்படவேண்டும்.

"Whatever the "truth is," and of course it will be because of multiple factors, one reality remains and this is that Christian leaders have on the whole betrayed non-Muslims due to their overwhelming silence; and Western media should be ashamed of basic generalizations which should shame them. "

1970லிருந்து முஸ்லீம்கள் 4 மில்லியன் முஸ்லீம்களை கொன்று குவித்தது போல, அமெரிக்காவும் மூன்று போர்களில்(Cyprus, Bosnia, and Kosovo) இஸ்லாமுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. அமெரிக்காவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு முன்பு, அமெரிக்காவும், இங்கிலாந்தும், ஆப்கானிஸ்தானில் உள்ள அடிப்படைவாத இஸ்லாமுக்கு தங்கள் உதவியை கொடுத்துள்ளார்கள். ஆனால், இந்த இரண்டு நாடுகளும், கிழக்கு தீமோர் (East Timor) 1970 களில் கொல்லப்பட்ட 2,00,000 (2 லட்சம்) கிறிஸ்தவர்களைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை.

எனவே, இஸ்லாமிய நாடுகளில் உள்ள "இஸ்லாமியரல்லாதவர்களுக்காவும், பெண்களுக்காகவும், இஸ்லாமிய சிறும்பான்மையினருக்காகவும்" யார் குரல் கொடுக்கப்போகிறார்கள். யாருமே இல்லை! ஆனால், இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் இன்னும் அதிகவேகத்தில் இஸ்லாமிய நாடுகளில் நடந்துக்கொண்டே இருக்கிறது.

ஆகையால், நான் புலம்புகிறேன், இதோ இன்னொரு முறை என் காதுகளில் இஸ்லாமிய ஊடகங்களிலிருந்தும், மேற்கத்திய ஊடகங்களிலிருந்தும் "இஸ்ரவேலுக்கு மரணம்" என்ற கோஷம் விழுகிறது.

Source: http://www.faithfreedom.org/Articles/Leejaywalker/muslim_vs_muslim.htm
------------------------கட்டுரை முற்றிற்று---------------------------
என் பங்கிற்கு ஏதாவது விவரங்கள், தொடுப்புக்கள் கொடுக்கமுடியுமா என்று தேடிப்பார்த்தேன். எனக்கு கிடைத்த சில விவரங்களை கீழே தருகிறேன். 1. பாகிஸ்தானில் பெனாசீர் பூட்டோவை கொல்ல செய்யப்பட்ட தாக்குதல், 130 பேர் மரணம், பல நூறு பேர் காயம் - பெரும்பான்மையாக முஸ்லீம்கள் தானே... இந்தியாவில் ஹைதராபாத் மசூதியில் வெடித்த குண்டுவெடிப்பில் மரித்தவர்கள், அஜ்மீர் தர்காவில், மற்றும் இன்னும், உலகமனைத்திலும் ஷிய, சுன்னி முஸ்லீம்களின் மசூதிகளில் வெடிக்கும் குண்டுவெடிப்பில் மரிப்பவர்கள் யார்? முஸ்லீம்கள் தானே... யார் இவர்களை காப்பாற்றுவார்? 2. ரமலான் மாதத்தில் போர் செய்யக்கூடாது என்று முகமது சொன்னார் என்றுச் சொல்வார்கள், ஆனால், இந்த ஆண்டு ரமலான் மாதத்தில் :
Once again, Islam puts up big Ramadan numbers: 1,327 dead bodies in 282 terror attacks in 20 countries during its holiest month.

Source : http://www.thereligionofpeace.com/


3. ஒரு ஆண்டுக்கு 5000 பெண்கள் "கவுரவப் படுகொலை" என்ற முறையில் கொல்லப்படுகிறார்கள். இவர்கள் எல்லாரும் இஸ்லாமிய பெண்கள் தான்.

The United Nations Population Fund estimates that the annual worldwide total of honor-killing victims may be as high as 5,000 women . Source: http://en.wikipedia.org/wiki/Honor_killing


4. ஈராக்-ஈரான் யுத்தத்தில் மரித்தவர்கள் (அ) காயப்பட்டவர்களின் புள்ளிவிவரங்கள்.
Source : http://en.wikipedia.org/wiki/Iran-Iraq_War

Casualties

Iran- Est. 500,000-750,000 soldiers/militia/civilians killed or wounded

Iraq- Est. 375,000-500,000 soldiers/militia/civilians killed or wounded


5. பாகிஸ்தான் - பாங்களாதேஷ் யுத்தத்தின் விளைவு:
Pakistan vs.Bangladesh war

Source : http://en.wikipedia.org/wiki/Bangladesh_Liberation_War
Casualties
India: 1,426 KIA

3,611 Wounded (Official)

Mukti Bahini: NA*

Pakistan ~8,000 KIA[citation needed]

~10,000 Wounded[citation needed]

93,000 POWs[citation needed]

Civilian death toll: Between 307,013–3,000,000[3]

6. The Real 2006 'Iraq Body Count'

16,791 Iraqi civilians killed last year by ISLAMIC Terrorists

225* Iraqi civilians killed collaterally in incidents involving Americans (and Islamic Terrorists)

Source: http://www.thereligionofpeace.com
7. இந்த அக்டோபர் மாதம் , வாராந்திர தாக்குதல்கள், மரணங்களின் எண்ணிக்கை (Weekly Jihad Report Oct. 07 - Oct. 12)

தாக்குதல்கள் - Jihad Attacks: 63

மரித்தவர்களின் எண்ணிக்கை - Dead Bodies: 359

காயப்பட்டவர்கள்- Critically Injured: 572

Source: http://www.thereligionofpeace.com

8. கடந்த இரண்டு மாதங்களில் 2521 பேர் மரித்துள்ளனர், 4060 பேர் காயப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்கள் முக்கியமாக இந்தியா, பாகிஸ்தான், ஈராக், சொமாலியா, ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நடந்துள்ளது. பெரும்பானமையாக முஸ்லீம் நாடுகளில் தாக்குதல்கள் நடத்தப்படுகிறது.

Source: http://www.thereligionofpeace.com/index.html#Attacks

9. இது வரை எத்தனை தாக்குதல்கள் நடந்துள்ளது, எத்தனை பேர் மரித்துள்ளார்கள், காயப்பட்டுள்ளார்கள் போன்ற விவரங்களை கிழ்காணும் தொடுப்பில் காணலாம்.

Source: http://www.thereligionofpeace.com/attacks-2007.htm

Friday, December 4, 2015

அல்லாஹ் அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்


ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா

இயேசுவின் மரணம் மற்றும் அவரின் உயிர்த்தெழுதல் கிறிஸ்தவத்தின் அடிப்படை அஸ்திபாரம். இந்த அஸ்திபாரத்தைப் பற்றி குர்-ஆன் வித்தியாசமான விவரங்களை தருகிறது, அதை அலசுவது தான் இக்கட்டுரை. தமிழில் சில வரிகள் புரியவில்லையானால், ஆங்கிலத்தில் படிக்கும்படி வேண்டுகிறேன். இக்கட்டுரையை ஆங்கிலத்தில் இங்கு படிக்கலாம்.
ஆசிரியர் சிறுகுறிப்பு: டேவிட் உட் (David Wood)  ஒரு முன்னாள் நாத்தீகர். ஆனால், இப்போது இயேசுவை விசுவாசிப்பவர். இவரின் சிறப்பம்சம் "நாத்தீகர்களோடு விவாதம் புரிவது". முக்கியமாக infidels.org என்ற நாத்தீக தளத்தின் கட்டுரைகளுக்கு இவர் பதில்(http://answeringinfidels.com/) எழுதுகிறார். தற்போது, "Problem of Evil" என்ற தலைப்பில் இவர் Ph.D செய்துக்கொண்டு இருக்கிறார். இவர் சில இஸ்லாமிய காட்டுரைகளும் எழுதியுள்ளார். இந்த தற்போதைய கட்டுரை Answering Islam.Org என்ற தளத்தில் படித்து, அதை தமிழில் மொழிபெயர்க்க அனுமதி கேட்டேன். அவர் உடனே கொடுத்ததுமன்றி, Answering-islam.org   தளத்தில் உள்ள அவர் எல்லா கட்டுரைகளுக்கும் அனுமதி அளித்துள்ளார். அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர் ஒரு இஸ்லாமியரோடு
முகமது யார் – Who is Muhammad" என்ற தலைப்பில் புரிந்த விவாத DVD amazon ல் கிடைக்கிறது. மற்றும் அவருடைய மற்ற விவாதங்கள், இஸ்லாமிய கட்டுரைகள், மறுப்புக்கள், நாத்தீகரோடு புரிந்த நேரடி விவாதங்கள் வீடியோக்களை கீழ்கண்ட தளங்களில் காணலாம்.
1. http://www.answering-islam.org/Authors/Wood/index.htm
2. http://www.problemofevil.org/
3. http://answeringinfidels.com/
4. http://www.answeringmuslims.com/

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா
அல்லாஹ்வைப் பற்றியும், இயேசுவைப் பற்றியும் உண்மையில் இஸ்லாம் என்ன போதிக்கிறது


எழுதியவர்: David Wood


கிட்டத்தட்ட் இரண்டாயிரம் ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் இயேசுவின் மரணம் மற்றும் அவர் உயிர்த்தெழுதலைப் பற்றி சொல்லிக் கொண்டுவருகிறார்கள். இந்த இரண்டு கோட்பாடுகளையும் இஸ்லாம் தள்ளிவிட்டது மற்றும் சிலுவை நேரத்திலும், அதன் பிறகும் என்ன நடந்தது என்று வேறு வகையான நிகழ்ச்சி நிரலை சொல்கிறது. எப்படி இருந்தாலும், இஸ்லாம் தன் சொந்த விளக்கத்திற்காக அதிக விலை செலுத்தியுள்ளது. அவர்களின் இந்த விளக்கம் "இறைவனை ஒரு கொடுமையான ஏமாற்றுக்காரராக காட்டுகிறது" மற்றும் தீர்க்கதரிசிகளின் சரித்திரத்திலேயே இயேசு "படுதோல்வி" அடைந்தவராக காட்டுகிறது. இப்படி இருந்தும், "அல்லாஹ் உண்மையுள்ளவர்" மற்றும் இயேசு அல்லாஹ்வின் தீர்க்கதரிசிகளில் எல்லாம் மிகச்சிறந்தவர் என்று மதிக்கப்படுகிறார் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். அவர்களின் இந்த வாதங்கள் அனைத்தும் குறையுள்ளது, ஏனென்றால், இஸ்லாமிய கோட்பாடுகள் அனைத்தும் பெரும்பான்மையாக வாய்வழி மரபுகளாகவே வருகிறது.
 
Allah starts Christianity…. By Accident
(அல்லாஹ் தற்செயலாக உருவாக்கிய கிறிஸ்தவம்)

இஸ்லாமிய போதனைகளை நாம் கூர்ந்து ஆராய்ந்தால், கிறிஸ்தவத்தை அல்லாஹ் உருவாக்கியதாகவும், மட்டுமல்ல, கிறிஸ்தவத்தை உலகத்தின் மிகப்பெரிய அதிகாரமுடைய மதமாக மாற்றியதாகவும் நாம் கவனிக்க முடியும். இந்த உண்மை எல்லாருக்கும் ஏதோ புதுமையாக தோன்றும், நான் சொல்வதை நம்புங்கள், இஸ்லாமியர்களோ "கிறிஸ்தவம் ஒரு தவறான மதம்" என்று சொல்கிறார்கள். கிறிஸ்தவம் மனிதர்களால் மாற்றப்பட்டதால், அது ஒரு பிழையான மதம் என்று இஸ்லாமியர்கள் பதில் சொல்கிறார்கள். இதே செய்தியைத்தான் அல்லாஹ் மரியமின் மகனான இயேசுவிற்குச் சொன்னார்.

இயேசுவை பின்பற்றியவர்கள்(சீடர்கள்) இப்போதுள்ள இஸ்லாம் போல ஒரு கோட்பாட்டை நம்பியதாக ஒரு சிறு ஆதாரமும் இல்லை. இது ஒரு புறமிருக்க, இஸ்லாம் படி, கிறிஸ்தவத்தை திருத்தியதே அல்லாஹ் தான்.  இஸ்லாம் ஏன் நம்மை இப்படி நம்பச்சொல்கிறது என்று புரிந்துக்கொள்ளவேண்டுமானால், நாம் சில உண்மைகளை தெரிந்துக்கொள்ளவேண்டும்.
FACT #1: இயேசு அல்லாஹ்வின் தூதர் என்றும், இஸ்லாமின் தீர்க்கதரிசி(நபி) என்றும் குர்-ஆன் கூறுகிறது:
இயேசு பிறந்த குழந்தையாக இருந்த நாளிலிருந்தே இஸ்லாமிய கோட்பாடுகளை(Islamic Theology) போதித்துவந்தார் என்று குர்-ஆன் அதிகாரம்(சூரா) 19 சொல்கிறது.
பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது "இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா" என்று கூறி(அரற்றி)னார். (19:23) (அப்போது ஜிப்ரயீல்) அவருக்குக் கீழிருந்து "(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்" என்று அழைத்து கூறினான். (19:24) "இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும். (19:25)

"ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், 'மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்" என்று கூறும். (19:26)

"நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான். (19:30)

"இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கினாவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்கு வஸீயத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான். (19:31)

"என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. (19:32)

"இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்" என்று (அக்குழந்தை) கூறியது. (19:33) [2]

இயேசு தன் வாழ்நாள் முழுவதும், அதாவது அல்லாஹ் அவரை  தன் அளவில் உயர்த்திக்கொள்ளும்வரை இந்த இஸ்லாமிய கோட்பாடுகளை போதித்துவந்தார். குர்-ஆன்படி இயேசு கொண்டுவந்த இஞ்ஜில் என்ற வேதத்தின் செய்தியும், தனக்கு முன் வந்த தீர்க்கதரிசிகள் கொண்டுவந்த செய்தியும் வெவ்வேறானவை அல்ல. இயேசு அல்லாஹ்வின் ஊழியனாகவும், நபியாகவும் இருந்து இஸ்லாமை போதித்தார்.

நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்; "நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்' என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.(42:13) [3]

அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம். (43:59) இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது "மெய்யாகவே நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக் கூறுவேன் - ஆகவே நீங்கள் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; எனக்கும் கீழ்படியுங்கள்" என்று கூறினார். (43:63) நிச்சயமாக, அல்லாஹ்தான் எனக்கும் இறைவன், உங்களுக்கும் இறைவன். ஆகவே அவனையே வணங்குங்கள், இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி). (43:64) [4]
ஆக, இயேசு தான் பிறந்ததிலிருந்து, வானத்திற்கு அல்லாவிடம் எடுத்துக்கொள்ளப்படும் காலம் வரை, கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் இஸ்ரவேல் மக்களுக்கு இஸ்லாமை போதிப்பதில் செலவழித்தார். அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு கொண்டுபோகப்படும் முன்பு வரை அவருடைய இஸ்லாமிய பிரச்சாரம் ஓரளவிற்கு வெற்றிப்பெற்றதாக இருந்தது என்றுச் சொல்லலாம். ஏனென்றால், அவரை பின்பற்றுகிற பல சீடர்கள் அவருக்கு இருந்தார்கள் என்பதை நாம் இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.

FACT #2: இயேசு பல சீடர்களை சம்பாதித்தார் என்று குர்-ஆன் சொல்கிறது.

இயேசு தன் வாழ்நாள் முழுவதும் இஸ்லாமை போதித்தபடியால், அவருடைய ஆரம்பகால சீடர்களுக்கு அவர் கொடுத்த செய்தி, இஸ்லாமின் அடிப்படை கோட்பாடுகளைச் சுற்றியே இருந்திருக்கும். இப்போதுள்ள முஸ்லீம்கள் போல அவருடைய சீடர்கள் போதிக்கப்பட்டு(அ) கற்றுக்கொடுக்கப்பட்டு இருப்பார்கள். இதைத் தான் இஸ்லாம் (குர்-ஆன்) இயேசுவைப்பற்றி கீழ்கண்டவாறுச் சொல்கிறது:
அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது, "அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?" என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்; "நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்;. திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்" எனக் கூறினர். (3:52) [5]

"என் மீதும் என் தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்" என்று நான் ஹவாரிய்யூன் (சீடர்)களுக்கு தெரிவித்தபோது, அவர்கள், "நாங்கள் ஈமான் கொண்டோம், நிச்சயமாக நாங்கள் முஸ்லீம்கள் (அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்" என்று கூறினார்கள். (5:111) [6]
அன்றியும், திடமாக நாமே நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம், இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம், (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு, எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக இருந்தனர். (57:26)[7]
குர்-ஆன் சொல்வது உண்மையானால், இயேசு குறைந்தபட்சம் சில இஸ்ரவேல் மக்களையாவது இஸ்லாமுக்கு மாற்றியிருப்பார். ஆனால், இப்படிப்பட்ட மாற்றம் நடந்தது என்று ஒரு சரித்திர ஆதாரமும் இல்லை. இருந்தாலும் விவாதத்திற்காக வேண்டி, இயேசுவின் இஸ்லாமிய போதனைகளை விசுவாசித்த முதல் நூற்றாண்டு யூதர்கள் முஸ்லீம்களாக மாறினார்கள் என்று நாம் எண்ணிக்கொள்வோம். இப்படிப்பட்ட யூகம், இஸ்லாமுக்காக வாதாடுபவர்களுக்கு எதிராக பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும் என்று இனி நாம் பார்க்கப்போகிறோம்.
FACT #3: இயேசுவின் போதனையைக்கேட்டு முதல் நூற்றாண்டு யூதர்கள் இஸ்லாமியர்களாக மாறியிருந்தாலும், அவர்களின் இஸ்லாமிய நம்பிக்கை அதிக நாட்கள் நீடிக்கவில்லை.
இயேசுவின் சீடர்கள் முஸ்லீம்களாக இருந்தார்கள் என்ற வாதம் ஒரு தெளிவான கேள்வியை எழுப்பக்கூடியதாக உள்ளது. முதல் நூற்றாண்டில் முஸ்லீம்கள் இருந்தார்கள் என்பதை ஏன் நாம் ஒரு முறைகூட கேள்விப்பட்டதே இல்லை? இயேசுவை முதல் நூற்றாண்டில் பின்பற்றியவர்ககளைப்பற்றி அதிகபடியான சரித்திர விவரங்கள் இன்று நம்மிடம் உள்ளது, ஆனால், முஸ்லீம்கள் பற்றிய ஒரு ஆதாரமும் ஏன் நம்மிடம் இல்லை? இயேசுவை பின்பற்றிய கிறிஸ்தவ அல்லாத மார்க்க(இஸ்லாம் சம்மந்தப்பட்ட) எல்லா விவரங்களையும் கிறிஸ்தவம் துடைத்துவிட்டது என்று இஸ்லாமுக்காக வாதாடுபவர்கள் இதற்கு பதிலாக சொல்வார்கள். ஆனால், அவர்களின் இந்த பதில் வெறும் அறிவீனமான வாதமே ஒழியவேறில்லை. கிறிஸ்தவத்திற்கு முந்தைய நம்பிக்கைகளைச் சொல்லக்கூடிய கிறிஸ்தவ மற்றும் கிறிஸ்தவம்-அல்லாத நிறைய ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன. ஆனால், கிறிஸ்தவ மற்றும் கிறிஸ்தவத்திற்கு வெளியே என இந்த இரண்டு விதமான ஆதாரங்களிலும்  ஒரு "முஸ்லீம்-கிறிஸ்தவன்" இருந்ததாக ஒரு தகவலும் இல்லை. ஒன்று மட்டும் நாம் நிச்சயமாகச் சொல்லலாம், அதாவது "இயேசுவின் மரணம்" பற்றிய விவரம் அந்த காலத்து அதிகாரிகளுக்கு தெரிந்தவிவரமாக இருந்தது. மற்றும் இயேசுவின் ஆரம்பகால சீடர்களாகிய பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் போன்றவர்களுக்கு கூட இயேசு தங்கள் பாவங்களுக்காக மரித்தார் என்றும் பிறகு உயிர்த்தெழுந்தார் என்றும் அவர்கள் நம்பினர். (இது மட்டுமல்ல இயேசுவின் சீடர்கள் இயேசு ஒரு தேவகுமாரன் என்று நம்பினர், இது இப்போதைக்கு என் கட்டுரையின் கருப்பொருள் அல்ல) இயேசு மரித்தார் மறுபடியும் உயிர்த்தெழுந்தார் என்று ஆரம்பகால கிறிஸ்தவர்கள் நம்பினார்கள் என்று புதிய ஏற்பாட்டின் நான்கு சுவிசேஷங்களிலிருந்தும், அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்திலிருந்தும் நாம் தெரிந்துக்கொள்கிறோம். பவுல் எழுதிய கடிதங்கள் கூட இயேசுவின் மரணம் உயிர்த்தெழுதல் பற்றி அடிக்கடி குறிப்பிடுவதை காணலாம். மட்டுமல்ல, இயேசுவிற்கு பிறகு வாழ்ந்த கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை நாம் 1 கொரிந்தியர் 15ம் அதிகாரத்தில் காணலாம். எனவே இயேசுவின் சீடர்கள்(அப்போஸ்தலர்கள்) காலத்தில் நிலவிய அவர்களின் நம்பிக்கைக்கு இது ஒரு அத்தாட்சியாகக் கொள்ளலாம்.

நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்[8]

இயேசுவின் சீடர்களின் நம்பிக்கையைப் பற்றிச் சொல்கின்ற புதிய ஏற்பாடு அல்லாத மற்ற கிறிஸ்தவ ஆதாரங்களும் (Early Christian Writings) இன்று நம்மிடம் உள்ளது.

உதாரணத்திற்கு: அப்போஸ்தர் பேதுரு "ரோம பேராயராக" நியமித்த " ரோம் கிளமண்ட்(Clement of Rome)" என்பவர் கூட பல முறை அப்போஸ்தர்களின் நம்பிக்கையாகிய "இயேசுவின் மரணம் மற்றும் அவரது உயிர்த்தெழுதல்" பற்றி பலமுறை எழுதியுள்ளார்[9]. அப்போஸ்தலர் யோவான் நியமித்த போலிகார்ப்(Polycarp), என்பவரும் இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி பலமுறை எழுதியுள்ளார் [10]. இன்னும் பல "கிறிஸ்தவ அல்லாத ஆதாரங்கள்(Non-Christian Writings)" இயேசுவைப் பற்றியும், அவரது அப்போஸ்தலர்கள் பற்றியும் மிக முக்கியமான விவரங்களைச் சொல்கின்றன. யூத சரித்திர ஆசிரியர் "ஜோசபாஸ் (Josephus)" மற்றும் ரோம சரித்திர ஆசிரியர் டாசிடஸ்(Tacitus) இவர்களின் விவரங்களின்படி, இயேசு பொந்தியுஸ் பிலாத்து (Pontius Pilate) என்பவர் ஆட்சிசெய்யும் போது சிலுவையில் அறையப்பட்டார்[11]. ஒரு கிரேக்க நகைச்சுவை(Satirist) எழுத்தாளர் "Lucian of Samosata" என்பவர் இவ்விதமாகச் சொல்கிறார், "இன்று கிறிஸ்தவர்கள் என்பவர்கள் ஒரு மனிதனை வணங்குகிறார்கள், இவர்களுடைய எல்லா நம்பிக்கைக்கும் அவர் தான் காரணர் மற்றும் இதனாலேயே அவர் சிலுவையில் அறையப்பட்டார் "[12]. அவ்வளவு ஏன், யூதர்களின் தால்மூட் (Talmud) கூட இயேசுவின் சிலுவையில் அறையப்படுதலைப் பற்றிச் சொல்கிறது[13].

எனவே, குர்-ஆன் சொல்லும் (1) இயேசு மரிக்கவில்லை, (2) இயேசுவின் சீடர்கள் முஸ்லீம்களாக இருந்தார்கள் என்ற வாதம் தவறானது என்று நாம் நிச்சயமாகச் சொல்லலாம்.

உண்மை இப்படி இருந்தாலும், வாதத்திற்காக வேண்டி, முதல் நூற்றாண்டில் குறிப்பிட்ட அளவிற்கு முஸ்லீம்கள் இருந்ததாகவும், அவர்களுடைய விவரங்கள் சம்மந்தப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும், பின்பு வந்த கிறிஸ்தவர்கள் அழித்துவிட்டதாகவும் நினைத்துக்கொள்வோம் . நாம் மேலே சொன்னது போல வித்தியாசமான கற்பனையை(Outlandish Assumption) நினைத்துக்கொண்டாலும், இதனால், முஸ்லீம்களுக்கு நிறைய பிரச்சனைகள் எழுகின்றன:
1. இந்த முதல் நூற்றாண்டு முஸ்லீம்கள் என்ன ஆனார்கள்? 2. ஏன் இயேசுவின் தியாக மரணம் மற்றும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கை, இஸ்லாம் நம்பிக்கையை மாற்றிவிட்டது?3. ஏன் இயேசுவின் 33 வருடகால இஸ்லாமிய போதனை ஒரு நம்பிக்கையாக மதிக்கப்படாமல் அழிந்துவிட்டது?

இந்த கேள்விகளுக்கு வழக்கம் போல "கிறிஸ்தவர்கள் இயேசுவின் போதனையை மாற்றிவிட்டார்கள், மற்றும் கிறிஸ்தவ குருக்கள் இயேசுவின் இஸ்லாமிய போதனையை மொத்தமாக அழித்துவிட்டார்கள்" என்று இஸ்லாமியர்கள் பதில் சொல்வார்கள். ஆனால், ஒரு உண்மையான முஸ்லீம் இதை ஏற்றுக்கொள்ளமாட்டான், காரணம் இது இயேசுவிற்கு என்ன நடந்தது என்று குர்-ஆன் சொல்வதை மறைத்துவிடுகிறது.

FACT #4: "இயேசு சிலுவையில் மரித்தார்" என்று மக்கள் அனைவரும் நம்பும்படி அல்லா எல்லா மக்களையும் ஏமாற்றினார் என்று குர்-ஆன் சொல்கிறது

குர்-ஆனின் கூற்றுப்படி, இயேசு சில யூதர்களை முஸ்லீம்களாக மாற்ற அவரால் முடிந்தது என்று அறியலாம். ஆனால், இயேசுவின் சீடர்கள் அல்லது அவரை பின்பற்றியவர்கள், அவரின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நம்பினார்கள் என்று சரித்திரத்தின் மூலமாக நாம் அறிந்துக்கொள்ளலாம். இருந்தாலும், இயேசு வானத்திற்கு எடுத்துக்கொண்ட பிறகு ஏன் "ஒரு முஸ்லீம் கூட" இல்லை? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு பதில் என்னவென்றால், இயேசுவை பின்பற்றிய எல்லாரும் "இயேசு சிலுவையில் மரித்தார் என்றும் அவர் மறுபடியும் மரித்ததிலிருந்து உயிரோடு எழுந்தார்" என்றும் நம்பினார் என்பதேயாகும்.
சரி, இவர்களுக்கு "இயேசு சிலுவையில் மரித்தார்" என்ற ஐடியாவை(விவரத்தை) யார் கொடுத்தது? இஸ்லாம் கூற்றுப்படி, "இயேசு சிலுவையில் மரித்தார்" என்ற ஐடியாவை ஆரம்பித்தவரே(கொடுத்தவரே) அல்லாஹ் தான். இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. (4:157) ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். (4:158) [14]
இயேசுவை கொல்ல நினைத்தவர்களை மட்டும் ஏமாற்ற வேண்டும் என்பது தான் அல்லாவின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கும் என்று நாம் நினைத்தாலும், இயேசுவின் சீடர்களும் அல்லாவால் ஏமாற்றப்பட்டனர் என்பதை நாம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் புரிந்துக்கொள்ளலாம். அப்படியானால்,

இயேசு சிலுவையில் மரித்தார் என்ற கிறிஸ்தவ நம்பிக்கைக்கு யார் பொறுப்பு? 

இஸ்லாம்(குர்-ஆன்) சொல்வது உண்மையான தகவலாக இருக்குமானால், இயேசுவின் எதிரிகள் அவரை கொன்றுவிட்டோம் என்ற எண்ணம் அவர்களுக்கு வரவேண்டும் என்று அல்லாஹ் அவர்களை ஏமாற்றுவதற்கு முடிவு செய்தார். அதனால், " இயேசு சிலுவையில் மரித்தார்" என்ற ஐடியா அல்லது நம்பிக்கை வருவதற்கு காரணமே அல்லாஹ் தானே! இது இன்னும் பல பிரச்சனைகளை உருவாக்கிவிடும். இயேசுவின் சீடர்கள் ஏமாற்றப்பட்டது "தற்செயலாக(unintentional) அல்லது ஒரு விபத்தாக நடந்தது" என்று சொல்வீர்களானால், நாம் இந்த முடிவுக்கு வரலாம், அது என்னவென்றால், "உலகத்தில் மிகப்பெரிய ஒரு பொய்யான மதம் உருவாகப்போகிறது" என்பதை அல்லாஹ் அறியாமல் இதை செய்தார் என்று நாம் முடிவு செய்யலாம். இல்லை, அல்லா இதை தெரிந்தே வேண்டுமென்றே செய்தார் என்று சொன்னால், அல்லாவிற்கு பொய்யான மதங்களை உலகத்தில் உருவாக்கும் வியாபாரம் உள்ளது என்று முடிவு செய்யலாம் . இது உண்மை எனில்,  இஸ்லாமின் இறைவனாகிய அல்லாஹ் ஒரு சின்ன விஷயத்தை கூட சரியாக செய்யத்தெரியாத "அறியாமையில்" இருக்கிறார் என்று முடிவு செய்யலாம், அல்லது "அவர் தெரிந்தே ஏமாற்றக்கூடியவர்" என்ற முடிவிற்கு வரலாம். 

முஹம்மதுவின் கூற்றுப்படி தீர்க்கதரிசிகளின் சரித்திரத்திலேயே இயேசுவின் ஊழியம் ஒரு மிகப்பெரிய தோல்வியை அடைந்தது. இயேசு 33 ஆண்டுகள் இஸ்லாமிய போதனையை போதிப்பதில் கழித்தார் (அதிலும், அவர் குழந்தையாக இருந்ததிலிருந்தே இஸ்லாமிய கோட்பாடுகளை போதித்தார் என்று இஸ்லாம் கூறுகிறது), அப்படியிருந்தும், அவர் மரித்த சில நாட்களுக்குள் இஸ்ரவேல் மக்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிந்தனர். முதல் பிரிவு மக்கள் இயேசுவின் போதனை கேட்டவர்கள் "கிறிஸ்தவர்களாக" மாறிவிட்டனர், இவர்கள் கற்பனைகூட செய்யமுடியாத பாவமான "ஷிர்க் - SHIRK"[15] என்ற பாவத்தை செய்தவர்களாயினர். இரண்டாம் பிரிவு மக்களாகிய இவர்கள் "இயேசுவின் போதனைக்கு" கீழ்படியாததினால், இவர்களும் "இறைவனின் மிகப்பெரிய தீர்க்கதரிசியை" தள்ளிவிட்ட அல்லது நம்பாத பாவத்திற்கு ஆளானார்கள். ஆக, இயேசுவை நம்பினவர்கள், இயேசுவை நம்பாதவர்கள் இந்த இரு பிரிவினரும் கடைசியில் நரகநெருப்பில் பங்கடைய அல்லாவால் தண்டனைக்கு உட்பட்டார்கள். இப்படியிருந்தும், முஸ்லீம்கள் "இயேசு தீர்க்கதரிசிகளிலேயே சிறந்தவர்" என்றுச் சொல்வது மிகவும் ஆச்சரியத்தைத் தருகிறது. அதாவது, இயேசு, கடைசி வரை முஸ்லீமாக இருக்கக்கூடிய ஒருவரையாவது "சம்பாதித்து" இருந்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிப்பட்ட ஒருவரையும் இஸ்லாமுக்கு மாற்றவில்லை. மட்டுமல்ல, ஒரு இஸ்லாம் தீர்க்கதரிசியாக, இயேசு, அல்லாவின் ஏமாற்றும் செயலில் தன் சீடர்களாகிய நீங்கள் ஏமாறக்கூடாது என்று அவர்களை எச்சரித்து இருந்திருக்கலாம். ஆனால், இயேசு தன் ஊழிய நாட்கள் அனைத்திலும் இப்படிப்பட்ட எச்சரிக்கை செய்தியை அல்லாஹ்விடமிருந்து பெறவில்லை, அதனால், தன்னை பின்பற்றியவர்களுக்கு இதைப் பற்றி சொல்லவில்லை.
இதன் பலனாக, உலகத்தின் கோடான கோடி மக்கள், இப்போது இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர், ஏனென்றால், இயேசு தங்கள் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் என்று அவர்கள் நம்புகின்றனர். ஏன் இவர்கள் இப்படி நம்புகின்றனர் என்றால், இந்த செய்தியை முதலாவது பரப்பியதே "ஏமாற்றும் இறைவனாகிய" அல்லாஹ்வும், படுதோல்வி அடைந்த மஸிஹாவுமே.
Allah Spreads the False Religion He Accidentally Started

தற்செயலாக ஆரம்பித்த பொய்யான மதத்தை, அல்லாஹ் எங்குப் பரவச்செய்தார்


இஸ்லாமின் போதனையை நாம் கூர்ந்து கவனித்தால், அல்லாஹ் "கிறிஸ்தவ மார்க்கத்தை" தெரிந்தோ அல்லது தெரியாமலோ(intentionally or unintentionally) துவக்கினார் என்ற முடிவிற்கு வரலாம். அதோடு மட்டும் குர்-ஆன் நின்றுவிடவில்லை. தான் செய்த குழப்பத்தை சரி செய்வதை விட்டுவிட்டு, அல்லா "கிறிஸ்தவ மார்க்கத்தை" அடுத்த நிலைக்கு கொண்டுச் செல்கிறார். 


FACT #5: கிறிஸ்தவ மார்கம் வளர்ச்சி அடைய அல்லா உதவியதாக குர்-ஆன் சொல்கிறது

இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் என்ற நம்பிக்கைக்கு அடித்தளம் அல்லா அமைத்ததோடு மட்டுமல்லாமல், அந்த பொய்யான செய்தியை(False Message) கிறிஸ்தவர்கள் பரப்புவதற்கும் மிகவும் நேர்த்தியாக அல்லாஹ் உதவினார்.

ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?" எனக் கேட்க, சீடர்கள், "நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்" என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் - எனினும்,
இஸ்ராயீலின் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது, பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது, ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் - அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள். (61:14) [16]

இந்த வசனம் மிகவும் முக்கியமான வசனம். இயேசுவின் போதனையை தள்ளிவிட்ட யூதர்களுக்கு எதிராக, அல்லாஹ் இயேசுவை பின்பற்றியவர்களுக்கு(சீடர்களுக்கு) உதவி செய்ததாக இந்த வசனம் சொல்கிறது . மற்றும் இந்த வசனத்தின்படி "இயேசுவின் சீடர்கள் வெற்றியாளர்கள் ஆகிவிட்டார்கள்" என்று குர்-ஆன் சொல்கிறது. எனவே, யூதர்களை விட மிகவும் வலிமைவாய்ந்தவர்களாக மாறிய மற்றும் இயேசுவை பின்பற்றியவர்களாகிய இவர்கள் யார்? இந்த விவரத்திற்கு சரியாக பொருந்துகிறவர்கள் சரித்திரத்தின் படி "ஆதி கிறிஸ்தவர்கள் - orthodox Christians" தான், இவர்களின் நம்பிக்கை "இயேசுவின் மரணத்தின் மீதும், அவர் உயிர்த்தெழுதலிலும், அவருடைய தெய்வீக தன்மையின்" மீதும் இருந்தது. இயேசுவின் போதனை மாற்றப்பட்டது என்றும், உண்மை சுவிசேஷம்(இஞ்ஜில் Gospel) துடைக்கப்பட்டது என்றும் இஸ்லாமியர்கள் இப்போது வாதிக்கமுடியாது, ஏனென்றால், இந்த மக்கள் கூட்டம் குர்-ஆன் வசனம் சொல்லும் மக்கள் அல்ல. ஒருவேளை குர்-ஆன் சொல்வது படி, முதல் நூற்றாண்டில் "முஸ்லீம்-கிறிஸ்தவ" கூட்ட மக்கள் இருந்ததாக ஏற்றுக்கொண்டாலும், அவர்கள் மற்றவர்களின் மீது வெற்றியுள்ளவர்களாக இருக்கவில்லை . அவர்கள் மிக சீக்கிரமாக துடைத்துவிடப்பட்டார்கள். இயேசுவை பின்பற்றியவர்களில், யூதர்களை விட அதிகமாக வலிமையானவர்கள், பிரகாசித்தவர்கள் கிறிஸ்தவர்களே. ரோம சாம்ராஜ்ஜியத்தில் அதிகமாக பரவியது இந்த கிறிஸ்தவமே. இந்த கிறிஸ்தவர்களின் அடிப்படை நம்பிக்கை, இன்று உள்ள கிறிஸ்தவர்களின் நம்பிக்கையைப் போலவே இருந்தது. ஆக, குர்-ஆன் வசனத்தின் படி இந்த கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வர அல்லாh உதவியாக இருந்தார் அதாவது வெற்றியாளர்களாக மாற்றினார்.

பின் எப்படி, கிறிஸ்தவம் வளர்ந்து, உலகத்தின் மிகப்பெரிய மதமாக மாறியது? இது அல்லா ஹ்வின் வல்லமை சக்தியினால் வளர்ந்தது! மற்றும் கிறிஸ்தவ அடிப்படை செய்தியாகிய "இயேசு சிலுவையில் மரித்தார்" என்ற செய்தியை உருவாக்கியது யார்? இறைவன்(அல்லாஹ்) தான் இந்த செய்தியை கண்டுபிடித்தார்(Invented). கிறிஸ்தவம் அல்லாத சரித்திர ஆசிரியர்கள் (non-Christian historians) கூட இயேசுவின் மரணம் ஒரு நிரூபிக்கப்பட்ட ஆதாரமாக உள்ளது என்று ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்கு, இந்த செய்தி பரவியிருக்கிறது[17]. இந்த சரித்திர ஆசிரியர்களுக்கு இந்த செய்தி எப்படி கிடைத்தது? அவர்கள் இதை இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்டனர். பல மக்கள் "இயேசு சிலுவையில் மரித்தார்" என்று நம்பும்படி செய்ய அல்லா தான் காய்நகர்த்தினார். அதனால், இந்த நிகழ்ச்சியைப் பற்றிய பல ஆதாரங்கள் நம்மிடம் உள்ளது. தற்போதுள்ள கணக்குப்படி, கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் கிறிஸ்தவர்கள் இப்போது உலகத்தில் இருக்கிறார்கள். இஸ்லாமின் மீது அதிகாரம் செலுத்தும் உலக மதமாக கிறிஸ்தவம் ஆரம்பித்ததற்கு பொறுப்பு இயேசுவும், அல்லாஹ்வுமே வகிக்கவேண்டும்.

 
If Islam Is True . . .
(இஸ்லாம் உண்மையாக இருந்தால்...)


இஸ்லாமின் கருத்து பல பிரச்சனைகளை உருவாக்குகிறது என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன். இறைவன் பல பில்லியன் மக்களை ஏமாற்றினார் என்று இஸ்லாம் நம்மை நம்பச் சொல்கிறது. இது மட்டுமல்ல, இயேசுவின் சீடர்களும் "இயேசு சிலுவையில் மரித்தார்" என்று நம்பும்படிச்செய்து அவர்கள் இறைவனின் வழியைவிட்டு விலக அல்லாஹ் காரணமானார். அல்லாஹ் மக்களை ஏமாற்ற வேண்டும் என்று திட்டம் தீட்டாமல் இருந்திருந்தால், இதை தவிர்த்து இருந்திருக்கலாம். அதனால், இது நிறைய கேள்விகளை எழுப்புகிறது:
உண்மையில் "இயேசு சிலுவையில் மரிக்காமல் இருக்கும்போது" ஏன் இயேசு சிலுவையில் மரித்தார் என்று மக்கள் நம்பவேண்டும் என்று அல்லா நினைத்தார்?

இயேசுவை யூதர்களின் மற்றும் ரோம அதிகாரிகளின் கைகளிலிருந்து காப்பாற்றவே இப்படி அல்லாஹ் செய்தார் என்று முஸ்லீம்கள் வாதம் புரியமுடியாது, ஏனென்றால், அல்லாஹ் "இயேசுவை பாதுகாப்பாக" தன் அளவில் எடுத்துக்கொண்டு அவருக்கு பாதுகாப்பு அளித்துவிட்டாரே. ஏன் இயேசுவின் எதிரிகள் "இயேசு மரித்துவிட்டார்" என்று நம்பி நிம்மதியடைய அல்லாஹ் அனுமதித்தார்? ஏன் அல்லாஹ் யாரையும் ஏமாற்றாமல், இயேசுவை அப்படியே எல்லாருக்கும் முன்பாக தன் அளவில் உயர்த்திக்கொள்ளவில்லை? இப்படி இயேசுவை எடுத்துக்கொண்டு இருந்தால், இப்படி பல மக்களை ஏமாற்றவேண்டிய அவசியமே இருந்திருக்காதே? ஆனால், அல்லாஹ்வின் இந்த ஏமாற்றுச் செயல், கிறிஸ்தவம் உருவாக காரணமாகி விட்டதே!

கிறிஸ்தவம் இப்படித் தான் ஆரம்பித்தது என்று இஸ்லாம் நம்மை நம்பச் சொல்கிறது, இது நம்மால் ஜீரணிப்பதற்கு மிக கடினமாக உள்ளது. இஸ்லாம் சொல்வது உண்மையானால், தன் தீர்க்கதரிசிகளை நம்பின மக்களை அல்லாஹ் ஏமாற்றினார் என்பது தெளிவாகிறது. இஸ்லாம் சொல்வது உண்மையானால், அல்லாஹ் ஒரு தவறான செய்தியை(கிறிஸ்தவ செய்தி) ஆரம்பித்து, அது உலகத்தில் மிகப்பெரிய மார்க்கமாகும் வரை அதை வளர்த்தார் என்பது தெளிவாகிறது. இஸ்லாம் சொல்வது உண்மையானால், இயேசு மஸிஹா, திறமையில்லாதவராகவும் இறைவன் அனுப்பாதவராகவும் இருக்கிறார், ஏனென்றால், அவரது வாழ்க்கை யின் முடிவு, பல மக்களை இறைவனின் வழியிலிருந்து விலகச் செய்தது. இப்படி வழிவிலகச் செய்தவர் இயேசுவைத் தவிர ஒருவரும் உலக சரித்திரத்தில் இருக்கமுடியாது. ஏனென்றால், இறைவனின் குணம் எப்படி இருக்கும் என்று எல்லாரும் பொதுவாக நம்பிக்கொண்டு இருக்கிறார்களோ, அப்படி இல்லாமல் இஸ்லாமின் இறைவனைப் பற்றிய பார்வை வித்தியாசமாக உள்ளது. ஒரு சராசரி சிந்திக்ககூடிய மனிதன் தள்ளிவிடுகிற அளவிற்கு இஸ்லாமின் கோட்பாடுகள் குழப்பமாக உள்ளது. கிறிஸ்தவத்தின் ஆரம்பம் என்று இஸ்லாம் சொல்லும் விவரங்கள் மிகவும் வெறுக்கத்தக்கதாக உள்ளது, மற்றும் அறிவுடமை உள்ளதாக இல்லை. இஸ்லாம் என்பது உண்மையானால், கிறிஸ்தவம் இப்போது இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை - If Islam is true, the existence of Christianity makes no sense at all.

(If Islam is true, Jesus, the Messiah, was completely incompetent and should never have been sent by God, since Jesus' life ended up leading more people astray than any other life in history. Because the Muslim view is at odds with any traditional understanding of God's nature (including the Islamic understanding), Islam is an incoherent religious system, which should be rejected by all rational people. Islam has a poor and contemptible explanation for the origin of Christianity. If Islam is true, the existence of Christianity makes no sense at all.)
 
If Christianity Is True . . .
(கிறிஸ்தவம் உண்மையானதாக இருந்தால்...)


அதே நேரத்தில், இஸ்லாம் எப்படி ஆரம்பிக்கப்பட்டது ஏன் ஆரம்பிக்கப்பட்டது என்று கிறிஸ்தவம் தெளிவாகச் சொல்கிறது. ஒரு வேளை கிறிஸ்தவம் உண்மையான மார்க்கமாக இருக்குமானால், இஸ்லாம் ஏன் உருவானது என்பது தெளிவாகப் புரியும்.

ஏன் இப்படிப்பட்ட இஸ்லாம் போன்ற மதம் உருவானது என்று இப்போது உடனே உங்களுக்கு புரியவில்லையானால், கீழே உள்ள சில வரிகளை படியுங்கள், அப்போது புரியும்.
கிறிஸ்தவம் உண்மையாக இருக்குமானால், கீழ் கண்ட வாக்கியங்களும் உண்மையாக இருக்கும்: (1) மக்கள் இயேசு மூலமாகத் தான் இறைவனிடம் வருகிறார்கள்.

(2) சாத்தான் என்ற ஒரு தீயசக்தி மக்களை இறைவனிடமிருந்து பிரித்துவிடுகிறான்.


மேலே உள்ள வரிகளை மனதிலே வைத்துக்கொண்டு, "சாத்தான்" பற்றி ஏதாவது ஒரு சில விவரங்களை கண்டுபிடிக்க முடியுமா என்று நாம் இப்போது சிந்திக்கலாம்.

சாத்தான் மக்களை இறைவனிடமிருந்து தூரப்படுத்தவேண்டும் என்று விரும்பினால், மற்றும் இறைவனிடம் செல்வதற்கு இயேசு வழி என்று அவன் தெரிந்துக்கொண்டால், சாத்தானுடைய குறி எதுவாக இருக்கும்? மக்களை அதிகமாக கெட்டவர்களாக மாற்றுவது அவனின் மிக மிக முக்கிய நோக்கமாக இருக்காது (அவன் இறைவனிடமிருந்து மக்களை பிரிக்க, இப்படியும் மக்களை அதிகமாக தீயகாரியங்கள் செய்யச் செய்வான்), இதற்கு பதிலாக, மக்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது தள்ளிவிடவேண்டும் என்ற எண்ணத்தை அவன் மக்களின் மனதில் பாய்ச்சுவான். இதனால், மக்கள் உண்மை இறைவனிடம் சேராமல் இருக்க வாய்ப்பு உண்டாகும்.

ஆனால், எப்படி சாத்தான் மக்கள் இயேசுவை மறுத்துவிட அவர்கள் நம்பும்படிச் செய்வான்? நாம் ஒன்றை இங்கு கவனிக்கவேண்டும், அது என்னவென்றால், இந்த உலகத்தில் "இறைவன்" பற்றி அக்கறைக் கொள்ளாத அனேகமாயிர மக்கள் உள்ளனர். சாத்தான் அவர்களைப் பற்றி கவலைப்படமாட்டான், ஏனென்றால், இறைவன் மூலமாக வரும் இரட்சிப்பு அல்லது முக்தி பற்றி அவர்களுக்கு அக்கரை இல்லை. சாத்தான் முடிந்த அளவு எவ்வளவு மக்களை இறைவனுக்கு தூரமாக பிரிக்கமுடியுமோ என்று முயற்சி செய்கிறான். முக்கியமாக, ஓர் அளவிற்கு இறைவன் விஷயங்களில் அக்கறை காட்டும் மக்கள் மீது அவன் கண் எப்போதும் இருக்கும் என்று நாம் சொல்லமுடியும். மக்களை இறைவனிடமிருந்து வேறுபடுத்த சாத்தான் இரண்டுவகையான முறையை கையாள்வான்:
ஒன்று "இறைவன் நம்பிக்கை" ஒரு முட்டாள்தனம் என்று நம்பவைப்பான் (இப்போது நாம் உலகத்தில் காண்கின்ற "சமயசார்பற்ற - secularism" கொள்கையை பரப்புவான்)

அல்லது அவன் உண்மைக்கு பதிலாக வேறு ஒரு மார்க்கத்தை கொடுப்பான் (இரட்சிப்பு அல்லது முக்தி அடைய தடையாக இருக்கும் ஒரு மார்க்கம்)

கிறிஸ்தவம் உண்மையானதாக இருக்குமானால், சாத்தான் இயேசுவின் மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் மறுக்கும்படி மதங்களை நம்பும்படிச் செய்வான். சில நேரங்களில் இப்படிப்பட்ட மதங்கள் கிறிஸ்தவத்தைப் போல சில கோட்பாடுகளைக் கொண்டு இருக்கக்கூடும். கிறிஸ்தவம் உண்மையான மார்க்கமாக இருக்குமானால், என்ன நடக்க வாய்ப்பு உள்ளது என்று நாம் இப்போது சரியாக ஊகிக்கமுடியும். இப்போது "இஸ்லாம்" நம்முடைய ஊகத்திற்கு ஏற்றதாக உள்ளதா என்று பார்க்கலாம்.

இஸ்லாமுடைய போதனை இப்படியாக இருக்கும்: "இறைவனை நம்பு, நன்மைகளைச் செய்". நீ அதிக நன்மைகள் செய்தால், உனக்கு சொர்க்கம் நிச்சயமாக கிடைக்கும். இயேசுவை மதிக்கவேண்டும், ஏனென்றால், அவர் அல்லாஹ்வினுடைய சிறந்த நபியாக (தீர்க்கதரிசியாக) இருக்கிறார், அவர் அல்லாஹ்வின் செய்தியை இஸ்ரவேல் மக்களுக்கு போதித்தார். மட்டுமல்ல, இயேசு கன்னியின் வயிற்றில் பிறந்தார் என்றும், அவர் அனேக அற்புதங்கள் செய்தார் என்றும், அவர் தான் "மஸிஹா - Messiah " என்றும் நம்பவேண்டும். ஆனால்,நீங்கள் எதை நம்பினாலும், அவர் உன்னுடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் என்பதை மட்டும் நம்பவேண்டாம். மற்றும் அவர் மரித்ததிலிருந்து உயிரோடு எழுந்தார் என்றும் நீங்கள் நம்பவேண்டாம். முக்கியமாக நீங்கள் செய்யும் மிகப்பெரிய பாவம் என்னவாக இருக்கும் என்றால், இயேசு ஒரு தேவகுமாரன் என்று நம்புவதாகும். இங்கு கவனிக்கவும், இஸ்லாம் இயேசுவின் மற்ற எல்லா காரியங்களையும் ஏற்றுக்கொள்கிறது, ஆனால், மனிதன் இரட்சிக்கப்பட தேவையான முக்கியமான விஷயத்தை மறுக்கிறது. முஸ்லீம்கள் இறைவனை நம்பவேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளனர், ஆனால், சாத்தானும் அவன் கூட்டமும் கூட இறைவனை நம்புகின்றன (For instance, Muslims are commanded to believe in God, but even Satan and his demons believe in God). நல்ல காரியங்களை செய்யும் படி முஸ்லிம்கள் கட்டளையிடப்பட்டுள்ளனர், மற்ற மதங்களிலும் இதே கட்டளை உள்ளது. முஸ்லீம்கள் இயேசுவின் பிறப்பு அற்புதத்தையும், அவர் ஒரு நபி என்றும் இஸ்லாம் நம்பும்படிச் சொல்கிறது, ஆனால், இந்த நம்பிக்கை ஒரு மனிதனை இரட்சிக்காது. ஆக, எப்போது நாம் இயேசுவின் மரணம் உயிர்த்தெழல் போன்ற மனிதன் இரட்சிக்கப்ட தேவையான விவரங்களை சொல்கிறோமோ, அவைகளை மிகவும் கடினமாக இஸ்லாம் எதிர்க்கிறது[19].
Islam, then, looks exactly like the religion we predicted that Satan would form, for it denies what is necessary for people to come to God.
எனவே, கிறிஸ்தவத்தை நம்புகிறவர்கள் இஸ்லாம் போன்ற மார்க்கம் உருவாக வாய்ப்பு உள்ளது என்பதை சுலபமாக எதிர்பார்க்கலாம். பைபிளில் சொல்லப்பட்ட சில தீர்க்கதரிசன வசனங்களை(எதிர் காலத்தில் நடக்கும் என்று சொல்லப்பட்ட வசனங்கள்) நாம் பார்க்கலாம்:

இயேசு சொன்னார்: அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்[20], பவுல் கூட இப்படி சொல்கிறார் :"…சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள் ."[21] (The phrase "deceitful spirit" is reminiscent of the Qur'anic claim that Allah deceived people about the death of Jesus.) உண்மை சுவிசேஷத்தை கெடுக்க பொய் போதகர்களும், தீர்க்கதரிசிகளும் வருவார்கள் என்று, பைபிள் அடிக்கடி போதிக்கிறது. இந்த எச்சரிக்கையை முஹம்மதுவின் காலத்தில் சிலர் கவனித்ததாக தெரிகிறது.
முடிவுரை

Final Thoughts


சரித்திரத்தை சிறிது திரும்பிபார்ப்போமானால் அனேகர் தங்களை தீர்க்கதரிசிகள் என்று சொல்லிக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை கவனிக்கலாம். உண்மையில் இன்று கூட தங்களை தீர்க்கதரிசிகள் என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள், நாளைக்கும் சிலர் வரவாய்ப்பு உள்ளது. ஒரு வேளை எதிர்காலத்திலே ஒரு தீர்க்கதரிசி எழும்பி, தனக்கு இறைவனிடமிருந்து செய்தி வருகிறது என்று சொல்வார் என்று வைத்துக்கொள்வோம்[22]. நிச்சயமாக முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் அவரை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஒரு வேளை இந்த தீர்க்கதரிசி முஸ்லீம்களைப் பார்த்து கீழ்கண்டவாறு சொல்கிறார் என்று நினைத்துக்கொள்வோம்.

"சகோதரர்களே, நீங்கள் முஹம்மதுவின் போதனையை நம்புகிறீர்கள், இதோ நான் சொல்கிறேன், இஸ்லாம் என்பது மக்களை ஏமாற்றுவதற்கு இறைவனால் உருவாக்கப்பட்டது". ஏனென்றால், இஸ்லாமுக்கு முன்பு இருந்த அரேபியர்கள், மிகவும் கொடுமையான பழக்கங்களை கொண்டு இருந்தனர், அதாவது தங்கள் மகள்களை கொன்றுபோட்டனர், மற்றும் நூற்றுக்கணக்கான பெண்களை திருமணம் செய்தனர். இறைவன் அவர்களுக்கு தண்டனை கொடுக்க முடிவுசெய்தார், எனவே, அவர்களை வழிவிலகச் செய்தார், உண்மையை விட்டு பொய்யானவற்றை நம்பும்படிச் செய்தார். இதோ நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். நான் இறைவனின் மிகப்பெரிய நபியாவேன், தீமையிலிருந்து உங்களை காப்பாற்ற வந்துள்ளேன்.

முஸ்லீம்கள் இவரை நம்புவார்களா? நிச்சயமாக நம்பமாட்டார்கள். ஏன் முஸ்லீம்கள் இந்த புதிய நபியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்? முஸ்லிம்கள் அவர் சொல்வதை நம்பமாட்டார்கள் ஏனென்றால், இறைவன் தெரிந்தே பல மில்லியன் மக்களை ஏமாற்றினார் என்று அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இதே போலத்தான் இயேசுவின் மரணத்தின் செய்தியை நம்பினார்கள் முஸ்லீம்கள். ஆக, மக்களை மற்றும் தன் நபியை பின்பற்றிய சீடர்களையும் ஏமாற்றும் இறைவனின் மீது தங்கள் நம்பிக்கையை வைத்தால், தங்களுக்கு நிச்சயமாக உண்மை சொல்லப்பட்டிருக்கும் என்று எப்படி நம்புகிறார்கள். (So if Muslims believe in a God who deceives people, even those who follow his prophets, how can Muslims be confident that they have been given the truth?)

முஸ்லீம்கள் தங்கள் இறைவனைப்பற்றியும், தங்கள் தீர்க்கதரிசிகளைப் பற்றியும் அதிகமாக பெருமையாக சொல்லிக்கொள்வார்கள். ஆனால், நாம் சரியாக ஆராய்ந்துபார்ப்போமானால், இஸ்லாம் மிகப்பெரிய மதத்தின் இறைவனாகிய அல்லாஹ்வை ஏமாற்றுபவன் என்று குற்றம் சாட்டுகிறது. இப்போது நாம் சிறிது நின்று நிதானித்து சிந்திக்கவேண்டும். ஏன் தன்னைப் பற்றி கவுரவமாக பெருமைப்படும் மதம், தன் இறைவன், ஒரு பொய்யான மதத்தை ஆரம்பித்தார் என்று பறைசாற்றுகிறது. ஏன் இயேசுவை மதிக்கிறோம் என்று சொல்லும் மக்கள், அவர் மிகப்பெரிய படுதோல்வி அடைந்தார் என்று சொல்லிக்கொள்கிறார்கள்? இஸ்லாம் மிகவும் வேகமாக கிறிஸ்தவத்தை அழித்துவிட முயற்சி செய்ததாக தெரிகிறது, ஆனால், அதனால், தன்னைத்தானே அழித்துக்கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் இருக்கிறது. வேறு வகையில் சொல்லவேண்டுமானால், இயேசுவின் மரணம் மற்றும் உயிர்தெழுதலைப் பற்றிச் சொல்லும் போது, இஸ்லாம் இறைவனை(அல்லாவை) ஒரு "ஏமாற்றுபவர்" என்று சுட்டிக்காட்டுகிறது. இது இஸ்லாமிய கோட்பாடு இறைவனுக்கு பொருந்தக்கூடியது அல்ல. This desperation only makes sense if Christianity is true, and if Islam was designed by Satan to keep people from being saved.

முஸ்லீம்கள் இவைகள் அனைத்தையும் மறுக்கக்கூடும். அவர்கள் தங்கள் இறைவனுக்கு காட்டும் மதிப்பும், தங்கள் தீர்க்கதரிசிக்கு காட்டும் மரியாதையும் தொடரக்கூடும். ஆனால், அவர்கள் கிறிஸ்தவத்தை விவரிப்பதிலே சில விபரீதங்களைச் சொல்கிறார்கள். இறைவன் உலகத்தை திசைதிருப்பிவிட்டான்(astray) என்று அவர்கள் சொல்வது தான், புதுமையாக உள்ளது. இஸ்லாம் உண்மையாக இருக்குமானால், அல்லாவும், இயேசுவும் தோல்வி அடைந்தவர்கள் என்பது நிச்சயம். ஆனால், கிறிஸ்தவம் உண்மையாக இருக்குமானால், இறைவனும், இயேசுவும் வெற்றிப்பெற்றவர்கள். சிலுவையிலே இரட்சிகப்படுவதற்கான வாசல் திறந்தே இருக்கிறது, தங்கள் கதவுகளை திறக்கமாட்டோம் என்று மூடிக்கொண்டு இருப்பவர்களுக்கும் சேர்த்து.

பொய்யான தீர்க்கதரிசிகள் வருவார்கள் என்று இயேசு தன்னை பின்பற்றினவர்களுக்கு எச்சரித்தார். அவர்களை நம்பவேண்டாம் என்று கட்டளையும் கொடுத்துள்ளார். அவர்களை எப்படி நாம் கண்டுபிடிப்பது என்றுச் சொன்னால், அவர்களுடைய போதனைகள் இறைவனுக்கு தகுதியில்லாத குணத்தை இறைவனுக்கு உள்ளது போல காட்டக்கூடியதாக இருக்கும். இறைவன் உண்மையுள்ளவர், மற்றும் அன்புள்ளவர். இஸ்லாமை நாம் கூர்ந்து ஆராய்ந்தால், இந்த இரண்டும் இறைவனுக்கு இல்லை என்று நம்மை நம்பச்சொல்லும்.

Contact Author David Wood : wood_apologetics@hotmail.com
Notes:1 See Qur'an, 24:25
2 Qur'an 19:23-26, 30-33,
3 Qur'an 42:13.
4 Qur'an 43:59, 63-64.
5 Qur'an 3:52.
6 Qur'an 5:111.
7 Qur'an 57:26.
8 1 Corinthians 15:3-5.
9 See 1 Clement 42:3.
10 See Polycarp, To the Philippians 1:2, 2:1-2, 9:2, 12:2.
11 See Josephus, Antiquities 18.64, and Tacitus, Annals 15.44.
12 Lucian of Samosata, The Death of Peregrine, 11-13.
13 Talmud, Sanhedrin 43a.
14 Qur'an 4:157-158. According to Muslim tradition, Allah made Judas Iscariot look like Jesus, so that Judas was crucified in Jesus' place.
15 To associate partners with God is to commit the sin of shirk.
16 Qur'an 61:14.
17 For instance, John Dominic Crossan, of the notoriously anti-Christian "Jesus Seminar," says "That [Jesus] was crucified is as sure as anything historical can ever be" (Jesus: A Revolutionary Biography [San Francisco: HarperCollins, 1991] p. 145).
18 This spirit being is not to be confused with the popular image of a harmless red figure with a pointy tail and a pitchfork!
19 One may wonder why I have not included belief in God among the doctrines necessary for salvation. I'm certainly not denying the necessity of belief in God. However, I do draw a distinction between a necessary doctrine and a necessary and sufficient doctrine. Belief in God is necessary for salvation, but it is not sufficient to produce it. In contrast, the Christian doctrines of confession of the lordship of Christ and belief in his resurrection from the dead are necessary and sufficient. That is, these doctrines are sufficient to guarantee the salvation of the Christian. Yet it is these doctrines that Islam most vehemently opposes.
20 Matthew 24:11.
21 1 Timothy 4:1.
22 Even Islam has had its share of self-proclaimed new prophets. Most notably, Mirza Ghulam Ahmad announced his prophethood towards the end of the 19th Century. He also claimed to be the second coming of Jesus. Millions of people have followed him. However, the vast majority of Muslims consider these "Ahmadiyyas" to be a heretical sect. The Ahmadiyyas, though they profess to be Muslims, aren't even allowed to take the pilgrimage to Mecca. The Ahmadiyya movement is significant in that Ahmadiyyas say that true Islam was corrupted, just as Muslims claim that Christianity was corrupted. Hence, Ahmadiyyas claim that God sent another prophet to restore the true message of God. Muslims reject this, because they don't believe that Islam has been corrupted. They conclude that Mirza Ghulam Ahmad must have been a false prophet. But this is the same reason Christians reject Muhammad. We don't believe that Christianity has been corrupted, so Muhammad must have been a false prophet.


http://isakoran.blogspot.in/2007/09/blog-post_11.html

ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முஹம்மதுவை அல்ல

முஹம்மது இறைத்தூதுவராக வந்தார் என்று இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். அது மட்டுமல்ல, மற்ற வேதங்களில் அவர் வருகைப் பற்றி எழுதப்பட்டுள்ளது என்று அவர்கள் தேடிக்கொண்டும், மாற்று மத வேதங்களில் சில வசனங்கள எடுத்துக்கொண்டு, இந்த வசனம் முஹம்மதுவின் வருகைப் பற்றி சொல்கிறது என்று தவறாக சொல்லிக்கொண்டு வருகின்றனர்.

இப்படி இஸ்லாமியர்கள் சொல்கின்ற வசனங்களில் "பைபிளின் பழைய ஏற்பாட்டின்" ஆபகூக் புத்தகமும் ஒன்று. ஆபகூக் 3:3ம் வசனத்தில் வரும் "பரிசுத்தர் பாரான் வனாந்திரத்திலிருந்து வந்தார்" என்ற வாக்கியம் "முஹம்மதுவை" குறிக்கும் என்று இஸ்லாமியர்கள் சொல்கின்றனர்.

இவர்களின் இந்த வாதம் தவறானது. இந்த வசனம் குறிப்பிடும் நபர் தேவனாவார் . இவர்களின் இந்த வாதம் சரியானதா இல்லையா என்பதை இக்கட்டுரை அலசுகிறது
.
ஆபகூக் 3:3ம் வசனம் குறிப்பிடுவது "தேவன் அல்லது இறைவனைத் தான், முஹம்மதுவை அல்ல" என்பதற்கான காரணங்கள்:
1. பாரான் என்பது மக்கா தான் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். இது தவறான ஆதாரமற்ற வாதம் என்பதை கீழே உள்ள கட்டுரை தெளிவாக விளக்குகிறது. இக்கட்டுரையை முதலாவது படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.   கட்டுரை-1: பாரான் என்பது மக்கா அல்ல!

2. இஸ்லாமியர்கள் உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது "முஹம்மதுவைத் தான்" என்று சொல்கிறார்கள். இந்த வாதமும் தவறானது என்றும், இஸ்லாமியர்கள் பைபிள் வசனங்களுக்கு புது பொருள் கூறுகிறார்கள் என்றும், உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது "கர்த்தரைத் தான்" முஹம்மதுவை அல்ல என்பதை அறிய கீழ்கண்ட கட்டுரையை படிப்பவர்கள் அறிந்துக்கொள்ளலாம்.
கட்டுரை-2: உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடும் நபர் "கர்த்தர்" முஹம்மது அல்ல!

மேற்கண்ட இரண்டு கட்டுரைகள், இந்த தற்போதைய கட்டுரைக்கு அடித்தளமாக அமையும். எனவே அவைகளை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இப்போது ஆபகூக் 3:3ம் வசன விளக்கத்திற்குச் செல்வோம்.
இது தான் இஸ்லாம் மற்றும் தமிழ் முஸ்லீம் தளம் முன்வைத்த வாதம்:
பரிசுத்தர் பாரான் மலையிலிருந்து வந்தார் என்று ஆபகூக் கூறுகின்றது. முஹம்மத் அவர்கள் பாரான் மலையில் இருந்த போதுதான் கேப்ரீல் (ஜிப்ரீல்) என்ற தேவதூதர் முஹம்மதிடம் வந்து வேத வசனங்களை வெளிபடுத்தினார். கேப்ரீலை இஸ்லாம் பல்வேறு இடங்களில் 'அவர் பரிசுத்தர்' என்று சொல்லிக் காட்டுகின்றது.
Source


1. அல்லாஹ் அனுப்பியது "தோரா, ஜபூர், இஞ்ஜில்" மட்டும் தான் என்று இஸ்லாமியர்கள் நம்புகின்றனர், பின் ஏன் ஆபகூக் லிருந்து ஆதாரம்?
இஸ்லாமியர்களின் நம்பிக்கைப் படி மோசேவிற்கு "தோராவையும் (ஆதியாகமம் – உபாகமம்)", தாவீதுக்கு "ஜபூர் - சங்கீதம் " என்ற வேதத்தையும், இயேசுவிற்கு "இஞ்ஜில்" என்ற வேதத்தையும் அல்லாஹ் இறக்கினான். இவைகள் தவிர பைபிளில் உள்ள மற்ற தீர்க்கதரிசன புத்தகங்கள் அல்லாஹ் இறக்கவில்லை என்றும், இன்னும் புதிய ஏற்பாட்டில் சுவிசேஷங்களுக்கு அடுத்துள்ள புத்தகங்கள் வேதங்கள் அல்ல என்று நம்புகின்றனர்[1].
இஸ்லாமியர்கள் ஒன்றை கவனிக்கவேண்டும், அதாவது "ஆபகூக்" என்ற புத்தகம் அல்லாஹ் இறக்கியதாக நம்பும் "தோரா, ஜபூர் மற்றும் இஞ்ஜில்" போன்ற மூன்று வேதங்களிலும் வராது. என் கேள்வி:
1. இஸ்லாமியர்கள் பைபிளில் உள்ள மற்றும் அல்லாஹ் இறக்கியதாகச் சொல்லும் தோரா(ஆதியாகமம் -உபாகமம்), ஜபூர் ( சங்கீதம் ) மற்றும் இஞ்ஜில் வேதத்தையே நம்புவதில்லை. ஆனால், அல்லாஹ் இறக்கியதாகச் சொல்லாத "ஆபகூக்" என்ற பைபிள் புத்தகத்திலிருந்து மட்டும் ஏன் அவர்கள் ஆதாரத்தை முன்வைக்கின்றனர்?

2. பைபிளின் "ஆபகூக்" புத்தகத்தைப் பற்றி,  ஏதாவது வசனத்தை அல்லாஹ் குர்-ஆனில் சொல்லியுள்ளாரா?

3. ஆபகூக் 3:3ம் வசனத்தை நம்பும் இஸ்லாமியர்கள், இந்த ஆபகூக் புத்தகம் முழுவதும் திருத்தப்படவில்லை என்று நம்புகிறார்களா?

4. தீர்க்கதரிசி ஆபகூக் போல பைபிளின் மற்ற தீர்க்கதரிசிகளாகிய ஏசாயா, எரேமிய, தானியேல் இன்னும் பல தீர்க்கதரிசிகள் புத்தகங்களையும் இஸ்லாமியகள் நம்புகிறார்கள் என்று நாம் நினைக்கலாமா?
2. ஆபகூக் புத்தகத்தின் சாராம்சம் (சாராம்சத்திற்கு வெளியே பொருள் தேடும் இஸ்லாமியர்கள்):
ஆபகூக் புத்தகம் முழுவதும் ஒரு முறை படித்துப்பாருங்கள். மக்களின் துன்மார்க்க வாழ்க்கையை பார்த்து தேவனிடம் முறையிடுகிறார்(ஆபகூக் அதிகாரங்கள் 1, 2) மற்றும் மூன்றாம் அதிகாரத்தில் தேவனின் அதிசய செயலை நினைத்து அவர் மீது சார்ந்துக்கொள்கிறார். தேவன் மூலமாக வரும் இரட்சிப்பை நினைத்து துதிபாடுகிறார்.


ஆபகூக் 1:2-4
2. கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன். நீர் கேளாமலிருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் இரட்சியாமலிருக்கிறீரே!

3. நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவினையைப் பார்க்கப்பண்ணுகிறதென்ன? கொள்ளையும் கொடுமையும் எனக்கு எதிரே நிற்கிறது; வழக்கையும் வாதையும் எழுப்புகிறவர்கள் உண்டு.

4. ஆகையால் நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லாமற்போகிறது; துன்மார்க்கன் நீதிமானை வளைந்துகொள்கிறான்; ஆதலால் நியாயம் புரட்டப்படுகிறது


எதிர்காலத்தில் ஒரு தீர்க்கதரிசி வருவார் என்று ஆபகூக் 3:3ல் சொல்லப்படவில்லை. தேவன் கடந்த காலத்தில் செய்த அற்புதத்தைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் சொல்வது போல, முஹம்மது பாரானிலிருந்து வருவார் என்று ஆபகூக் சொல்லவில்லை, இது இஸ்லாமியர்களின் கற்பனையே தவிர வேறில்லை.

ஆபகூக் புத்தகத்தில் உள்ள மூன்று அதிகாரங்களை படிக்கும்படி இஸ்லாமியர்களை கேட்டுக்கொள்கிறேன். அப்போது தான் சில இஸ்லாமிய அறிஞர்களின் இந்த வாதம் தவறானது என்பது புரியும்.
3. ஆபகூக் 3ம் அதிகாரம் ஒரு பாடலே (விண்ணப்பம்) ஒழிய, முகமது வருகையின் தீர்க்கதரிசனமல்ல?
ஆபகூக 3:1ம் வசனம் தெளிவாகச் சொல்கிறது, இந்த மூன்றாம் அதிகாரம் " ஒரு பாடலாகிய விண்ணப்பம்" என்று, இஸ்லாமியர்களின் கூற்றுப்படி இது ஒரு "எதிர் காலத்தில் நடக்க இருக்கின்ற தீர்க்கதரிசன வார்த்தைகள் அல்ல ". பார்க்க ஆபகூக் 3:1

ஆபகூக் 3:1 ஆபகூக் தீர்க்கதரிசி சிகாயோனில் பாடின விண்ணப்பம்.
A prayer of Habakkuk the prophet upon Shigionoth


இந்த பாடல் ஒரு வகையான வாத்தியத்தில் (அல்லது) ஒரு குறிப்பிட்ட இராகத்தில்  பாடின பாடலாகும். அந்த வாத்தியம் அல்லது இராகம் சிகாயோனில் [2] என்று குறிப்பிடப்படுகிறது. இந்த வாத்தியத்தில் தாவீது இராஜா கூட ஒரு சங்கீதம் பாடினார், இதை ஏழாம் சங்கீதம் தலைப்பு பகுதியில் காணலாம். இந்த வார்த்தை ஏழாம் சங்கீதத்தில் ஒருமையில் கொடுக்கப்பட்டுள்ளது. (Note: Shiggaion = singular, Shigionoth = Plural)

சங்கீதம் 7ன் தலைப்பு பகுதி: பென்யமீனியனாகிய கூஷ் என்பவனுடைய வார்த்தைகளினிமித்தம் தாவீது கர்த்தரை நோக்கி பாடின சீகாயோன் என்னும் சங்கீதம்.

A shiggaion of David, which he sang of the LORD concerning Cush, a Benjamite. (NIV Study Bible)


இந்த ஆபகூக் மூன்றாம் அதிகாரத்தின் முதல் சில வசனங்கள்(13 வசனங்கள்)   ஒரு பாடல் தான் என்பதற்கு இன்னும் ஒரு ஆதாரம், ஆபகூக் 13ம் & 3:3 ம்   வசனத்தின் கடைசியில் உள்ள "சேலா" என்ற வார்த்தையை பார்த்தால் புரியும் .
ஆபகூக் 3:13 உமது ஜனத்தின் இரட்சிப்புக்காகவும் நீர் அபிஷேகம் பண்ணுவித்தவனின் இரட்சிப்புக்காவுமே நீர் புறப்பட்டீர். கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, துஷ்டனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்; சேலா.


இந்த "சேலா " என்ற வார்த்தை ஜபூர் என்ற சங்கீத புத்தகத்தில் 39 சங்கீதங்களுக்கு வருகிறது (சங்கீதம் 3,4,7,9,20, 140,143 etc…). இது பாடல்களுக்கு, அல்லது இசைக்கு சம்மந்தப்பட்ட ஒரு வார்த்தையாகும். இதனை சங்கீதத்தை(Psalm)  படிப்பவர்கள் கவனிக்கலாம்.

இந்த விவரங்கள் நமக்கு தெளிவாகச் சொல்கிறன, இந்த ஆபகூக் 3ம் அதிகாரம் ஒரு விண்ணப்பம் அல்லது பாடலாகிய விண்ணப்பம் என்று. எனவே, ஆபகூக் 3:3ம் வசனம் முகமதுவினுடைய வருகையின் தீர்க்கதரிசனம் அல்ல என்பது தெளிவு.
4. ஆபகூக் 3:3 வசன "பரிசுத்தர்" என்பது தேவதூதரோ அல்லது மனிதனோ அல்ல, அவர் "கர்த்தர்"
இந்த வசனத்தில் ஆபகூக் தேவனைப் பற்றியும் அவருடைய மகிமையைப் பற்றியும் பேசுகிறார். இந்த இடத்தில் பரிசுத்தர் என்பது முகமதுவோ அல்லது இது தான் இஸ்லாம் தள கட்டுரை சொல்வது போல தேவதூதரோ அல்ல, இந்த வசனத்தில் சொல்லப்பட்ட பரிசுத்தர் "தேவன்" ஆவார் .

பாரான் என்பது மக்கா அல்ல. இது சீனாய் தீபகர்பத்தில் உள்ள பாரான் வனாந்திரமாகும். (
பாரான் என்பது மக்கா அல்ல என்ற கட்டுரையை இங்கு படிக்கவும் .)

ஆபகூக் 3:3 தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் பர்வதத்திலிருந்தும் வந்தார்; சேலா . அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது.


இந்த இடத்தில் ஆபகூக் கடந்த கால(Past not Future) நிகழ்ச்சியை குறிப்பிடுகிறாரே தவிர, தன் காலத்திலிருந்து 1200 ஆண்டுகளுக்கு பிறகு வரும் முஹம்மதுவை குறித்து அவர் குறிப்பிடவில்லை. (ஆபகூக் காலம் கி.மு. 6ம் நூற்றாண்டாகும்). "வந்தார்" என்ற வார்த்தை கடந்த காலத்தை குறிக்கும், "வருவார்" என்று ஆபகூக் கூறவில்லை என்பதை கவனிக்கவும்.
இந்த  ஆபகூக் பலமுறை கர்த்தர், தேவன், தேவரீர் என்று அடிக்கடி சொல்வதை காணலாம். அதாவது இவர் தேவனிடம் தொடர்ந்து விண்ணப்பம் செய்கிறதை பார்க்கலாம்.

பரிசுத்தர் என்ற வார்த்தையை தேவன் தன்னை குறிப்பிட பலமுறை பயன்படுத்தியுள்ளார். சில நேரங்களில் பக்தர்கள் "தேவன்" என்ற வார்த்தையும், "பரிசுத்தர்" என்ற வார்த்தையையும் சேர்த்தே (அடுத்ததடுத்து) பயன்படுத்தியுள்ளனர்.


ஆபகூக் 1:12-13      12 கர்த்தாவே, நீர் பூர்வகாலமுதல் என் தேவனும் என் பரிசுத்தருமானவர் அல்லவா ? நாங்கள் சாவதில்லை, கர்த்தாவே, நியாயத்தீர்ப்பு செய்ய அவனை வைத்தீர்; கன்மலையே, தண்டனை செய்ய அவனை நியமித்தீர்.13 தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக்கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மெளனமாயிருக்கிறதென்ன?
12 O LORD, are you not from everlasting?  My God, my Holy One, we will not die.  O LORD, you have appointed them to execute judgment;  O Rock, you have ordained them to punish.
     13 Your eyes are too pure to look on evil;  you cannot tolerate wrong. Why then do you tolerate the treacherous?  Why are you silent while the wicked
     swallow up those more righteous than themselves?

எசேக்கியேல்: 39:7 இவ்விதமாய் நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின் நடுவிலே என் பரிசுத்த நாமத்தைத் தெரிவிப்பேன்; என் பரிசுத்த நாமத்தை இனிப் பரிசுத்தக்குலைச்சலாக்கவொட்டேன்; அதினால் நான் இஸ்ரவேலில் பரிசுத்தராகிய கர்த்தர் என்று புறஜாதிகள் அறிந்துகொள்வார்கள்.
Ezekiel 39: 7 " 'I will make known my holy name among my people Israel. I will no longer let my holy name be profaned, and the nations will know that I the LORD am the Holy One in Israel.

ஓசியா: 11:9 என் உக்கிர கோபத்தின்படியே செய்யமாட்டேன்; எப்பிராயீமை அழிக்கும்படித் திரும்பமாட்டேன்; ஏனென்றால் நான் மனுஷனல்ல, தேவனாயிருக்கிறேன்; நான் உன் நடுவிலுள்ள பரிசுத்தர்; ஆகையால் பட்டணத்துக்கு விரோதமாக வரேன்.

Hosea 11:9 I will not carry out my fierce anger, nor will I turn and devastate Ephraim. For I am God, and not man— the Holy One among you. I will not come in wrath


இந்த மேலே சொல்லப்பட்ட வசனங்களைக் கண்டும் நீங்கள் இன்னும் "பரிசுத்தர்" என்று ஆபகூக் 3:3ல் சொல்லப்பட்டது "தேவன்" தான் என்பதை நம்பவில்லையானால், நான் இன்னும் எத்தனை வசனங்களை ஆதாரமாக காட்டினாலும் நம்பமாட்டீர்கள். 5. " தேவன்" என்பதை "முஹம்மது" என்று சொல்வது இஸ்லாமியர்களுக்கு "ஷிர்க்" ஆகும்

இஸ்லாமியர்கள் தொடர்ந்து செய்துக்கொண்டு வரும் ஒரு பெரிய தவறு என்னவென்றால், பைபிளில் எங்கெல்லாம் (தங்களுக்கு சாதகமான வசனங்களில்) "தேவன்" அல்லது "இறைவன்" என்று வருகிறதோ, அங்கெல்லாம் அந்த வார்த்தை குறிப்பிடுவது "முஹம்மது" தான் என்று சொல்லிவருகிறார்கள்.

இது இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி "ஷிர்க் - SHIRK" ஆகும். அதாவது, அல்லாவிற்கு இணையாக மனிதனை ஒப்பிடுவது. இதை இவர்கள் தெரிந்து செய்கிறார்களோ தெரியாமல் செய்கிறார்களோ எனக்கு தெரியாது. முஹம்மதுவை நபி என்று நிருபிக்க வேறு வழி ஏதாவது தேடினால் அவர்களுக்கு நல்லது, இல்லையென்றால் இறைவனுக்கு இணைவைத்த பாவத்திற்கு ஆளாகவேண்டி வரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
6. பாரான் மலை அரேபியாவின் "ஹிரா" மலை அல்ல.
பாரான் என்பது மக்கா அல்ல என்பதை நாம் முன்பே பார்த்தோம். இங்கு இது தான் இஸ்லாம் தள நண்பர் எழுதுகிறார், பாரான் மலை என்பது "ஹிரா" மலையாகும் என்று. இதற்கு எந்த ஆதாரமும் காட்டமுடியாது.

இஸ்லாமியர்களின் வாதம் தவறானது என்று இது வரை நாம் பார்த்த விவரங்கள் மிகத்தெளிவாகச் சொல்கிறது. இவர்களுடைய வாதம் வெறும் ஆதாரமில்லாத வாதமே ஒழிய வேறில்லை.
7. ஆபகூக் இந்த வாதத்தைப் பற்றி இதர இஸ்லாமிய அறிஞர்கள்:
டாக்டர் ஜமால் பதாவி: இவர் இந்த வசனத்தைப் பற்றி பேசும் போது ஒருபடி மேலே சென்று, பைபிளின் பொருள் மாறும்படி சில வார்த்தைகளை அடைப்பிற்குள் எழுதி தன் வாதத்தை முன்வைக்கிறார்
.


Dr. Jamal Badawi also claimed that, "Habakkuk 3:3 speaks of God (God's help) coming from Te'man (an Oasis North of Medina according to J. Hasting's Dictionary of the Bible), and the holy one (coming) from Paran. That holy one who under persecution migrated from Paran (Mecca) to be received enthusiastically in Medina was none but prophet Muhammad." Source :   http://bibleandquran.com/quran-word-of-god8.htm

தேவன் என்று வரும் வார்த்தையை தேவனின் உதவி அதாவது God's Help என்று அடைப்பு குறிக்குள் போட்டுவிட்டு இவர் பொருள் கூறுகிறார். "God's Help" என்று எழுதினால் தான், முஹம்மதுவிற்கு உதவியாக இருக்கும் என்று இவர் எழுதுகிறார்.

இன்னொரு இஸ்லாமிய சகோதரர் தேவன் என்ற வார்த்தைக்கு பக்கத்தில் His Guidance என்று எழுதி வசனத்தை வெளியிடுகிறார். உண்மையில் அந்த வசனத்தில் தேவன் என்ற வார்த்தை உள்ளதே தவிர "தேவனின் உதவி" அல்லது God's Guidance என்று இல்லை. இவைகள் எல்லாம் இஸ்லாமிய அறிஞர்களின் திருவிளையாடல்கள். Source:  
http://www.answering-islam.de/Main/Muhammad/Foretold/mish1a.html  


முடிவுரை:
முடிவாக முஹம்மது பற்றி ஒரு வசனமும் பைபிளில் இல்லை. அப்படி இருந்து இருந்தால், அதை கிறிஸ்தவர்கள் தான் முதலாவது நம்பியிருப்பார்கள். மாற்று மத வேதங்களை எப்படியெல்லாம் திருத்திச் சொல்லவேண்டுமோ அப்படியெல்லாம் இஸ்லாமிய அறிஞர்களில் சிலர் திருத்திச் சொல்கிறார்கள். இதனால் ஒரு பிரயோஜனமும் இருக்காது.

இயேசுவிற்கு அடுத்து இன்னொருவர் வரவேண்டிய அவசியமே இல்லை. வேண்டுமானால், கள்ள தீர்க்கதரிசிகள் வருவார்கள், பல பொய்யைச் சொல்வார்கள், ஏன் பல அற்புதங்களையும் செய்வார்கள் என்று பைபிள் சொல்கிறது. இயேசு தான் வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார் என்பதை இஸ்லாமிய அன்பர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஜெபத்துடன் முடிக்கிறேன்.



[1] இஸ்லாமியர்கள் பைபிளிலுள்ள எந்த புத்தகத்தையும் அல்லாஹ்வின் வேதம் என்று நம்புவதில்லை, அல்லாஹ்வே அவைகளை இறக்கினான் என்று குர்-ஆனில் சொல்லியிருந்தாலும். தோரா, ஜபூர், இஞ்ஜில் கூட திருத்தப்பட்டது என்று சொல்லிவருகிறார்கள், பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனாலும், இவர்களுக்கு முஹம்மதுவை நபி என்று காட்ட (மக்களை குழப்ப) பைபிள் வசனங்கள் வேண்டும்.

[2] Q: In Hab 3:1, what is a shigionoth?

A: It is either a musical instrument, or possibly a style of music. We do not have any more details of the instrument today. It appears to be the plural form of Shiggaion, which Psalm 7 mentions. Source : 
http://www.muslimhope.com/BibleAnswers/hab.htm   


Source :http://isakoran.blogspot.in/2007/09/33.html

Thursday, December 3, 2015

டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் யோவான் 1:1

டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் யோவான் 1:1

"The Word was God"


டாக்டர் ஜாகீர் நாயக் அவர்களும் கிரேக்க மொழியும்:

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு இஸ்லாமிய அறிஞர் ஆவார். உலகமனைத்திலும் சென்று பல இஸ்லாமிய சொற்பொழிவுகள் தருகிறார். மாற்று மத அன்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தனக்கென்று உள்ள பானியில் பதில் தருகிறார்.

[ சில வாரங்களுக்கு முன்பு ஒரு முறை நான் தொலைக்காட்சியில் அவருடைய சொற்பொழிவைக் கேட்டேன். அதில் ஒரு கிறிஸ்தவர் கேட்கும் கேள்விக்கு அவர் பதில் தருகிறார்.

அந்த கிறிஸ்தவர் கேட்ட கேள்வி: புதிய ஏற்பாட்டில் யோவான் சுவிசேஷம் 1:1-12 , வசனங்கள் இயேசு "இறைவன்" என்பதை காட்டுகிறது", இதைப் பற்றி உம் கருத்து என்ன? என்று டாக்டர் ஜாகிர் நாயக்கிடம் கேட்டார். அதற்கு ஜாகிர் நாயக் அவர்கள் பதில் கொடுத்தார்கள். பதில் கொடுக்கும் போது கிரேக்க மொழியில் உள்ள மூல வார்த்தைகளைப் பற்றி விவரித்தார்கள். டாக்டர் நாயக் அவர்கள் சொல்லும் செய்திகள் அல்லது புதிய ஏற்பாட்டு யோவான் சுவிசேஷ கிரேக்க வார்த்தைகள் உண்மையாக இருக்குமா என்ற சந்தேகத்தில் இணையத்தில் தேடினேன், பதில் கிடைத்தது படியுங்கள்]

அதற்கு ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த பதில் கீழே உள்ளது.


The New testament is written in Greek. The first time God occurs in the quotation is "Hotheos " which literally means "the God" i.e. "And the Word was with God". But the second time when the word "God" appears in the quotation, the Greek word used is "Tontheos", which means "a god" i.e. "and the word was with god." In Hebrew there is nothing like Capital 'G' and small 'g' like in the English language. Thus Hotheos is 'the God' with capital 'G' and Tontheos is 'a god' with small 'g'.

அவர் சொல்வதின் சுருக்கம் இது தான்:
யோவான் 1:1 ல் தேவன் – God என்ற வார்த்தை இரண்டுமுறை வருகிறது. முதல் முறை "தேவன்" என்ற வார்த்தை வரும் போது, அதன் கிரேக்க வார்த்தை " Hotheos " என்பதாகும். இதன் பொருள் "the God" என்பதாகும். (i.e. And the Word was with God)

இதே வசனத்தில் இரண்டாவது முறை தேவன் - God என்று வருகிறது, அதன் கிரேக்க வார்த்தை "Tontheos" என்பதாகும். இதன் பொருள் "a god" என்பதாகும். ( i.e. "and the word was god.")
இவர் கருத்துப் படி :
Hotheos என்றால் "the God" என்று பொருள் :
Capital "G"

Tontheos
என்றால் "a god" என்று பொருள் :
Small "g"
இதனால், அவர் முடிவு செய்கிறார், "வார்த்தயாகிய" இயேசு தேவன் (The God) இல்லை. அவர் a god ஆவார். அதாவது இயேசு தேவனுக்கு ஈடாகமாட்டார். அவர் இறைவன் இல்லை.

இப்போது டாக்டர் நாயக் அவர்களின் வாதங்களில் உள்ள உண்மையை பார்க்கலாம்: உண்மையில் அவர் சொல்கிறபடி அந்த இரண்டு வார்த்தைகளும் அவர் சொல்வது போல வருவதில்லை. மட்டுமல்ல ஒரு புதிய வார்த்தையை Ton Theos (இல்லாத வார்த்தையை) கண்டுபிடித்துள்ளார்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

1. கிரேக்க மொழியில் வசனம் யோவான் 1:1:

 John 1:1 in Greek


Source : Greek New Testament : Greek John 1:1  and  http://www.answering-islam.org/Green/deedat/john1.gif

டாக்டர் நாயக் அவர்களின் வாதம் :

The first time God occurs in the quotation is "Hotheos" which literally means "the God" i.e. "And the Word was with God".


ஈஸா குர்-ஆன் மறுப்பு:

டாக்டர் நாயக் அவர்கள் சொல்வது போல, யோவான் 1:1ல் முதல் முதலில் "God" என்பதின் கிரேக்க வார்த்தை "Hotheos" இல்லை, அது "TON THEON" என்பதாகும். கீழுள்ள படத்தைப் பார்க்கவும்.

God என்ற வார்த்தை முதல் முறை இடம் பெறுவது:


Greek John 1:1 God 1st occurrence
டாக்டர் நாயக் அவர்களின் வாதம் :

But the second time when the word "God" appears in the quotation, the Greek word used is " Tontheos", which means "a god" i.e. "and the word was with god."

ஈஸா குர்-ஆன் மறுப்பு:

இரண்டாம் முறை "Tontheos" என்ற வார்த்தை வருகிறது என்றுச் சொல்கிறார். ஆனால், உண்மையில் இரண்டாம் முறை வரும் வார்த்தை " THEOS " என்பதாகும். டாக்டர் நாயக் சொன்னது மறுபடியும் தவறு.

God என்ற வார்த்தை இரண்டாம் முறை இடம் பெறுவது:


Greek John 1:1 2nd occurence

டாக்டர் நாயக் அவர்களின் வாதம் :

In Hebrew there is nothing like Capital 'G' and small 'g' like in the English language.


ஈஸா குர்-ஆன் மறுப்பு:
புதிய ஏற்பாடு கிரேக்கத்தில் எழுதப்பட்டது என்று முதலில் சொல்லிவிட்டு, கடைசியில் "எபிரேய" மொழியில் Capital "G" மற்றும் Small "g" இல்லை என்றுச் சொல்கிறார்.

யோவான் சுவிசேஷம் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. எபிரேய மொழியில் எழுதப்படவில்லை. இது தெரிந்திருந்தும் ஏன் இவர் இப்படி சொல்கிறார்? கேட்பவர்கள் குழம்பவேண்டும் என்பதற்காகவா? மேற்கொண்டு கேள்விகள் கேட்கக்கூடாது என்பதற்காகவா? கிரேக்க மொழியைப் பற்றிப் பேசும் போது, எபிரேய மொழி எங்கேயிருந்து வந்தது?
"Ton theos" என்ற வார்த்தை கிரேக்க மொழியில் தவறான இலக்கணமாகும்:
கிரேக்க மொழியில் Theon மற்றும் Theos என்ற வார்த்தைகள் இரண்டும் " தேவன்" என்பதையே குறிக்கும். 
"Theon" என்ற வார்த்தைக்கு முன் "Ton" என்ற வார்த்தை வரலாமே ஒழிய, "Theos" என்ற வார்த்தைக்கு முன்பாக "Ton" என்ற வார்த்தை வரக்கூடாது.

1) In 'ton theos' he mixes 'ton' (the accusative case of the article) with 'theos' (the nominative of the noun) which is an impossible construction in Greek.

Source: answering-islam.orghttp://answering-islam.org.uk/Responses/Deedat/greek.html
உலகமகா இஸ்லாமிய பேச்சாளர் "டாக்டர் நாயக் அவர்கள்" :
உலக இஸ்லாமியர்களுக்கு "ஒரு மாதிரி – Role Model" ஜாகிர் நாயக் ஆவார். அப்படிப்பட்டவர் மேடைகளில் பேசுவதற்கு முன்பாக, எழுதுவதற்கு முன்பாக தான் என்ன சொல்லப்போகிறோம், அதன் பொருள் என்ன? என்பதை முன்கூட்டியே கற்றுக்கொண்டு தானே பேசவேண்டும்?


1) இவர் கிரேக்க புதிய ஏற்பாடு யோவான் சுவிசேஷத்தைப் பார்த்தாரா? இல்லையா?

2) தனக்கு கிரேக்க மொழிப் பற்றி தெரியவில்லையானால், தெரிந்தவர்களிடம் கேட்கலாம் அல்லது அதைப் பற்றியுள்ள புத்தகங்களை படிக்கலாம்? அதை விட்டுவிட்டு இல்லாத வார்த்தைகளை இருப்பதாகச் சொல்வது ஒரு அறிஞருக்கு தகாது?

3) பைபிளின் ஒரு வசனத்தை சொல்வதற்கு முன்பாக, அந்த வசனத்தை ஒரு முறை, ஒரே ஒரு முறை கிரேக்க மொழியில் கண்களால் பார்த்து இருக்கலாம்? அதையும் செய்யவில்லை, நம் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள்.

4) அல்லது எல்லாம் தெரிந்திருந்தும், எவ்வளவு நாள் வண்டி ஓடுகிறதோ ஓடட்டும், என்று வேண்டுமென்றே இப்படி வசனங்களை மாற்றிச் சொல்கிறாரா இவர்? ஆமாம், இது தான் சரியான காரணமாக இருக்கும். இப்படிப் பட்ட மேதாவிக்கு இது தெரியாமல் இருக்காது.
இவர் எங்கேயிருந்து எடுத்து இதைச் சொல்கிறார்: அஹமத் தீதத் தான் இதற்கு மூலம்

அஹமத் தீதத் என்பவரும் டாக்டர் நாயக் போன்று ஒரு புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர். டாக்டர் நாயக் அவர்களின் பெரும்பான்மையான கருத்துக்கள், அஹமத் தீதத் அவர்களின் சொற்பொழிவுகளிலிருந்தும், புத்தகங்களிலிருந்தும் எடுக்கப்பட்டவை. இப்போது அவர் இல்லை, அவர் காலமாகிவிட்டார்.

அஹமத் தீதத் எழுதிய "The Choices" மற்றும் "Christ In Islam" என்ற புத்தகத்திலும், அவர் கீழ் கண்டவாறு எழுதுகிறார்.

அவர் ஒரு கிறிஸ்தவ போதகரிடம் உரையாடடியதாக எழுதுகிறார்:


I asked the Reverend whether he knew Greek? "Yes", he said, He had studied Greek for five years before qualifications. I asked him what the Greek word was for "God" the first time it occurs in the translation - "and the Word was with God"? He kept staring, but did not answer. So I said, the word was HOTHEOS, which literally means "THE GOD" ... which in turn is rendered - God. "Now tell me, what is the Greek word for God in the second occurrence in your quotation - "and the Word was God"? The Reverend still kept silent ... the game was up. I said the word was TONTHEOS, which means a god. (Ahmed Deedat, The Choice, Brunswick, Australia: Islamic Service House, p. 192; also published in, Christ in Islam, Durban, RSA: IPCI, 1993, p. 40)

Source: answering-islam.org :
http://www.answering-islam.org/Green/deedat.htm   and    http://www.jamaat.net/cis/ChristInIslam.html


மொத்தத்தில் இருவரும் ( திரு அஹமத் தீதத் மற்றும் டாக்டர் நாயக்) இப்படி தவறான செய்தியை பரப்பிக்கொண்டு (வந்தார்கள்)வருகிறார்கள். கிறிஸ்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

நான் தொலைக்காட்சியில் பார்த்தபோது, டாக்டர் நாயக் அவர்கள் இந்த பதிலை அளித்துவிட்டபிறகு, கேள்வி கேட்ட கிறிஸ்தவர் மறுபடியும் எழுந்து, நீங்கள் வசனம் 1க்கு மட்டும் தான் பதில் அளித்தீர்கள், நான் கேட்டது முதல் 12 வசனங்கள் வரை, அதற்கு பதில் அளியுங்கள் என்றுக் கேட்டார்.
உடனே, டாக்டர் நாயக் அவர்கள் அந்த கிறிஸ்தவரிடம் கேட்டார்கள்:
முதலில் நான் சொன்ன விவரங்கள் படி கிரேக்க மொழியில், யோவான் 1:1ல் முதலில் வரும் "தேவன்" என்ற வார்த்தை "Hotheos" தானே என்று கேட்டார்.
கேள்வி கேட்ட கிறிஸ்தவர் சிறிதும் யோசிக்காமல், "ஆமாம்" என்றபடி தலையாட்டினார்.
இரண்டாம் முறை "தேவன்" என்ற வார்த்தை "Tontheos" தானே என்று கேட்டார்.
மறுபடியும் "ஆமாம்" என்று ஒப்புக்கொண்டார், அந்த கிறிஸ்தவர்.
எனக்கு தூக்கிவாரி போட்டது.
ஒரு நபர் (டாக் நாயக் அவர்கள்) ஒரு மேடையில் ஆதாரம் இல்லாமல், கிரேக்க மொழியில் பைபிளில் முதலில் ஒரு வார்த்தை இப்படி வருகிறது, இரண்டாவது இப்படி வருகிறது என்றுச் சொன்னால்? அதை சரி பார்க்காமல், அவர் சொல்வது சரியா தவறா என்று சோதித்தறியாமல் எப்படி இந்த கிறிஸ்தவர் "ஆமாம்" என்று ஒப்புக்கொண்டார் என்பதே? தமிழ் அல்லது ஆங்கில பைபிளிலிருந்து சொன்னால், உடனே சரி பார்க்க முடியும்.
அதாவது,

1. ஆமாம் என்று ஒப்புக்கொண்ட நபருக்கு கிரேக்க மொழி, முக்கியமாக யோவான் வசனம் 1:1ஐப் பற்றி தெரியாமல் இருக்கவேண்டும்? அல்லது.

2. தனக்கு தெரியாவிட்டாலும், "டாக்டர் ஜாகிர் நாயக்" அவர்கள் "தவறாகச் சொல்வார்களா நிச்சயமாகச் சொல்லமாட்டார்கள்" என்ற நம்பிக்கையா?
கிறிஸ்தவர்கள் முக்கியமாக கவனிக்கவேண்டியது? மேடையில் ஒரு வாதம் நடக்குமானால், அதில் சொல்லப்படும் விவரங்களை சரிபார்க்க நேரம் இருக்காது, அது சில நேரங்களில் முடியாது கூட.

இப்படிப் பட்ட நேரங்களில் என்ன செய்யவேண்டும்?


1. முதலாவது ஆதாரம் என்ன என்றுக் கேட்கவேண்டும்?

2. எனக்கு கிரேக்க மொழி தெரியாது, முக்கியமாக யோவான் 1:1ல் முதலாவது என்ன வருகிறது, இரண்டாவது என்ன வருகிறது என்று தெரியாது, நான் சரி பார்க்கும் வரை, நீங்கள் சொல்வது சரியானது என்று எப்படிச் சொல்லமுடியும்? ஆதாரம் இருந்தால், கிரேக்க புதிய ஏற்பாடு உம்மிடம் இருந்தால், காட்டுங்கள் அப்போது ஏற்றுக்கொள்கிறேன் என்றுச் சொல்லவேண்டும்.
அதை விட்டுவிட்டு, நமக்கு தெரியாத விஷயத்தில், அவர் மீது உள்ள நம்பிக்கையின் பேரில், ஒரு பெரும் கூட்டம் கூடியுள்ள சபையில் பொய்க்கு துணைபோவது, நமக்கு தகாது.

புறாக்களைப் போல கபடற்றவர்களாக இருங்கள், சர்ப்பத்தைப் போல வினாவுள்ளவர்களாக இருங்கள்.

முடிவுரை : சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், கண்களால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீரவிசாரிப்பதே மெய். அது யாராக இருந்தாலும் சரி, என்ன சொன்னாலும் சரி, என்னையும் இதில் சேர்த்துதான் நான் இதைச் சொல்கிறேன்..



மேலும் விவரங்களுக்கு:

[1]
டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்புக் கட்டுரைகள்
[2] Misquotations and Misinformation propagated by Zakir Naik
[3] அஹமத் தீதத் அவர்களுக்கு மறுப்புக் கட்டுரைகள்
[4] அஹமத் தீதத்தும் கிரேக்க மொழியும்
[5] Another Choice: The Teaching of Ahmed Deedat - By Samuel Green
[6]
Rebuttals to Muslim Polemics against Christianity
[7]
புதிய ஏற்பாடு,கிரேக்க மொழியில் படிக்க
[8] கிரேக்க புதிய ஏற்பாட்டில் தேடுவதற்கு

 Source: http://isakoran.blogspot.in/2007/08/11.html

Wednesday, December 2, 2015

தோலுரிக்கப்பட்ட டாக்டர் ஜாகிர் நாயக்கின் பொய்கள்

Deception as a means for support: Dr. Naik's lies uncovered

By Charles Koenig

ஆதரவைப் பெறுவதற்காக ஏமாற்றுதல் :  

தோலுரிக்கப்பட்ட டாக்டர் ஜாகிர் நாயக்கின் பொய்கள்

ஆசிரியர்: சார்லஸ் கோய்னிக்

தமிழாக்கம்: உமர்


[தமிழ் மொழிபெயர்ப்புக் குறிப்பு: சரியாக புரிந்துக்கொள்வதற்காக சில ஆங்கில வார்த்தைகள் அப்படி அடைப்புக்குள் கொடுத்துள்ளேன். மேலும் விவரம் தேவைப்படுமானால், இக்கட்டுரையை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்.]



இணையத்தில் உள்ள ஜாகிர் நாயக்கின் சில வீடியோக்களைப் பார்த்தபிறகு, அவர் சொல்லும் விவரங்களில் எவ்வளவு உண்மையிருக்கும், மற்றும் எவ்வளவு மிகைப்படுத்தி சொல்லுதல் இருக்கும் என்று சிந்திக்கலானேன். டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் மத்தியிலும், மற்றும் உலக முஸ்லீம்களின் மத்தியிலும் அதிக மதிப்பு, ஆதரவு (support) இருப்பதை நான் அறிவேன். இவர் தொடர்ந்து பல சொற்பொழிவுகளையும், மற்றும் இஸ்லாமியர்கள், இஸ்லாமை விமர்சிப்பவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார் என்பதையும் அறிவேன். நான் கீழ்கண்ட ஆய்வில், ஜாகிர் நாயக்கின் பொதுவான பதில்களுக்கு[9] ஒரு சவால் விடுகிறேன். மற்றும் அவர் முன்வைக்கும் ஒவ்வொரு ஆதாரத்தின், புள்ளிவிவரங்களின் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவருவேன். நான் முன்வைக்கும் ஆதாரங்கள், அரசாங்க ஆய்வுகளிலிருந்தும், உண்மையுள்ளதாக கருதப்படும் இணைய தளங்களிலிருந்தும் இருக்கும். அடுத்த முறை ஜாகிர் நாயக்கை நீங்கள் திரையில் பார்க்கும் போது, அவரால் முட்டாளாக்கப்பட வேண்டாம் என்று உங்களை எச்சரித்து, உட்சாகப்படுத்துகிறேன். அவர் ஒரு டாக்டர் என்பதால், அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஆதாரமாக எடுத்துக்கொள்ளவேண்டாம், அதற்கு பதிலாக, அவர் முன்வைக்கும் செய்திகளின் மீது கேள்வி எழுப்பி, உங்கள் சொந்த அறிவினால் ஆராய்ந்து முடிவு செய்யுங்கள். ஜாகிர் நாயக்கிடம் கேட்கப்படும் பல கேள்விகளில் ஒரு கேள்வியைப் பற்றி நாம் இந்த கட்டுரையில் சிந்திக்கப்போகிறோம். அந்தக் கேள்வி இஸ்லாமில் உள்ள பலதார திருமணத்தைப் பற்றியது, மற்றும் அவர் கொடுத்த பதிலை இக்கட்டுரையின் முடிவில் உள்ள 9வது எண்ணின் தொடுப்பிலும், மற்றும் இணைய தளத்தில் பல வீடியோக்களிலும் காணலாம்.


முதலில் இக்கட்டுரையில் வரும் சில முக்கியமான வார்த்தைகளின் பொருளை (அர்த்தத்தை) பார்க்கலாம்.
Merriam Webster dictionary என்ற அகராதியின் படி:


1. Polygamy- marriage in which a spouse of either sex may have more than one mate at the same time ( ஒருவர், ஆணோ அல்லது பெண்ணோ ஒரே சமயத்தில் ஒன்றிற்கும் அதிகமான துணையை பெற்றிருத்தல் - பலதார திருமணம்


2. Polygyny- the state or practice of having more than one wife or female mate at a time (ஒருவன் ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகளை உடையவனாக இருத்தல்.)


3. Polyandry- the state or practice of having more than one husband or male mate at one time (ஒரு பெண் ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட கணவன்களை உடையவளாக இருத்தல்.)

Why is Polygyny allowed in Islam?
ஏன் இஸ்லாமில் ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்ய (Polygyny) அனுமதிக்கப்பட்டுள்ளது?

ஆண்களின் பலதார மணத்தைப் பற்றிய இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் போது, டாக்டர் ஜாகிர் நாயக் முதலில் கீழ்கண்ட வாதத்தை முன்வைக்கிறார்.


"Qur'an is the only religious book, on the face of this earth, that contains the phrase 'marry only one'. There is no other religious book that instructs men to have only one wife. In none of the other religious scriptures, whether it be the Vedas, the Ramayana, the Mahabharata, the Geeta…."

"உலகத்திலேயே "ஒரே ஒரு திருமணம் செய்துக்கொள்" என்ற வார்த்தைகள் உள்ள ஒரே மதப் புத்தகம் "குர்ஆன்" தான். மனிதனைப் பார்த்து "நீ ஒரு மனைவியை மட்டும் உடையவனாக இரு" என்று எந்த மதப் புத்தகங்களிலும் இல்லை. அது எந்த மத வேதங்களாக இருந்தாலும் சரி, இராமாயணமாக, மஹாபாரதமாக மற்றும் பகவத் கீதையாக இருந்தாலும், அவைகளில் இப்படி சொல்லப்படவில்லை...."


இது ஒரு மிகப்பெரிய பொய். ஒன்று, அவர் மற்ற மதங்களின் வேதங்களை சரியாக முழுவதுமாக படிக்காமல் இருக்கவேண்டும், அல்லது வேண்டுமென்றே குர்ஆனை புகழ்வதற்காக தனக்கு தெரிந்த விவரத்தையும் மூடிமறைத்து இருக்கவேண்டும். வெளிப்படையாகச் சொல்கிறேன், டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு இவைகள் தெரியாது என்றுச் சொல்லி, இதற்கு நாம் அனுமதி கொடுக்கமுடியாது அல்லது ஏற்றுக்கொள்ளமுடியாது. ஏனென்றால், அவர் ஒரு மருத்துவ படிப்பை முடித்தவர், மற்றும் நிறைய மத சொற்பொழிவுகள் ஆற்றிய அனுபவம் உடையவர், அது மட்டுமல்ல அதிகமாக விவாதத்தில் ஈடுபட்டவரும் (Debate) அவர் ஒரு நூலாசிரியரும் (Author) கூட. உலகமனைத்திலும் அவர் பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார், மற்றும் இஸ்லாமியர்களுக்கு வழிகாட்டியாகவும், மற்றும் ஒரு எடுத்துக்காட்டாகவும் (Role Model) இருக்கிறார். எனவே, கட்டாயமாக, இப்படிப்பட்ட சிறப்பை உடைய அவரிடம் ஒரு சிறு தவறையும் நாம் அனுமதிக்கமுடியாது.
"ஒரே மனைவியை உடையவனாக இரு" என்ற கட்டளை குர்-ஆனில் மட்டுமல்ல, மற்ற வேதங்களிலும் சொல்லப்பட்டுள்ளது என்பதை முதலாவது நான் முன்வைக்க விரும்புகிறேன்.
இராமாயணத்தில் ஒரு சம்பவம் வருகிறது (இந்துத்துவ இதிகாச காவியங்களில் இராமாயணமும் ஒன்று, மற்றொன்று மகாபாரதமாகும்)[1]. இந்த சம்பவத்தில், சூர்பனகை  என்னும் ஒரு "இராட்சஷி" ஸ்ரீஇராமனிடம் சென்று, தன்னை திருமணம் செய்துக்கொள்ளும் படி கேட்கிறாள். அதற்கு ஸ்ரீஇராமன், தான் ஒரு "ஏக பத்தினி விரதம்" (வாழ்நாளெல்லாம் ஒரே மனைவியை உடையவராக இருப்பதாக விரதம்) இருப்பதாகச் சொல்லி, மறுத்துவிடுகிறார். இந்த விரதம், ஒரு சிறந்த நற்பண்புள்ள விரதமாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட விரதம் பூண்டு ஒரே மனைவியை உடையவராக இருக்கும் மனிதர்கள், அதிக மரியாதைக்குரியவராக அவர்கள் சமகாலத்தவர்களால் கருதப்படுகின்றனர். இந்துத்துவத்திலே இது ஒரு பழமைவாய்ந்த கோட்பாடாகும், இன்னும் இந்து காவியங்களை கூர்ந்து படிப்போமேயானால், இப்படிப்பட்ட அனேக எடுத்துக்காட்டுக்களை நாம் காணமுடியும்.

கிறிஸ்தவ மார்க்கத்திலும், நாம் "ஏக பத்தினி விரதம் அல்லது ஒரே மனைவியை உடையவனாக இருக்கவேண்டும்" என்பதைப் பற்றி அனேக வெளிப்படையான (Explicit) எடுத்துக்காட்டுகளை காணமுடியும். இயேசுக் கிறிஸ்துவின் சீடர்களாகிய அப்போஸ்தலர்கள் "ஒரே மனைவியை உடையவர்களாக இருக்கவேண்டும்" என்பதைப் பற்றி அதிகமாக புகழ்ந்து பேசியும், மற்றும் கட்டளையிட்டும் சென்றுள்ளனர். இதைப் பற்றி பல மறைமுக (Implicit) எடுத்துக்காட்டுகளையும் நாம் பைபிளில் காணமுடியும், அவைகள் புரிந்துக்கொள்வதற்கு சிறிது கடினம்(ambiguity) என்பதால் நான் அதை இங்கு முன்வைப்பதில்லை.
இதைப் பற்றி, பைபிளின் "ஏக பத்தினி விரதம்" பற்றிய சில வெளிப்படையான வசனங்கள்:



1 கொரிந்தியர்: 7:1-4
1. நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறதென்னவென்றால், ஸ்திரீயைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது.2. ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவனவன் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்.3. புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள்.4. மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.[8]


*மேலே உள்ள வசனம் "ஒரே ஒரு மனைவியை மட்டும் உடையவர்களாக இருக்கவேண்டும்" என்பதை மிகத் தெளிவாகச் சொல்கிறது.

1 தீமோத்தேயு: 3:2
3:2 ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும். [8]

*கண்காணியானவன் (அல்லது பிஷப்) என்பவர் இறைவனின் வழியில் வாழ்வதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டாகும். அதாவது, ஒரு தலைவன் "தான் ஒரே ஒரு மனைவியை உடையவனாக வாழ்வது", எல்லாருக்கும்(அவர் கீழ் உள்ளவர்களுக்கு) ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமையும்.


1 தீமோத்தேயு: 3:12
3:12 மேலும், உதவிக்காரரானவர்கள் ஒரே மனைவியையுடைய புருஷருமாய், தங்கள் பிள்ளைகளையும் சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்கவேண்டும். [8]


*உதவிக்காரர் என்பவர் ஆலயத்தில் போதகரின் கீழ் வேலை செய்யும் அதிகாரியாவார், இருந்தாலும், அவரின் வாழ்க்கை எல்லாரும் பின்பற்றக்கூடிய அளவிற்கு ஒரு எடுத்துக்காட்டாக(Role Model) இருக்கவேண்டும்.



மத்தேயு: 19:4-6
19:4 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக, ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், 5. இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? 6. இப்படி இருக்கிறபடியால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால் தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார். [8]


* மத்தேயு இங்கு திருமண உறவு முறையில் உருவாகும் இரு உள்ளங்கள் அல்லது உடல்களின் ஐக்கியத்தைப் பற்றி தெளிவாக எழுதுகிறார்.


மத்தேயு: 19:9
19:9 ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால், அவன் விபசாரம் பண்ணுகிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். [8]


*இந்த வசனத்தை, நாம் மேலே பார்த்த மத்தேயு 19:4-6ம் வசனத்தோடு சேர்த்து பார்க்கும்போது , ஒருவன் ஒரே ஒரு மனைவியை மட்டும் திருமணம் செய்யவேண்டும் என்பதை புரிந்துக்கொள்ளலாம்.
டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள், "ஆண்கள் பலதார மண கோட்பாட்டை" நியாயப்படுத்த தன் சொற்பொழிவை கேட்பவர்களை (Audience) தவறான வழியில்(Misguide) கொண்டுச்செல்கிறார். அவருடைய வாதத்தில் அவர் அதிகாரபூர்வமாகச் சொல்லும் செய்திகளில் உள்ள லாஜிக்(Logic) மற்றும் காரணங்களும்(Reasoning) மன்னிக்கமுடியாதவை. அவருடைய ஒரே நோக்கம், இஸ்லாம் கோட்பாடுகள், பழக்கங்கள் எவ்வளவு பின்தங்கி இருந்தாலும் சரி, அவைகளை நியாயப்படுத்துதல் ஆகும். இப்படி தன் மார்க்கத்தைப் பற்றி அதிகமாக சொற்பொழிவு செய்யும் இவர் வேண்டுமென்றே இப்படி பொய் சொல்கிறாரா (purposely lying)? அல்லது உண்மை தெரியாமல், அறியாமையினால் இப்படி பேசுகிறாரா என்பதை, நீங்களே முடிவு செய்யுங்கள்.


அடுத்ததாக, டாக்டர் ஜாகிர் நாயக் கீழ்கண்ட வாதத்தை முன்வைக்கிறார்:

"Average life span of females is more than that of males. By nature males and females are born in approximately the same ratio. A female child has more immunity than a male child. A female child can fight the germs and diseases better than the male child. For this reason, during the pediatric age itself there are more deaths among males as compared to the female…. India has more male population than female due to female feticide and infanticide. If this evil practice is stopped, then India too will have more females as compared to males."

" சாதாரணமாக பெண்கள் ஆண்களை விட அதிக நாட்கள் வாழ்கிறார்கள். ஆண்களின், மற்றும் பெண்களின் பிறப்பு விகிதம் பொதுவாக ஒரே அளவில் இருக்கும். பிறக்கும் குழந்தைகளில், பெண் குழந்தைகளுக்கு அதிக நோய் எதிர்ப்புச் சக்தி, ஆண் குழந்தைகளை விட அதிகமாக இருக்கும். ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண்குழந்தையை விட அதிகமாக போராடி கிருமிகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் தப்பித்துக்கொள்ளும். இதன் காரணமாக, குழந்தை பருவத்தில் மரிக்கும் குழந்தைகளில் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கிறது. … இந்தியாவில், பெண் "கருக்கலைப்பு" மற்றும் "சிசுக் கொலையின்" (female feticide and infanticide ) காரணத்தால், பெண் ஜனத்தொகையை விட ஆண் ஜனத்தொகை அதிகமாக உள்ளது. இந்த தீய பழக்கம் நிறுத்தப்படுமானால், இந்தியாவிலும் பெண்களின் எண்ணிக்கை, ஆண்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கும்."



மறுபடியும், டாக்டர் நாயக் தன் வாதத்திற்கு ஆதரவாக ஒரு தவறான காரணத்தைச் சொல்கிறார். அவர் வேண்டுமென்றே, மக்களை முட்டாள்களாக்க உண்மை விவரங்களைத் திருத்திச்சொல்கிறார். சாதாரணமாக, மக்கள் இவருடைய வாதங்களில் உள்ள உண்மையை சரிபார்த்து சோதித்தறிவதில்லை, எனவே, இவர் தன் பொய்களிலிருந்தும், திருத்திச் சொல்வதிலிருந்தும் தப்பிவிடுகிறார். இந்த தற்போதைய வாதத்தில் டாக்டர் நாயக் சொல்கிறார், குழந்தை பருவத்திலும், மற்றும் மற்ற வயதின் பிரிவிலும்(சிறுவன், இளைஞன், நடுவயது, முதிய வயது), ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருப்பார்கள். இவருடைய இந்த வாதத்தின் (லாஜிக்கின்) படி, எல்லா காலத்திலும் பெண்கள் ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் இருப்பதால், ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒரு ஆண் திருமணம் செய்ய கிடைக்காமல் போகிறது. எனவே, இதன் அடிப்படையில் பார்த்தால், ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்வதே சரியான வழிமுறையாகும். நாம் இப்போது, சில நாடுகளில் உள்ள மக்கள் மற்றும் அவர்களின் வயது வாரியான புள்ளிவிவரங்களைக் காண்போம்.


Table1.1

Now let's look at the world sex ratio[3]:
Sex ratio:
at birth: 1.07 male(s)/female
under 15 years: 1.064 male(s)/female
15-64 years: 1.024 male(s)/female
65 years and over: 0.781 male(s)/female
total population in the world: 1.014 male(s)/female (2007 est.)

பட்டியல் 1.1
இப்போது உலக ஆண் பெண் விகிதாச்சாரத்தைக் காண்போம்.[3]

ஆண் பெண் விகிதாச்சாரம்
பிறப்பில்: 1.07 ஆண்(கள்)/பெண்
15 வயதிற்குட்பட்டவர்கள் : 1.064 ஆண்(கள்)/பெண்
வயது 15-64 வரை: 1.024 ஆண்(கள்)/பெண்
வயது 65 அதற்கு அதிகம் உள்ளவர்கள்: 0.781 ஆண்(கள்)/பெண்
மொத்த உலக ஜனத்தொகை: 1.014 ஆண்(கள்)/பெண் (2007 கணக்கெடுப்பு)


பெண்களை விட ஆண்கள் அதிகமாக இருப்பது, இந்தியாவில் மட்டுமல்ல என்பதை மேலே பார்த்த விவரங்கள் தெளிவாக நிருபிக்கின்றன. "பெண்கள் சிசுக்கொலை" நடக்காத(பழக்கமில்லாத) நாடுகளிலும் இதே நிலை தான் நிலவுகிறது. பெரும்பான்மையான நாடுகளில், ஆண்களை விட பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் பிரிவில் தான். டாக்டர் நாயக் அவர்களின் வாதம் என்னவென்றால், இஸ்லாம் நடைமுறைக்கு(Practical) ஏற்றதும், மற்றும் காரணகாரியங்கள் (Logic) இருப்பதினால் மக்கள் இஸ்லாமை பின்பற்றவேண்டும் என்பதே. ஆனால், இந்த நடைமுறையில் உள்ள இவ்வளவு பெரிய முரண்பாட்டை அவர் எடுத்துக்கொள்ளமாட்டார். நாம் கூர்ந்து கவனித்தால், துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் உள்ள, மொத்த ஆண்களின் எண்ணிக்கை, மொத்த பெண்களை விட அதிக அளவில் உள்ளது. இதனால், இவர் சொல்லும் இந்த "ஆண்கள் பல தார மணம்" என்ற திருமண முறைக்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது. இந்த நாடுகள் என்ன செய்ய வேண்டும்? இந்த நாடுகளில் "ஆண்கள் பலதார மணத்தை - polygyny " முழுவதுமாக இரத்து செய்து, "பெண்கள் பல தார முறையை - polyandry " கொண்டுவந்தால் எப்படி இருக்கும்?
பெண்கள் திருமணம் ஆகாமல் அதிக நாட்கள் இருப்பதைப் பற்றி அல்லா அதிக கவலையுள்ளவராக இருந்தால், ஆண்கள் குழந்தை பருவத்திலேயே வியாதிகளால் மரிக்காத படிக்கு ஏன் அவர்களை அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களாக படைக்கவில்லை? டாக்டர் நாயக் மக்களை இஸ்லாமிற்கு மாற்றுவதற்கு அதிக சிரத்தை எடுத்துக்கொள்கிறார். அதனாலேயே அவர், இஸ்லாம் பழக்கங்கள் மூலமாக அதிக நன்மைகள் கிடைக்கும் என்பதை மக்களுக்கு புரியவைக்க, அவர் ஏமாற்றுக் கலையில் நிபுனத்துவம் பெற்றுள்ளார். ஆனால், உண்மை வேறுவிதமாக உள்ளது. டாக்டர் நாயக் சொல்கிறார், இந்தியாவில் ஆண்களின் எண்ணிக்கை பெண்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது, காரணம் "பெண் குழந்தை கருக்கலைப்பு" மற்றும் "பெண் சிசுக்கொலை" என்றுச் சொல்கிறார். மற்றும் அவர் சொல்கிறார், பெண் சிசுக்கொலைகள் நிறுத்தப்படுமானால், இந்தியாவிலும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகமாக இருக்கும். இந்த பெண் சிசுக்கொலை தான் பெண்கள் குறைவாக இருப்பதற்கு காரணம் என்றால், இந்த பெண் சிசுக்கொலை பழக்கம் இல்லாத எல்லா நாடுகளிளும் பெண்களின் சதவிகிதம் ஆண்களை விட அதிகமாக இருக்கவேண்டும். ஆனால், உண்மையில் அப்படி எல்லா நாடுகளிலும் பெண்கள் ஆண்களை விட அதிக எண்ணிக்கையில் இருப்பதில்லை. டாக்டர் நாயக்கின் வாதங்கள் பொய்யானவை என்று இவைகள் நிருபிக்கின்றன. இஸ்லாமின் பழக்கங்களை (கோட்பாடுகளை) நியாயப்படுத்த இவர் தனக்கு தெரிந்த எல்லா தந்திரங்களையும் செய்கிறார்.


அடுத்ததாக டாக்டர் நாயக் சொல்கிறார்:

"In the USA, women outnumber men by 7.8 million. New York alone has one million more females as compared to the number of males, and of the male population of New York one-third are gays i.e. sodomites. The U.S.A as a whole has more than twenty-five million gays. This means that these people do not wish to marry women."

" அமெரிக்காவில் மட்டும் பெண்கள் ஆண்களை விட 7.8 மில்லியன் கூடுதலாக உள்ளனர். நியு யார்க்கில் (New York) மட்டும் பெண்கள் ஆண்களை விட ஒரு மில்லியன் அதிகமாக உள்ளனர். மற்றும் நியு யார்க்கில் உள்ள ஆண்கள் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பாகம் ஆண்கள் "(Gays , i.e. sodomites) " ஆவார்கள். அமெரிக்க நாடு மொத்தத்தில் எடுத்துக்கொண்டால், 25 மில்லியனுக்கு அதிகமாக "கேஸ் (Gays)" இருக்கிறார்கள். இதன் பொருள் என்னவென்றால், இவர்கள் பெண்களை திருமணம் செய்துக்கொள்ளமாட்டார்கள். "


உண்மையைச் சொன்னால், டாக்டர் நாயக்கிற்கு "ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள்(Gays)" என்பதின் அர்த்தமே தெரியவில்லை. பெரும்பான்மையான உலக நாடுகளில் "Gays" என்றால், " homosexual " முறையில் ஈடுபடும் ஆண், பெண் இருபாலாரையும் குறிக்கும். அவருடைய சொற்பொழிவில் அவர், ஆண் கேஸ் (Men Gays) ஐ பற்றியே சொல்கிறார், ஆனால், ஆண்களை திருமணம் செய்ய விரும்பாத பெண் கேஸ் (Women Gays) ஐ பற்றி அவர் பேசுவதில்லை. அவருக்கு, லெஸ்பியன் (lesbians) என்னும் "ஆண்களை திருமணம் செய்யவிரும்பாத பெண்களைப் பற்றித்" தெரியாதா? அல்லது தன் மதத்திற்காக வேண்டுமென்றே இப்படிப்பட்டவர்கள் (lesbians) இல்லை என்றுச் சொல்கிறாரா?


டாக்டர் நாயக் கூற்றுப்படி அமெரிக்காவில் 25 மில்லியனுக்கு மேலாக ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாகவும்,, இது ஒரு வெட்கப்படவேண்டிய விஷயம் என்றுச் சொல்கிறார். எப்போதும் போல, அவர் தன் வலிமையான இந்த வாதத்திற்கு, ஆதாரத்தை (source of information ) கொடுக்கவில்லை. உண்மையில் அமெரிக்காவில் gays, lesbians and bisexuals போன்றவர்கள் 8.8 மில்லியன் இருக்கிறார்கள்[4]. நாம் தோராயமாகச் சொல்லலாம், இதில் பாதி பேர் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பார்கள். நாம் கண்டிப்பாகச் சொல்லலாம், இவர்களில் சரி பாதிபேர் ஆண்களாக இருப்பார்கள், அப்படியானால் 4.4 மில்லியன் ஆண் கேஸ் (Men Gay) இருப்பதாகச் சொல்லலாம். டாக்டர் ஜாகிர் நாயக் சொன்ன அமெரிக்காவின் Men Gay களின் எண்ணிக்கை, உண்மையான Men Gayகளின் எண்ணிக்கையை விட 6 மடங்கு அதிகமாக உள்ளது. இந்த விவரங்கள் டாக்டர் நாயக் எப்படிப்பட்டவர் என்பதைக் காட்டுகிறது. அவர் எவ்வளவு துள்ளியமாக உண்மை விவரங்களை மற்றவர்கள் சந்தேகப்படாத அளவிற்கு திருத்திச் சொல்கிறார் என்பதைக் காட்டுகிறது.

சரி, இப்போது அவரின் மற்றோரு வாதமாகிய, அமெரிக்காவின் ஆண்களில் மூன்றில் ஒரு பாகம் நபர்கள் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்பதைப் பற்றி அலசுவோம்.
நியு யார்க்கில், தோராயமாக 592,000 gays, lesbians and bisexuals இருக்கிறார்கள்[4]. இதில் பாதிபேர் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் (around 300,000) இருப்பதாகக் கொள்வோம். டாக்டர் நாயக் சொல்லும் போது, அவர் குறிப்பிடுவது "நியு யார்க் மாநிலமா (New York State)" அல்லது "நியு யார்க் நகரமா (New York City)" என்பதை தெளிவாகச் சொல்லவில்லை. அவர் கொடுத்த விவரங்களின் எண்ணிக்கையில் நியு யார்க் மாநிலத்திற்கும், நகரத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. அவர் சொல்வதின் கருத்து என்னவாக இருக்கும் என்பதை சில எடுத்துக்காட்டுகளின் மூலமாக நான் காட்டுகிறேன்.
அவர் ஒரு வேளை நியு யார்க் மாநிலத்தைப் (New York State) பற்றிச் சொல்லியிருப்பாரானால், (ஜனத்தொகை: 19,254,630: ஆண்கள்: 9,146,748, பெண்கள் 9,829,709 [5]) ஆண்களின் சதவிகிதத்தில் 3.27% Gay ஆண்கள் ஆவார்கள், பெண்கள் ஆண்களை விட 682,961 எண்ணிக்கையில் அதிகமாக இருப்பார்கள், ஆனால், அவர் சொல்வது போல பெண்கள் ஆண்களை விட ஒரு மில்லியன் அதிகம் இல்லை. இந்த விவரங்களோடு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் கணக்கிட்டுச் சொன்ன 33% சதவிகிதம் நியு யார்க் ஆண்கள் Gay என்பதை ஒப்பிட்டுப்பாருங்கள் ( நியு யார்க் மாநிலம் என்றால் 3 மில்லியன் அதிகம், நியு யார்க் நகரம் என்றால் 1.2 மில்லியன் அதிகம்).
ஒரு வேளை, அவர் நியு யார்க் நகரம்(New York City) பற்றிச் சொல்லியிருப்பாரானால், (ஜனத்தொகை : 8,143,197: ஆண்கள்: 3,794,204, பெண்கள்: 4,214,074 [5]) மற்றும் நியு யார்க் மாநிலத்தில் உள்ள அனைத்து Gay ஆண்கள், இந்த நகரத்தில் வாழ்வதாகக் எடுத்துக்கொண்டாலும், அவர்கள் ஆண்களின் சதவிகிதத்தில் 7.9% சதவிகிதம் இருப்பார்கள், பெண்கள் ஆண்களை விட 419,870 அதிகமாக இருப்பார்கள்.

இந்த விவரங்கள், டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் சொல்லும் புள்ளிவிவரங்களில் புள்ளிவிவரங்களில் இருக்கும் மிகப்பெரிய வெற்றிடத்தைக் காட்டுகிறது. அவரின் புள்ளிவிவரங்கள் ( Figures ) நியு யார்க்கில் உண்மையில் இருக்கும் Gay ஆண்களின் எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிகமாக உள்ளது, மற்றும் அவர் Gay ஆண்களை விட, பெண்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்கு கிட்டத்தட்ட அதிகமாகச் சொல்லியுள்ளார். அவருடைய இந்த கற்பனை, அவரின் சொற்பொழியை சரியான பாதையில் கொண்டு செல்கிறதா? அவர் சொல்லும் விவரங்கள் (Facts) அவரின் வாதத்திற்கு ஏற்றார் போல் வளைந்துக்கொள்கிறது, மற்றும் உண்மை விவரங்களை விட்டு தூரமாகச் செல்கிறது, இது ஏற்றுக்கொள்வதற்கு சிறிது தர்மசங்கடமே.
டாக்டர் நாயக் வாதிக்கிறார், அமெரிக்காவில் உள்ள பெண்களின் எண்ணிக்கை, ஆண்களை விட 7.8 மில்லியன் அதிகமாக இருக்கிறார்கள். இந்த விவரத்தை நாம் மிகவும் கூர்மையாக ஆராய்வோம், இதோ கீழே வயது வாரியாக மற்றும் ஆண்பால் பெண்பால் வாரியாக அமெரிக்காவில் உள்ளவர்களின் பட்டியல்.[6]

வயது இடைவெளி: ஆண்கள், பெண்கள்

0-4: 9,810,733, 9,365,065
5-9: 10,523,277, 10,026,228
10-14: 10,520,197, 10,007,875
15-19: 10,391,004, 9,828,886
20-24: 9,687,814, 9,276,187
25-29: 9,798,760, 9,582,576
30-34: 10,321,769, 10,188,619
35-39: 11,318,696, 11,387,968
40-44: 11,129,102, 11,312,761
45-49: 9,889,506, 10,202,898
50-54: 8,607,724, 8,977,824 டாக்டர் நாயக் வேண்டுமென்றே, எந்த வயது இடைவெளியில் உள்ள பெண்கள் ஆண்களைவிட அதிகமாக இருக்கிறார்கள் என்று குறிப்பிடவில்லை. மேடை விவாதத்தில் இது ஒரு முக்கியமான ஏமாற்று (a wily and devious thing ) வேலையாகும், ஏனென்றால், இப்படிப்பட்ட வாய்வழி விவாதங்களில்(verbal debate) சரியான புள்ளிவிவரங்களை கேட்பவர்கள் சரி பார்க்கமாட்டார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் 0-34 வயது இடைவெளியில் உள்ள ஆண்களின் எண்ணிக்கை பெண்களை விட அதிகமாக இருக்கிறது. இதே நிலையை மற்ற நாடுகளிலும் நாம் காணலாம். உதாரணத்திற்கு, டென்மார்க்(DenMark) நாட்டில் ஆண்கள் பெண்களை விட 59 வயது வரை அதிகமாக உள்ளனர்[7]. மற்றும் இங்கிலாந்திலும் (United Kingdon), பிரான்ஸிலும் (France) ஆண்கள்[7] பெண்களை விட 49 வயது வரை அதிகமாக உள்ளனர்[7]. இன்னும் பெரும்பான்மையான இஸ்லாமிய நாடுகளிலும், மொத்த ஆண்களின் ஜனத்தொகை பெண்களின் ஜனத்தொகையை விட அதிகமாக உள்ளது, அப்படி இருந்தும், ஆண்கள் பல தார மணத்தை (polygyny) முஸ்லீம்களே ஆதரிக்கின்றனர் மற்றும் மற்ற நாடுகளையும் இந்த ஆண்கள் பலதாரமண (polygyny) பழக்கத்தில் சேரும் படி அழைக்கின்றனர்.

டாக்டர் நாயக் அவர்களின் வீடியோக்களையும், விவாதங்களையும் நீங்கள் கூர்ந்து கவனிப்பீர்களானால், அவைகளில் தந்திர உத்திகளையும் மற்றும் வார்த்தைகளின் விளையாட்டையும் பயன்படுத்தியுள்ளதை (magician tricks and elocution combined) பார்க்கமுடியும். அவர் எந்த முக்கியமான ஆதாரத்தையும், வலிமையான காரணங்களையும் தன் பேச்சுக்களில் கொடுப்பதில்லை. அதற்கு பதிலாக, மக்களை தன் கணக்கிலடங்கா பொய்களினால் தன் வாதங்களை ஒப்புக்கொள்ளும்படி அவர்கள் உணர்வுகளை தட்டி எழுப்புகிறார்.

அடுத்ததாக, அவர் கீழ்கண்ட வாதத்தை முன் வைக்கிறார்:

"Great Britain has four million more females as compared to males. Germany has five million more females as compared to males. Russia has nine million more females than males. God alone knows how many million more females there are in the whole world as compared to males."

"இங்கிலாந்து (Great Britain) தேசத்தில் பெண்கள் ஆண்களை விட 4 மில்லியன் அதிகமாக உள்ளனர். ஜெர்மனியில் பெண்கள் ஆண்களை விட 5 மில்லியன் அதிகமாக உள்ளனர், ரஷ்ஷியாவின் பெண்கள் ஆண்களை விட 9 மில்லியன் அதிகமாக உள்ளனர். இன்னும் உலகம் அனைத்திலும் எத்தனை மில்லியன் பெண்கள் ஆண்களை விட அதிகமாக இருக்கிறார்கள் என்று இறைவனுக்குத்தான் தெரியும்."
ஜாகிர் நாயக் சொல்கிறார், ஜெர்மனியிலும், இங்கிலாந்திலும் பெண்கள் ஆண்களை விட பல மில்லியன்கள் அதிகமாக இருக்கிறார்களாம். மக்களை தவறாக வழி நடத்துவதற்கு சொல்லப்பட்ட மிகப்பெரிய ஆதாரமில்லாத வாதமாகும். ஜாகிர் நாயக் இன்னும் சில காரணங்களுக்காக, உலகத்தில் உள்ள பெண்கள் ஆண்களை விட அதிகமாக இருக்கிறார்கள் என்று முடிவுசெய்கிறார். மறுபடியும் அவருடைய இந்த வாதம் ஆதாரமற்றது. உண்மையில், 0 - 64 வயது இடைவெளியில், ஆண்கள் பெண்களை விட அதிகமாக இருக்கிறார்கள். இந்த வயது இடைவெளியில் தான் எல்லா மனிதர்களும் திருமணம் செய்யவும், பிள்ளைகளை பெறவும் செய்கிறார்கள். முக்கியமாக ஆண்கள் பெண்கள் சரியான விகிதத்தில் இருக்கிறார்கள். இது மட்டுமல்ல, உலகத்தில் உள்ள மொத்த ஆண்களின் எண்ணிக்கை பெண்களை விட அதிகமாக உள்ளது. நாயக் சொல்கிறார், உலகத்தில் உள்ள பெண்கள் ஆண்களை விட எவ்வளவு அதிகமாக இருக்கிறார்கள் என்று இறைவனுக்குத் தான் தெரியும் என்று. இது ஒரு படித்தவர்கள் சொல்லும் வாதம் அல்ல (unscholarly ). ஒரு வேளை அவர் முயற்சி எடுத்து இருந்தால், உலகத்தில் ஆண்களின் எண்ணிக்கை பெண்களை விட அதிகமாக இருக்கிறார்கள் என்று அவர் கண்டுபிடித்து இருப்பார். இறைவனுக்குத் தெரியும் என்று அவர் சொல்வதிலிருந்து அவருடைய "அறிவு பற்றி கண்ணோட்டம்" புரிகிறது. அவருடைய எல்லா ஆராய்ச்சியும், அவருடைய எல்லா படிப்பும், இஸ்லாமில் பின்பற்றப்படும் நம்பிக்கைகளுக்கு, கோட்பாடுகளுக்குத் தேவையான ஏமாற்று (பொய்யான) வாதங்களை கண்டுபிடிக்கும் வட்டத்திற்குள்ளேயே இருக்கிறது. இஸ்லாமிற்கு விரோதமாக இருக்கும் ஆராய்ச்சியையும், உண்மைச் செய்தியையும், புள்ளிவிவரங்களையும் அவர் முழூவதுமாக விட்டுவிடுகிறார். இஸ்லாமின் குறுகிய புனல் வழியாகவே அவர் உலகத்தைப் பார்க்கிறார்.

சில இஸ்லாமிய நாடுகளில் உள்ள ஆண் பெண் விகிதாச்சாரத்தை கீழே காணலாம்[3]. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் அவருடைய வாதத்தின் அடிப்படையில், இந்த நாடுகளில் "ஆண் பலதார மணத்தை(polygyny)" இரத்து (தடை) செய்துவிட்டு, "பெண் பலதார மணத்தை(polyandry)" சட்டமாக்கவேண்டும்,
நாடுகள் ஆண்/பெண் விகிதாச்சாரம்

Afghanistan 1.049 male(s)/ female
Kuwait 1.526 male(s)/ female
Bangladesh 1.052 male(s)/ female
Malaysia 1.012 male(s)/ female
Egypt 1.017 male(s)/ female
Pakistan 1.045 male(s)/ female
Indonesia 1.001 male(s)/ female
Saudi Arabia 1.196 male(s)/ female
Iran 1.026 male(s)/ female
Syria 1.049 male(s)/ female
Iraq 1.024 male(s)/ female
Turkey 1.019 male(s)/ female
Jordan 1.102 male(s)/ female
UAE 2.19 male(s)/ female
Yemen 1.034 male(s)/ female

என்னை பொருத்தவரையில், ஒரு மனிதன் ஒரு மனைவியை உடையவனாகவோ, அல்லது நான்கு மனைவியை உடையவனாகவோ இருப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. இது அந்த மனிதனையும், அவனை திருமணம் செய்துக்கொள்ளும் பெண்ணின் அனுமதியையும் பொருத்தது. நான் இங்கு சொல்லவரும் விஷயம் என்னவென்றால், "ஆண்கள் பல தார மணத்திற்கு" டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் சொல்லும் காரணம் சரியானதல்ல. அவர் இந்த பழக்கத்தை ஆதரிப்பதற்கு காரணம், இஸ்லாம் இதை அங்கீகரிப்பதால் தான், ஆனால், இது சரியா தவறா என்று அவர் பார்ப்பதில்லை. ஒரு வேளை குர்-ஆன், "ஒரு பெண் நான்கு ஆண்களை திருமணம் செய்துக்கொள்ளலாம்" என்று அனுமதி கொடுத்து இருந்தால், அதையும் இவர் ஆதரித்து இருப்பார். முகமதுவோ அல்லது அல்லாஹ்வோ, ஆண்கள் பல தார மணத்தை ஆதரிப்பதற்கு எந்த ஆதாரத்தையும்(காரணத்தையும்) கொடுக்கவில்லை. அந்தக் கால சமுதாயத்தில் இது ஒரு சாதாரணமானதாக இருந்திருக்கிறது. "பெண்கள் ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில்" இருக்கிறார்கள் என்ற ஒரு காரணத்திற்காகவே, ஆண்கள் பலதார மணத்தை பின்பற்றுங்கள் என்று அல்லாஹ் எப்போதும் சொல்லவில்லை. இது இஸ்லாமியர்களால் தங்களின் இந்த பழக்கம், இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கும், புதிதாக இஸ்லாமுக்கு வரவிருக்கும் நபர்களுக்கும் ஒரு அறிவுப்பூர்வமான பழக்கம் என்றும், இஸ்லாம் கவர்ச்சியானது(Attractive) என்று காட்டுவதற்கும் சொல்லப்படுகிறது. உண்மையில் இந்த ஆண்கள் பலதார மணம் என்பது, இஸ்லாமுக்கு முன்பு "முற்பிதாக்கள் கலாச்சாரத்துக்கு (patriarchal culture)" முக்கியத்தும் இருந்த காலத்தில் வழக்கத்தில் இருந்தது. அக்காலத்தில்,ஆண்கள் அனேக பெண்களோடு உறவு வைத்துக்கொள்வார்கள், ஆனால் பெண்களுக்கு அந்த சுதந்திரம் கொடுக்கப்படவில்லை. பெண்கள் ஆண்களைப் போல ஒன்றிற்கு மேற்பட்ட கணவன்களை(துணைகளை) உடையவர்களாக இருப்பது, ஆண்களுக்கு வெறுப்பை உண்டாக்கக்கூடியதாக இருந்தது. ஏன் இந்த அநீதி? முஸ்லீம்கள் சொல்கிறார்கள, இஸ்லாம் ஆணையும், பெண்ணையும் ஒரே விதமாக நடத்துகிறது என்று, பின் ஏன் இஸ்லாம் ஆண்களுக்கு கொடுத்துள்ள உறவுமுறை சுதந்திரத்தை(sexual freedom), பெண்களுக்கு மறுக்கிறது. ஏதோ தவறு உள்ளது என்பது தெளிவாக புரிகிறது. உண்மையை பார்க்கவேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு உண்மை தெரியும். இந்த மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள், தங்கள் மதத்தால் குருடாக்கப்பட்டுகிறார்கள், எனவே எப்போதும், இஸ்லாமின் சட்டத்திற்கு ஏற்றார்போலவே, காரணங்களை கண்டுபிடிக்கிறார்கள், மட்டுமல்ல, இஸ்லாமிலிருந்து வெளியேறுபவர்களுக்கு "மரணதண்டனை" தண்டனையையும் சரியானது என்று அங்கீகரிக்கிறார்கள்.

Sources:[1]. Sacred Texts
[2]. New Advent Bible
[3]. The World Fact Book
[4]. Same Sex Couples
[5]. Info Please
[6]. CensusScope
[7]. U.S. Census Bureau
[8]. Tamil Christians Unicode Tamil Bible
[9]. Faq on Islam, by Dr. Zakir Naik

கட்டுரை முற்றிற்று


டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் கட்டுரைகளுக்கு மறுப்பை இங்கே காணலாம்.
1. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு பதில் at answering-islam.org
2. இந்த கட்டுரைக்கு கிறிஸ்தவ கண்ணோட்டத்தில் பதில் - 2000 ஆண்டு ஜனத்தொகை கணக்கெடுப்பின் படி.
3. Rebuttals to Zakir Naik ( WikiIslam.org )
4. More on Zakir Naik - This Page contains Text which was deleted by Wikipedia
 
Source : http://isakoran.blogspot.in/2007/08/blog-post.html